Showing posts with label இந்தியர் அவர் வாழ்க வளர்க. Show all posts
Showing posts with label இந்தியர் அவர் வாழ்க வளர்க. Show all posts

Monday, October 12, 2009

நம்ம ஊரு வெங்கிக்கு உலக மரியாதை

விஞ்ஞானி வேங்கடராமனுக்கு நோபெல் பரிசு கிடைத்ததுதான். ஒரு நொடி முடியலை. சிதம்பரத்துக்காரர். தமிழனுக்குக் கிடைத்த பரிசு என்று ஒரே கூச்சல். மற்றொருபுறம், குஜராத்தில் தலைப்புச் செய்தி "வடோதரா'ஸ் வெங்கி வின்ஸ் நோபெல்" என்று. நோபெல் கமிட்டீ சொல்லுகிறது "அவர் இங்கிலாந்தை சேர்ந்தவர்" என்று. அவர் வசிப்பதோ அமெரிக்காவில்.



பிள்ளைப் பருவத்தில் பரோடா என்னும் வடோதரா சென்று பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் அங்கு முடித்து பின்னர் பயணித்தார் வெளி நாடுகளுக்கு. சிதம்பரத்திலும், சென்னையிலும் அவருக்கு எவாளவு பெரைத்தேரிந்து இருக்கும் என்று எனக்குத்தெரியாது. ஆனால் வடோதராவில் அவரை அறிந்தவர்களும், அவர் அறிந்து வைத்திருப்பவர்களும் பலர்.


சிதம்பரமோ, வடோதராவோ, இங்கிலாந்தோ, அமெரிக்காவோ, ஒரு இந்திய மண்ணில், இந்திய பெற்றோர்களுக்குப் பிறந்தவர். வாழ்க அவர் புகழ்!