Showing posts with label நேர்மை. Show all posts
Showing posts with label நேர்மை. Show all posts

Saturday, June 27, 2009

சின்னஞ்சிறு கதைகள் 1

சிற்பி ஒருவர் சிற்பம் செதுக்கிக் கொண்டிருந்தார். அருகில் சென்று ஒருவர் அவர் கலைச்செயலை, அவர் தம் ஈடுபாட்டை உன்னிப்பாக கவனித்தார். பின்னர், அவர் திரும்பிப் பார்த்த பொழுது மெல்ல அவரிடம் கேட்டார்.
"என்ன சிலை செய்துக்கிட்டு இருக்கீங்க?"
"பிள்ளையார் சிலை" என்று பதில் வந்தது.
மீண்டுமொரு கேள்வி "இந்த சிலையை எங்க வைக்கப்போறீங்க?"
பொறுமையாக பதில் சொன்னார் கலைஞர் "அந்த கோபுரத்தின் உச்சியில், வலது பக்கத்தில்" என்று சுட்டிக் காட்டினார்.
தற்செயலாக கவனித்த பார்வையாளர் "பக்கத்துல பிள்ளையார் சிலை இன்னொண்ணு இருக்கே, மறுபடியும் ஏன் பண்றீங்க?" என்று கேட்டார்.
"இதுவா! இது ரிஜெக்ட் ஆயிருச்சு!" என்று சொன்னார்.
பார்வையாளர் மறுபடியும் "யாரு ரிஜெக்ட் பண்ணாங்க?"
"நான் தான்"
"ஏன்?"
"ஒரு தவறு ஆயிடிச்சு"
கூர்ந்து கவனித்த பார்வையாளர் "கண்ணுக்குக் குறை ஒண்ணும் தெரியலையே!" என்றார்.
கலைஞர் "பிள்ளையாரோட தும்பிக்கைல, நடுல ஒரு சின்ன கீறல் விழுந்துடிச்சு" என்றார்.
உற்றுப்பார்த்த பார்வையாளர் "இவ்வளவு பக்கத்திலேர்ந்து பாக்கற ஏன் கண்ணுக்குக் தெரியல, அவ்வளவு உயரத்தில வச்ச பிறகு யாருக்குத் தெரியும்?" என்று தன் சந்தேகத்தை தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த சிற்பி "இரண்டு பேருக்குத் தெரியும். எனக்கும், பிள்ளையாருக்கும்" என்று கூறி முடித்து கவனமாக சிலை செதுக்குவதைத் தொடர்ந்தார்.

Saturday, August 9, 2008

உரையாடல் 6

கல்பனா "அம்மா! நாணயம்னா என்ன?
"நாணயம்னா, நியாயங்களை ஒட்டி நடத்தல்" என்று ஒரு வரியில் பதில் கூறினாள் வைதேகி.
"புரியற மாதிரி விளக்கமா சொல்லுங்கம்மா!" என்று வலியுறித்தினாள் கல்பனா.
"நாணயமாக நடப்பது எப்படின்னா, நியாயம்னா என்னன்னு புரிஞ்சிக்கணும். நியாயம், நேர்மை என்ற வார்த்தைகளைப் புரிஞ்சிக்கிறது ரொம்ப சுலபம்". சுலபமாகச்சொன்னாள் வைதேகி.
"என்னம்மா, இவ்ளோ சுலபமா சொல்றீங்க?" ஆச்சரியத்துடன் கேட்டாள் கல்பனா.
"ரொம்ப சுலபம்தாம்மா. நியாயம், நேர்மை, நாணயம் போன்ற வார்த்தைகளைப் புரிஞ்சிக்கனும்னா, இயற்கையின் தன்மையைப் புரிஞ்சிக்கணும். நல்ல அறுவடை வேணும்னா சில விதிகளைக் கண்டிப்பாக கடைப் பிடிக்க வேணும். அவை:
௧. சரியான நிலத்தை தேர்ந்தெடு.
௨. ஆழ உழுதிடு
௩. சரியான நேரத்தில் தேர்ந்தேடுத்த விதைகளைப் போடு.
௪. தண்ணீர் வூற்று, உரமிடு
௫. வீணானவற்றைப் பிடுங்கி ஏறி.
௬. விளைந்து முதிர்ந்ததும் அறுவடை செய்.
இது போலவே கல்பனா ஒவ்வொரு செயலுக்கும், அதனுடன் இணைந்த ஒரு இயற்கை நியதி உண்டு. நேர்மை, நாணயம் என்பது வேறு எதுவுமில்லை. இந்த இயற்கை நியதிகளை ஒட்டி நடப்பது தான்" என்று சொல்லி முடித்தாள் வைதேகி.
கல்பனா ஆச்சரியத்தில் முழுகினாள்.