Showing posts with label புல்லரிக்குதுணணே. Show all posts
Showing posts with label புல்லரிக்குதுணணே. Show all posts

Sunday, October 25, 2009

இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?

இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? கேட்கிறார் கனிமொழி.


புரியலீங்க அண்ணாச்சி! எதுக்கு, இதுக்கு மேல என்ன பண்ண முடியும்?


மரமண்டை! அதாண்டா, இலங்கை விழயத்தப்பத்தி பேசறாங்க.


ஏன்? ராஜ பக்சே கலைஞர் அப்பாக்கிட்ட கம்ப்ளைண்டு ஏதாவது செஞ்சாரா? அவுருக்கு போத்தின பொன்னாட குவாலிட்டி சரியில்ல, கிழிஞ்சு போயிருக்கு, கனிமொழி அக்கா பொன்னாட போத்தினப்ப இன்னும் நல்லா சிரிச்சு அதிகமா மகிழ்ச்சியைக் காட்டிருக்கலாம்னு.


உன்ன மரமண்டன்னு சொன்னது சரிதாண்டா! அதப்பத்தி இல்லடா. அவுங்க கேக்குறாங்க ஈழத் தமிழர்களுக்காக அவுங்க அப்ப என்னல்லாம் செஞ்சாங்க. இதுக்கு மேல என்ன செய்ய முடியும்னு.


என்னண்ணே? கனிமொழி அக்காதான் சொல்றாங்கன்னா, நீங்களும் ஜோக்கு அடிக்கறீங்கலேண்ணே!


மடையா இதுல ஜோக்கு என்னடா இருக்கு?


என்னண்ணே? கலைஞரும், கழகமும், இலங்கைத் தமிழர்களுக்காக என்னன்ன செய்தாங்கன்னு உலகம் முழுதும் எல்லாருக்கும் தெரியும்ணே.


என்னடா தெரியும்?


அதுதான், கனிமொழி அக்காவே சொல்லி இருக்காங்க ளேண்ணே! மனித சங்கிலிப் போராட்டம். பள்ளிக்கூட புள்ளைங்கள கை கோத்து நிக்க வச்சிட்டு, தலைவருங்க கார்ல போயி, அங்க அங்க நின்னு, அத ஒரு வாரம் உடாம டி.வி. ல காட்டினது. தலைவரோட நாலு மணி நேர உண்ணா விரதம். ரெண்டு மனைவி்ங்க, இரண்டு ஏ.சி. சுத்தி இருக்க, பட்டு மெத்தையில படுத்து. என்ன செய்வாங்க பாவம். அதுக்குள்ள எலெக்ஷன் வரவும், அதுக்கப்பறம், இந்த தள்ளாத வயசுல, டெல்லி போயி போராடி, பதவிகள் வாங்குனது. அதுக்கு மேல கூட்டமா போயி, கொல வெறியன் ராஜ பக்சேவ பொன்னாட போத்தி வாழ்த்தினது, ஆமாண்ணே, கலைஞர் குடும்பத்தோட தியாகங்கள நெனச்சா உடம்பு புல்லரிக்குதுணணே! இதுக்கு மேல என்னதான் செய்ய முடியும், எந்த ஒரு மனுசனும் தன் குடும்பத்துக்கு?