Sunday, July 27, 2008

இலவசம்! இலவசம்!

43 ஆயிரம் இலவச டி.வி. விநியோகம். மு.க.ஸ்டாலின் பெருமிதம். இலவசமாக டி.வி பெற்ற ஒவ்வொரு தமிழனும், தமிழச்சியும், ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருப்பார்கள். டி. வி. பார்க்கும் ஒவ்வொரு வினாடியும் அள்ளிக்கொடுத்த அரசியல்வாதிகளை மனதார வாழ்த்திக்கொண்டிருப்பார்கள். கொடுத்தவரும், கொண்டவரும், தன்மானத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். இலவசமாக பொருள்களைக் கூச்சமில்லாமல் பெற்றுக்கொள்வதில் உருவாகும் தன்மான நிலை, தனி மனித ஆக்கத்தில் வந்து விடுமா? அரசுப்பணத்தை, தன் தனி மனித உழைப்பில் உருவாக்கிய பணம் போல் கருதி அள்ளிக்கொடுப்பதில் வரும் ஆனந்தம் வேறு எதிலாவது கிடைக்குமா?
வாழ்க இலவசப்பொருள் ஆசை கொண்ட மனிதர்கள்! வளர்க அரசு சொத்தை அள்ளிக்கொடுக்கும் அரசியல்வாதிகள். யாருக்கும் வெட்கமில்லை!

Thursday, July 24, 2008

கலி யுகம்

சிறு வயதில் என் பக்கத்து வீட்டுப்பாட்டி, வாய்க்கு வாய் சொல்லுவாள்: கலி முத்திடுத்துடான்னு. அப்பல்லாம் எனக்கு அர்த்தம் புரியாது. பாட்டி என்னவோ வுலக மக்கள் பண்ற கெட்ட காரியங்களுக்கெல்லாம் கலி மேல பழி போடரான்னு நான் யோசிப்பேன். வர வர அவளுடைய வார்த்தைகளுக்கு அர்த்தம் தினசரி பேப்பர்களின் முதல் பக்கத்திலேயே புரிய ஆரம்பித்துவிட்டது. எப்படின்னு கேக்கரீங்களா?
௧. அப்பா மகளை வருடம் முழுவதும் கற்பழிப்பு. கேட்டால் 'அல்லா உததிரவு', அவளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிதற்றுகிறான்.
௨. கொலைகாரன்களும், கூட்டம் சேர்த்து கொள்ளை அடிப்பவர்களும் பல பெயர்களில் நாட்டை ஆளக் கிளம்பி விட்டார்கள்.
௩. ஆசிரியன் பள்ளிக்கூடத்தில் பாய் விரித்து, மாணவிகளைத் தற்காலிக மனைவிகளாக்கிக் கொள்கிறான்.
௪. அறிவிற்சிறந்து பட்டம் பல பெற்று, பொய் கணக்கு எழுதி, பணக்காரர்களுக்கு பக்க பலம் போடுகிறான். பசித்துத் தவிப்பவர்களை வயிற்றிலடிக்கிறான்.
௫. எழுத்தாளனும், கவிஞனும், காசுக்காக வார்த்தைகளை விவச்தையற்றுக் கொட்டுகிறான். பணத்தோடு புகழையும், பட்டங்களையும் அள்ளுகிறான்.
௬. பதவி வகிப்பவன், மேல் பதவி மனிதர் முன்னே, மானம் இழந்து மண்டி போடுகிறான்.
ஆமாம்! பாட்டி சொன்னது உண்மை. கலி முத்திடுத்து.

SALUTING SAM

FIELD MARSHALL SAM MANEKSHAW. The hero of our times. A man of great grit and determination. A man who stood by the principles of patriotism, and was thoroughly duty bound. Yet he was simple and a kind hearted person. Every patriotic Indian must remember him always with a high sense of gratefulness. A great man passed away. He was always great. And will remain great in absolute eternity. We salute you SAM with respect and gratitude!

Sunday, July 20, 2008

UNITY IN DIVERSITY

A month ago there were lot of debates in political circles about the rising prices and the difficulties of the common man. A month after these debates, not only the prices of essential commodities have gone up, the values of Members of Parliament have sky rocketed. The convicted and the accused all are being brought out of their jails to make a party win or loose. The hell has really broken loose. Who cares about the rising prices?

