Showing posts with label அநீதிகளின் ராஜாங்கம். Show all posts
Showing posts with label அநீதிகளின் ராஜாங்கம். Show all posts

Sunday, July 5, 2009

அப்பு - குப்பு உரையாடல் 4

அப்பு: புரிஞ்சிதலே குப்பு! ஊர்ல திருட்டு நடந்தா, முதல்ல போலிசுக்குத்தான் தெரியும். ஆளும் கட்சி உறுப்பினர் தப்புத் தண்டா பண்ண, முதல்ல எதிர் கட்ச்சிக்குத்தான் தெரியும். இதுதான் ரூலு. இதுதான் நடைமுறை.
குப்பு: அண்ணே! அண்ணே! இவ்ளோ பெரிய விஷயத்த இம்புட்டு சுளுவா புரிய வச்சிட்டிங்களே.
அப்பு: அது சரி, கலைஞர் ராஜாட்ட பதில் சொல்லச் சொல்லி இருக்கிறாரே படிச்சியா? அதுக்கு என்ன அர்த்தம் புரியுதா?
குப்பு: என்ன அர்த்தம் அண்ணே?
அப்பு: மவுனம்னா சம்மதம்னு அர்த்தம். உடனே மறுத்துச்சொல்லுன்னு அர்த்தம். அதுவுமில்லமா, அவுரு அராஜா, அதாவது ஏ.ராஜா அவரோட பேக்ரவுண்டு தெரியுமா? அவுருக்கு முழு சப்போர்ட்டு, கலைஞரோட மூணாவது மனைவி, அவுங்களோட மக கனிமொழி. அவுங்களுக்கு எதிரா தலைவரால ஒண்ணும் பண்ண முடியாது. ராசாவ சப்போர்ட்டு பண்ண வேண்டியது கலைஞரோட கடமை, தல விதி, அதுதான் அவரு நெஞ்சுக்கும் நீதி. புரியுதா குப்பு?
குப்பு: மேற்கொண்டு என்ன நடக்கும்னு
அப்பு: ஒண்ணும் நடக்காது, சிங்கால இந்த பட்ஜெட்டு பரிந்துரை நேரத்துல யாரோடயும் விரோதம் வச்சுக்க முடியாது. இதைத்தவிர, அரசு தரப்புலேருந்து நீதித்துறைக்கு எந்த எந்த விதமான வற்புறுத்தல்கள் வரும் என்பதை கணிக்க முடியாது. சுருக்கமா சொல்லனும்னா, இது வரைக்கு ஜகத்ரக்ஷகன் கேசுல என்ன நடந்ததோ அதுதான், இதிலயும் நடக்கும்.
குப்பு: வாழ்க அநீதி ராஜாக்களின் ராஜாங்கம்.