Showing posts with label நீயும்.. Show all posts
Showing posts with label நீயும்.. Show all posts

Sunday, September 6, 2009

இந்தியாவில் எதுவும் நடக்கும்

அண்ணாச்சி! இந்தியாவிலேயே பணக்கார குடும்பம் எது அண்ணாச்சி?



பல பேரு தோணுது, ஆனா என்னால குறிப்பா சொல்ல முடியாது கண்ணா. ஏன்னா எனக்கு அவ்வளவு விவரம் பத்தாது.


சும்மா, ஒரு குத்து மதிப்பா சொல்லுங்க அண்ணே. முதல் இடம் தெரியாட்டாலும் பொதுவா சொல்லுங்க அண்ணே.



எவ்வளவோ பெரிய பெரிய தொழில் குடும்பங்க இருக்கு, டாட்டா, பிர்லா, அம்பானி, மிட்டல், இதெல்லாம் வடக்கே - தெற்கே சொல்லணும்னா டி.வி.எஸ். குடும்பம், எம்.ஆர்.எஃப், விப்ரோ, இனஃபோசிஸ், சங்கர் சிமெண்ட்ஸ், இது மாதிரி நிறைய குடும்பங்கள் இருக்கு. இந்த குடும்பங்கள்ல பெரிய குடும்பங்கள்னா, பணத்தால மட்டுமல்ல. பல பெருமைகள் உண்டு. சின்ன அளவுல கம்பெனி ஆரம்பித்து, தங்களோட நேரம், சுதந்திரம் அம்புட்டையும் தியாகம் செஞ்சு உருவாக்கினாங்க. அது மட்டுமல்ல, நாட்டுல லச்சக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பு உண்டாக்கினாங்க. இந்த கம்பெனிகளெல்லாம் உண்டாக்கினவங்களப் பாத்தா கையெடுத்து கும்பிடணும். பல ஆயிரம், சொல்லப்போனா பல லட்சம் குடும்பங்களுக்கு கடவுள் மாதிரி. அது சரி, இதெல்லாம் நீ எதுக்கு கேக்கிற?




அதுல்லண்ணே. ஒரு நியூஸ் படிச்சேன். மாயாவதின்னு ஒரு அம்மா 2007 -2008 ல அம்பானி, அது யாருண்ணே, முகேஷ் அம்பானி, அவுர விட அதிகமா வருமான வரி கட்டுனாங்களாம்மா. அவுங்க கம்பெனி பேரு என்னண்ணே? அவுங்க எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை போட்டு குடுத்திராக்கங்கண்ணே.


முட்டாள்! முட்டாள்! அவுங்க கம்பெனி நடத்தலடா. உத்தரப்பிரதேச முதல் மந்திரி. பகுஜன் சமாஜ் பார்ட்டி கட்சித்தலைவி.


பின்ன எப்படிண்ணே? புரியலையே. இந்த கட்சி எப்ப ஆரம்பிச்சுதண்ணே?


இந்த கட்சிய கன்ஷி ராம் ங்ரவரு, 1984 ல ஆரம்பிச்சாரு. அரசு அலுவலகத்துல குமாஸ்தாவா இருந்தாரு மாயாவதியோட அப்பா. பள்ளி, கல்லுரிகள்ள மாணவர் தலைவியாக இருந்து அரசியல்ல நுழைஞ்சாங்க.


அடேங்கப்பா! கம்பெனியே ஆரம்பிக்காம, முதலீடே பண்ணாம இவ்ளோ பணமா? எப்படிண்ணே இம்புட்டு பணம் வந்திச்சு?



அய்யரு பாஷைல சொல்லணும்னா - அபிஷ்டு, அபிஷ்டு, அதுதாண்டா அரசியல். இந்திய அரசியல்ல எதுவேணாலும் நடக்கும். ஏன்னா, மத்த நாட்டு மக்கள்ட்ட அதிகமா இருக்கிற ஒண்ணு, கொஞ்சம் கூட கிடையாது நம்ம கிட்ட.
என்னன்னே அது?
அதுவா? அது பேரு தேசப்பற்று!
ஊழல் அரசியல்வாதிகள் , ஊழல் அரசு அதிகாரிகள், அதுக்கு மேலா உணர்வற்ற, வெட்கங்கெட்ட, கோழைகளாகிய நாம். பொது மக்கள். அதாவது நானும் , நீயும்.

வாழ்க இந்தியா ! மீண்டும் வளர்க தேசப்பற்று!