The too big religions have come together. Hinduism and communism. The representatives of Hinduism, called the BJP and the representatives of another religion called communism, called the CPI and CPM have come together to topple the government. Real unity in diversity!

Do not be surprised, if Mayawati, becomes the Prime Minister and L.K.Advani, the Deputy Prime Minister and Karat or Yechuri the Finance Minister. May be by then Shibu Soren can join this group in the interest of Jharkhand. He or his son can be made the Defense Minister. As I imagine these probabilities, I am thrilled to guess the future fortunes of our great country called ‘INDIA’.

Long live the “Shameless politicians” and the “Selfless common man”

அன்றைய அரசியல் தலைவர்

வருடம் 1962. எனக்கு வயது எட்டு. என் அக்காவுக்கு வயது பதினாறு . என் அண்ணனுக்கு பதினொன்று. இந்தியா - சீனா போர் ஆரம்பம். நமது இந்தியப் பிரதமர், லால் பஹாதுர் ஷாஸ்த்ரி இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஒவ்வொரு திங்கள்கிழமையும், விரதம் இருக்க வேண்டும், மதிய உணவை விட்டுக்கொடுத்து, நாட்டுக்காக சேமிக்க வேண்டும் என்று. அன்று மாலை, எங்கள் வீட்டில் கூட்டம் துவங்கியது. நான், என் அண்ணன், அக்கா, அம்மா, அப்பா, மற்றும் என் நண்பன் வெங்கடேஷ். கூட்டத்தின் முடிவு, வரும் திங்கள் கிழமையிலிருந்து விரதம் கடைப்பிடிப்பது என்று. போர் முடிந்தது. வருடங்கள் ஓடி மறைந்தன. ஷாஸ்த்ரி தாஷ்கண்ட் சென்றார், காலமானார் - சிலர் இயற்கை மரணம் என்றனர். பலர் அவர் கொல்லப்பட்டார் என்றனர். ஆனால் எங்கள் திங்கள்கிழமை விரதம் தொடர்ந்தது, பல வருடங்களுக்கு. ஒரு வுயர்வான தலைவர், வுயர்வான எண்ணம், மக்கள் நாங்கள் மதித்தோம், மரியாதை செலுத்தினோம். அவர்கள் வார்த்தைகளை பின் பற்றினோம். இன்று அரசியல்வாதிகளில் பத்துக்கு ஒன்பது பழுது. தலைவர் என்ற பெயரில், திரியும் தெருப்பொறுக்கிகள். இனம் கண்டு கொள்வோம் அவர்களை.

தங்கள் அபிப்பிராயம், யோசனைகள்

அன்பு வாசகர்களே,
நீங்கள் என் கதை, கட்டுரை, கவிதைகளைப் படித்த பின்னர், தங்கள் உயர்வான அபிப்பிராயங்களை, யோசனைகளை "கமெண்ட்ஸ்" பகுதியில் எழுதுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன். உங்கள் "கமெண்ட்ஸ்" எனக்கு மேன்மேலும் உற்சாகம் கொடுக்கும். என்னை, என் எழுத்துக்களைப் பண்படுத்திக் கொள்ளவும் உதவும். நன்றி. வாழ்க! வளர்க!

FEED BACK

DEAR READERS,
PLEASE WRITE YOUR COMMENTS, WHICH WILL HELP ME CORRECT, IMPROVE AND WILL BE A SOURCE OF INSPIRATION TO WRITE MORE. THANKS.

TAMIZHANBAN

Sunday, July 13, 2008

POLITICS + CASTE + MONEY

As you turn the pages of post independent Indian history, you will find these three have always gone together. Politics and politicians is all about using the caste for acquiring wealth. Not just wealth. Wealth, a businessman, or an Industrialist will require years of intelligent, and hard labour to acquire. These politicians will get them all in a couple of years.
The people, who with great difficulty, make both the ends meet, will take time to squeeze themselves into big crowds around these political leaders to greet them, cheer them, and applaud them. Shameless the leaders, selfless the people. The game goes on. When they are caught, when their extended family members are caught with huge wealth, they will play the blame game politics.
All these are going on for over 60 years and the average Indian is like a pig keep slushing and enjoying itself in stagnant and dirty water, or a bufallow sitting in the middle of a busy road, absolutely unconcerned about what is happening around.
We are the most unpatriotic people in the world. Long live India, Long live Indians.

