Showing posts with label பொய்யே பேசும் அரசியல்வாதிகள். Show all posts
Showing posts with label பொய்யே பேசும் அரசியல்வாதிகள். Show all posts

Monday, November 9, 2009

பாரோலில் வெளி வந்தான் கொலைகாரன்

கொலை காரன் மனு ஷர்மா இரண்டு மாத பாரோலில் வெளியே வந்தான். காரணம் அவன் தாய் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.


அவள் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருப்பது இப்பொழுது அல்ல என்பது அவளது சனிக்கிழமை வீடியோ படத்தைப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் குடும்பத்துக்குச் சொந்தமான ஓட்டலில் ஒரு பிரெஸ் கானஃபிரென்ஸில் மிகவும் தெம்பாகக் கலந்து கொன்டிருந்திருக்கிறாள்.



பின்னே அவள் நோய் வாய்ப்பட்டிருந்தது எப்போது? ரொம்ப சுலபான பதில். அவள் நோய் வாய்ப்பட்டிருந்தது கொலைகாரன் மனு ஷர்மாவை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தபோது. அந்த ஒன்பது மாதங்கள் அவள் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தாள். எதிர்காலக் கொலைகாரனை, ஒரு சட்ட விரோதியை வயிற்றில் சுமப்பது என்பது கடுமையான வியாதி அல்லவா.



செய்த பாவங்கள் போதாது என்று மேலும் பாவங்கள் செய்ய வெளி வந்திருக்கிறான், பொய் பாரோலில். ஒரு கொலைகாரப் பாவியை வயிற்றில் சுமந்ததற்காக அந்த தாய் சமீப காலங்களில் ஒரு கேடு கெட்ட கொலைகாரனைப் பெற்ற குற்றத்தோடு துயர வாழ்க்கை வாழ்வது உண்மை. இதற்கு மேலும் அவன் குற்றம் செய்தால், அத்தாயே அவனை செய்யத்தூண்டினால், அவளுக்கு வரக்கூடிய துயரம் மிக அதிக அளவில் இருக்கும். அது இயற்கையின் நியதி. அதை யாராலும் தவிர்க்க முடியாது.


ஷீலா தீக்ஷித் போன்றவர்கள் அதற்க்குத்துணை போனால் அவர்களும் பெரும் துயரத்தில் ஆழ்வது அவசியம். இது ஜோசியம் அல்ல. கொலையுண்டவளின் தாயின் வயிற்றெரிச்சல் அவர்களை சிதைக்காமல் விடாது. புராணங்களிலும், இதிகாசங்களிலும், இதற்கான உதாரணங்கள் ஏகப்பட்டவை இருக்கின்றன.