Showing posts with label கேடு கெட்ட குடும்பங்கள். Show all posts
Showing posts with label கேடு கெட்ட குடும்பங்கள். Show all posts

Sunday, August 2, 2009

உயர் சமூகம், அதன் கேடு கெட்ட உறுப்பினர்கள் 1

நந்தா என்பது இவர்கள் குடும்பப்பெயர். தாத்தா நந்தா அதாவது எஸ்.எம்.நந்தா இந்திய கடற் படையில் அட்மிரல் பதவி வகுத்தவர். இப்பொழுது அவர் தம் மகன் சுரேஷ் நந்தாவும், பேரன் சஞ்சீவ் நந்தாவும் செய்யும் தேச விரோத செயல்களைப் பற்றிக் கேட்கும்பொழுது, எஸ்.எம்.நந்தா மீதும் சந்தேகம் வருகிறது. அந்த ஆளு கடற் படை தலைவராக இருக்கும்பொழுது, நாட்டுக்கு என்னென்ன பாதகம் செய்திருக்கக் கூடும் என்று நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது. எனென்றால், சுரேஷும், சஞ்சீவும் செய்திருக்கும் செயல்களை நினைத்தால் குடும்பமே ஒரு உயர் சமூகத்தின் ஒரு கேடு கெட்ட அங்கமாக புலப்படுகிறது.
பேரன் சஞ்சீவ் நந்தா அதிகாலை நேரத்தில் குடி போதையில் தன் பி.எம்.டபில்யூ. காரை நூற்றி நாற்பது கிலோ மீட்டெர் வேகத்தில் ஓட்டி, ஆறு பேரை கொன்று, சிறிதும் ஈவிரக்கம் இல்லாமல் வண்டி ஓட்டி மறைந்தான். கூடவே இருந்த நண்பன் வீட்டிற்கு ஓட்டிச் சென்று, நண்பனின் தந்தை மற்றும் வேலைக்காரர்களின் உதவியுடன் வண்டியை சுத்தமாகக் கழுவி சாட்சியங்களை அழித்தான்.

மனோஜ் என்று ஒருவன் தப்பிப்பிழைத்தான். உயர் சமூக அநீதியாளர்களுக்கு விலை போனான். ஏற்றிக்கொன்றது லாரி என்று பொய் வாக்கு மூலம் கொடுத்தான். அதற்குப்பிறகு மனோஜ் முழுவதுமாக காணாமல் போனான்.

சுனில் குல்கர்னி என்பவர் தானாகவே சாட்சி சொல்ல வந்தார். சஞ்சீவ் நந்தா விபத்துக்குப் பிறகு வண்டியில் இருந்து இறங்கி, வண்டிக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்ததாகச் சொன்னார். காலம் கடந்து செல்ல தடுமாற்றத்துக்கு உள்ளானார். பாவிகள் அவரை எப்படி எல்லாம் பயமுறுத்தினார்களோ.

இதற்கு உச்சி கட்டமாக, உயர் நிலை வழக்கறிஞர்கள் ஆனந்தும், கானும், வெட்கங்கெட்டு, சாட்சிகளை மாற்றும் ஈனமான செயலுக்குத் துணை போனார்கள். இதைத்தவிர சுரேஷ் நந்தா பாரக் மிசைல் ஊழலில் குற்றவாளி. மேலும் தந்தையும், மகனும், அதாவது சுரேஷும், சஞ்சீவும் வருமான வரி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கையில், மும்பை மாநகரித்தில் கைதானார்கள்.

எந்த விதத்தில் பார்த்தாலும், உயர் குடும்பத்தில் பிறந்து, உயர் படிப்பு படித்து ஈனமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட, ஈடுபடும் நந்தா குடும்பம் வேரோடு களையப்பட வேண்டியது நாட்டுக்கு அவசியம். ஈனச்செயல்களுக்கு துணை போன அனைத்து குடும்ப உறுப்பினர்களும், ஆனந்தும், கானும் வாழ்க்கை முழுவதும் சிறையிடப்பட வேண்டும்.