Thursday, July 10, 2008

உரையாடல் 5

கல்பனா "அம்மா! அந்தரங்கம்னா என்னம்மா?"
வைதேகி "முதல்ல உறவுன்னா என்னன்னு புரிஞ்சுக்கணும் நீ. சுருக்கமா சொல்லணும்னா, உறவு நெருக்கத்தைக் குறிக்கிறது. நான்கு விதமான உறவுகள், அல்லது நெருக்கங்கள் மனிதர்களிடையே உண்டு.
முதலாவது உடல் நெருக்கம். குழந்தையும் தாயும். குழந்தை, தாயின் கருவின் உள்ளே பிரிக்க முடியாதபடி ஒன்றோடு ஒன்றாக உள்ளது. பிறப்பின் பிறகு, மேலும் குழந்தை வளர, வளர, உடல் நெருக்கம் குறைந்து கொண்டே போகிறது.
இரண்டாவது நெருக்கம் வளர ஆரம்பிக்கிறது. அது, உணர்வுகளின் நெருக்கம். மூன்றாவதாக, எண்ணங்களின் நெருக்கம். நமது மனித வாழ்க்கையில், ஒவ்வொரு உறவிலும், ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டு விதமான உறவுகள் மட்டுமே தலை தூக்கி நிற்கும்.
கணவன், மனைவி உறவு, இவற்றிலெல்லாம் முதன்மையான தலை சிறந்த உறவு. கணவன் - மனைவி என்கின்றன பந்தத்தில் மட்டுமே மூன்று விதமான உறவுகளும், ஒரே நேரத்தில் ஒன்று கூடி, அது ஒரு தெய்வீக உறவாக மலர்கிறது.
இதைத்தான் அந்தரங்கம் என்று சொல்கிறோம். இவ்வுறவின் புனிதத்தன்மையினால் இதை அவ்விருவர் உணர்வுகளுக்கு வெளியே மற்றோர்
காண, கேட்க இடம் தரக்கூடாது."
"அம்மா! அருமையாகச் சொன்னீர்கள். இது புரியாமல், ஏனம்மா, சில தொலைக்காட்சிகளில், கணவனும், மனைவியும் ஆயிரக்கணக்கானோர் பார்க்கும்படியாக, கட்டிக்கொள்கிறார்கள், முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள். அந்தரங்கம் மேடையில் ஏறும்போது, அருவருப்பாக இருக்கிறது. நீங்க என்னம்மா நினைக்கறீங்க?" என்றான் கல்பனா.
"அது ஒன்றும் இல்லை. பேராசை பிசாசு. மனிதனுக்கு பேராசை, அதாவது வெகு சிறிய செயலுக்கு, பெரும் வரவு கிடைத்து விடும் என்கின்றன வியாதி பற்றி விட்டால், அந்தரங்கம் அரங்கேற்றம் ஆகிவிடும். அதுதான் இப்பொழுது எங்கும் பொதுவாக நடந்து கொண்டிருக்கிறது. மனிதன், பேராசையில் தன் மானத்தை இழக்கத் தயாராகி விட்டான்". என்று முடித்தாள் வைதேகி.

Monday, July 7, 2008

உரையாடல் 4

கல்பனா "அப்பா, அப்பா, திருவள்ளுவர் யாருப்பா?"
ஜானகிராமன் "அவர் ஒரு புலவர், மக்களுக்கும், மன்னர்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் நல் வழிகளை, அன்றும், இன்றும், என்றும் காட்டுபவர். நீ தான் அவரோட குறள்கள் நிறைய படித்திருக்கிறாயே".
"ஆமாம்பா, படித்திருக்கிறேன். படித்துக்கொண்டும் இருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் புரியலைப்பா. திருவள்ளுவர் தினம் கொண்டாடுகிறார்கள், அவருக்கு சிலை வைக்கிறார்கள், மேடையில் அவரைப்பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் அவர் சொன்னது எதுவுமே பின் பற்றுவது இல்லையேப்பா" என்று தன் சந்தேகத்தைத் தெரிவித்தாள் கல்பனா.
"புரியலைம்மா" என்றார் ஜானகிராமன்.
"ஆமாம்ப்பா, அவர் கடவுள் வாழ்த்து பாடுகிறார், நம் தலைவர்கள் கடவுள் இல்லை என்கிறார்கள், புலால் உண்கிறார்கள், பல பெண்மணிகளை திருமணம் செய்து கொள்கிறார்கள், குடும்பத்துக்கு வெளியே உறவு வைத்துக்கொள்கிறார்கள். திருவள்ளுவரைத் தமிழ்த் தந்தை என்கிறார்கள். உண்மையிலே அவர் தமிழராப்பா? அவர் தமிழரென்றால், இவர்களெல்லாம் எப்படித் தமிழர்களாக இருக்க முடியும்?"

