Showing posts with label கடை இழுத்து மூடப்படட்டும். Show all posts
Showing posts with label கடை இழுத்து மூடப்படட்டும். Show all posts

Sunday, July 19, 2009

அப்பு குப்பு உரையாடல் 7

அப்பு: என்ன குப்பு, பிளேனுல எப்பவாவது போயிருக்கியா?

குப்பு: என்னாண்ணே இப்படி கேட்டுட்டீங்க! இலவச வேட்டி சட்டை, இலவச டீவீ, அதுமாதிரி இலவச விமான பயணம்னா கண்டிப்பா போயிருப்பேன். கலைஞர் தான் அது மாதிரி எதுவும் பண்ணல. அண்ணன் ஸ்டாலின் பண்றாரான்னு பாப்போம்.

அப்பு: பன்னாடை! இலவசம் இலவசம்னாகாணாமப்போச்சு தன்மானம்னு அர்த்தம். சரி. அத வுடு. அதெல்லாம் தன்மானம் இருக்குறவங்களுக்கு மட்டும் தான். நம்ம இந்திய நாட்டின் விமானக்கம்பெனி ஏர் இந்தியால என்ன ஆயிட்டிருக்குன்னு தெரியுமா?

குப்பு: கேள்விப்பட்டேன் அண்ணே. வேலை பாக்கறவுங்களுக்கு குடுக்க சம்பளம் இல்லையாம். கம்பெனி திவாலா ஆயிடுச்சா அண்ணே?

அப்பு: உன் கேள்விக்கு பதில் நான் அப்பறம் சொல்றேன். நான் இப்ப சொல்றத கவனமா கேளு. ஒரு கம்பனின்னா அதோட முக்கிய குறிக்கோளா இருக்க வேண்டியது மொத்த வியாபாரம், வளமான வியாபாரம். நல்ல இலாபம். இது இரண்டும் ரொம்ப அவசியம். எந்த ஒரு முதலாளியா இருந்தாலும், வியாபாரம் சின்னதா இருந்தாலும் சரி, பெரிசா இருந்தாலும் சரி, இந்த இரண்டு குறிக்கோள்களையும எந்நாளும் மறக்கக் கூடாது.


வியாபாரம் என்பதும், இலாபம் என்பதும் எந்த ஒரு பிஸிநெஸ்லியும் புனிதமான வார்த்தைகள். வியாபாரம் இல்லைன்னா, முதலாளியும் பிழைக்க முடியாது, தொழிலாளிகளும் பிழைக்க முடியாது. உதாரணத்துக்கு எடுத்துக்கோ, டாட்டா, பிர்லா, மிட்டல், நம்ம ஊரு டி.வி.எஸ். அவுங்க, அதிகமா சம்பாதிக்க சம்பாதிக்க அதிகமான பணம் முதலீடு. அதோட, சேர்ந்து பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு. முடிவில் பார்த்தால் முதலாளி என்பவன் பல ஆயிரம் கொடிகள் சம்பாதித்தாலும், அவன் நம் சமூகத்துக்கு திருப்பிக் கொடுப்பது அதை விட அதிகம்.

நாராயண மூர்த்தி வெறும் பத்தாயிரம் முதலீடு செய்து ஆரம்பித்தார் கம்பெனி. அவர் உருவாக்கிய நிறுவனம் இன்று நேரடியாக ஒரு இலட்சம் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறது. அதாவது குடும்பத்தில் நாலு பேர் கணக்கிட்டால், நான்கு லட்சம் மக்களுக்கு உண்ன உணவு, உடை, இருப்பிடத்திற்கு ஆதாரம். நல்ல வியாபாரம் இல்லாமல், நல்ல இலாபம் இல்லாமல் எப்படி நடக்கும் இதெல்லாம்.
அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களின் பொறுப்பான செயல்கள். நிறுவனத்தில் வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் வேலையில் உயர் ஈடுபாடு. தனி மனித வளர்ச்சியை நிறுவனத்தின் வளர்ச்சியோடு இணைப்பதின் வெளிப்பாடு. நிறுவனம் வளர, அதில் வேலை செய்யும் தொழிலாளர்களும் வளர்கிறார்கள், அவர்கள் குடும்பமும் செழிப்படைகிறது.
அரசு முதலாளியானால், அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு அலட்சியம். மெத்தனம், மற்றும் ஊழல் செய்வதில் கவனம். அவர்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கும் பொறுப்பு கிடையாது. நிறுவனம் எக்கேடு கேட்டு போனா என்ன? மக்களின் பணம், வரிப்பணம். வரி கட்டுபவர்களில் பெரும்பாலோனார் ஒட்டு போடாத பொழுது, அவர்களது வரிப்பணம், வரிப்பணம் கட்டாதவர்கள் தேர்ந்தெடுத்த அரசியல் கட்சியினால் வாரி இறைக்கப்படுகிறது. எனவே அரசியல் வாதிகளுக்கும் கவலை இல்லை. அவர்களை தேர்ந்தெடுத்த பெருவாரியான மக்களுக்கும் கவலை இல்லை.
அந்த வரிப்பணத்தில் சம்பளம் பெற்று, வேலை பார்க்காமல் வயிறு நிரப்பும் அதிகார வர்க்கத்திற்கும் வெட்கம் இல்லை. வரிப்பணம் கட்டாத, கட்டுவதை விட அதிக உரிமை பெரும் வர்க்கத்திற்கும் வெட்கம் இல்லை.
நான் சொன்ன இது போன்றவை தான் ஏர் இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணமென்றால், எச்.எம்.டி., போல் ஐ.டி.பி.எல். போல் மேலும் விழலுக்கு இறைத்த நீராகாமல், ஒரு வீழ்ந்த நிறுவனத்தின் முடிந்த கதையாகிப்போகட்டும்.