Sunday, July 6, 2008

உரையாடல் 3

கல்பனா "அப்பா, அரசியல்வாதின்னா யாருப்பா?"

ஜானகிராமன் "அரசியல்வாதின்னா முழு நேரமும் அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டிருப்பவர்கள்"

"புரியலைப்பா!" என்று தன் அறியாமையை வெளிப்படுத்தினாள் கல்பனா.

"அதுதாம்மா, எம்.எல்.ஏ, எம்.பி, மற்றும் பல கட்சித்தலைவர்கள், தலைவர்கள், பொறுப்பாளர்கள் என்று பல பேர்". விளக்கினார் ஜானகிராமன்.

"புரிஞ்சிதுப்பா, அதுல கூட நிறைய பேர் இப்போ ஜெயில்ல இருக்காங்களே. பல வருஷங்களுக்கு முன்னால, சில வருஷங்களுக்கு முன்னால, பண்ணின பல குற்றங்களுக்காக"

"ஆமாம்மா! அதுவும் உண்டு".

"சரிப்பா, அப்பா அரசியல் குற்றவாளிகளின் புகலிடம் என்று சொன்னால் தப்பு இல்லை தானே?

உரையாடல் 2

கல்பனா "அப்பா, அப்பா, காந்திங்கறவர் யாருப்பா?"

ஜானகிராமன் "என்னம்மா, இப்படி கேக்கற? அவர் தான் நமது தேசத்தந்தை, நமக்கெல்லாம் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தவர்."

கல்பனா "அப்பா, சுதந்திரம்னா என்னப்பா?"

ஜானகிராமன் "சுதந்திரம்னா 'Freedom'. நமக்கெல்லாம் விரும்பியதைப் பேசவும், செய்யவும் உண்டான உரிமை."

கல்பனா "சரிப்பா, புரிஞ்சுடுத்து, ரோடுல போகும்போது முரட்டுத்தனமா தப்பான வழில வண்டியை ஓட்டலாம், குப்பைகளை தெருவில கொட்டலாம், வெத்தலை பாக்கு போட்டு எங்க வேணாலும் துப்பலாம், நம்ம வீட்டு நாய்க்குட்டியைத் தெருவில் கூட்டிக்கொண்டு போயி அசிங்கம் பண்ண வைக்கலாம். இதெல்லாம் காந்தி தான் நமக்கு வாங்கிக் கொடுத்தராப்பா?

Friday, July 4, 2008

ஜாதி வழி ஒதுக்கீடு

இலக்கியம், கலை, வணிகம் மற்றும் விஞ்ஞான்னத் துறை பள்ளிகளில், கல்லூரிகளில் ஜாதி வழி ஒதுக்கீடு. சரி. மேல் படிப்பு, மற்றும் சிறப்பு கல்வி நிறுவனங்கள் - ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களை விட்டு விடலாமா? அங்கும் வந்தது ஜாதி வழி ஒதுக்கீடு. ஜாதி வழி ஒதுக்கீட்டில் இடம் பெற்ற மாணவனுக்கு, மதிப்பு வழியில் இடம் பெற்ற ஆசிரியர் மட்டும் படிப்பித்தால் போதுமா? போதவே போதாது. இந்த உயரிய சிந்தனையில் பிறந்தது ஐ.ஐ.டி. யில் ஆசிரியர்களுக்கும் ஜாதி வழி ஒதுக்கீடு.
சட்டதைப்ப் பின் பற்றும் ஒவ்வொரு குடி மகனும், இவ்வழியைத் தன் குடும்ப மற்றும் சமுதாய வாழ்க்கையில் பின் பற்றுவது, அவனது தலையாய கடமை. மேலும், இதன் மூலம் அவன் தூக்கத்தில் ஆழ்ந்து இருக்கும் ஒவ்வொரு மதிப்பு முறையில் முன்னேறும் இந்தியனையும் எழுப்பி சிந்தனையில் ஆழ்த்த வேண்டும். அவன் இந்நாட்டை விட்டு ஓட வழிகள் காட்ட வேண்டும். ஒவ்வொரு மதிப்பு முறை குடி மகனும் நாட்டை விட்டு வெளியேறி விட்டால், பிறகு என்ன ஜாதி முறை ஒதுக்கீடுக்கு அவசியமே இருக்காது. எனவே தங்கள் அனைவருக்கும் என் பணிவார்ந்த வேண்டுகோள். கீழுள்ள சில செயல்களை தவறாமல் செய்ய. நன்றி.
௧. தானும் தன் குடும்ப வுருப்பினர்களும், பத்தில் ஏழு முறை ஜாதி முறை ஒதுக்கீட்டில் பட்டம் பெற்ற மருத்துவரிடமே போக வேண்டும்.
௨. பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும்போது, பத்து ஆசிரியர்களில், ஏழு பேர் ஜாதி முறை ஒதுக்கீட்டில் வந்தவர்களா என்று பார்த்து சேர்க்க வேண்டும்.
௩. அச்சிறுவர், சிறுமியர்களின் பத்து நண்பர்களில், ஏழு பேர் ஜாதி முறை ஒதுக்கீடில் வந்தவர்களாக இருக்க வேண்டும்.
௪. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், பங்கேற்கும் பத்து விழாக்களில், ஏழு ஜாதி முறை ஒதுக்கீட்டில் வந்தவர்களின் இல்லங்களாக இருக்க வேண்டும்.
௫. இந்திய கிரிக்கெட், புட் பால், ஹாக்கி, மற்றும் அனைத்து அணிகளிலும் பத்தில் ஏழு பேர் ஜாதி வழி ஒதுக்கீட்டில் வந்தவர்களாக இருக்க வேண்டும்.
௬. பத்தில் ஏழு படங்களில் கதாநாயகனும், கதாநாயகியும் ஜாதி வழி ஒதுக்கீட்டில் வந்தவர்களாக இருக்க வேண்டும்.
௭. இதே சட்டம் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர் மற்றும் எல்லோருக்கும் பொருந்த வேண்டும். சிரிப்பு நடிக நடிகையர்கள், இச்சட்டத்திலிருந்து ஒதுக்கப் படலாம்.
௮. புகை வண்டியில் போனாலும் சரி, ஆகாய விமானத்தில் போனாலும் சரி, பத்தில் ஏழு முறை, ஓட்டுனர் ஜாதி வழி ஒதுக்கீடு முறையில் வந்தவராக இருக்க வேண்டும்.
இது போன்று மேலும், மேலும் பற்பல எண்ணங்கள். வாழ்க இந்தியா. வளர்க இந்தியன்.

Thursday, July 3, 2008

RESERVATION & QUOTA

Reservation in arts, commerce and science colleges. Is that enough? No not at all. The system must spread to professional courses and schools of excellence. The efforts continued in right earnest. Now there is caste based quota in IIMs and IITs. There is still something missing! How can teachers who themselves studied on merit quota teach students on reserved quota. The idea dawned and there came caste based reservation for Professors in IIT. Great!
As law abiding citizens and inspired Indians we must take a cue from these happenings and follow the same whole heartedly in our personal life too. That is the right way of living as an Indian. I have the following suggestions to make. More people must pour in more suggestions and wake up the merited Indians in deep slumber:
1. If in a year if we and our family members go to doctors/hospitals 10 times, atleaset 7 times we must choose Medical Graduates who got their seats on caste based quota system
2. When our children go to school, we must seek that 7 out of 10 teachers must be from the caste based quota system
3. We must also seek that 7 out of 10 invigilators and 7 out of 10 examiners must be from the caste based quota system
4. In our families 7 out of 10 members must marry girls or boys from the community eligible for reservation
5. When we attend birthday, and other parties we must make ourselves sure that 7 out of 10 times they are in the families of people eligible for caste based reservation
6. We can choose our friends at will, but 7 out of 10 must be from the families eligible for caste based reservation
7. In Indian Cricket Team, Hocky Team, and all other sports activities this reservation policy must be fully implemented
8. 7 out of 10 heroes and 7 out of 10 heroines must be strictly from reserved quota communities. Comedians may be exempted.
9. The above system must apply to lyricists, play back singers, music directors, cinematographers, directors etc., etc.,
10. We must insist that on the titles show these must be mentioned clearly, so that we can be sure when we view those movies.
Many more may be the readers can think of. Post them all and spreads the words of the century worldwide.