Showing posts with label மாவோவிஸ்டுக்கு முன்னரே வேரறுக்கப்பட வேண்டியவர்கள். Show all posts
Showing posts with label மாவோவிஸ்டுக்கு முன்னரே வேரறுக்கப்பட வேண்டியவர்கள். Show all posts

Sunday, May 23, 2010

பேச்சு, வெறும் வெட்டிப் பேச்சு!

மாவோவிஸ்டுகளின் கொலை வெறித் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தவறாமல் அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கிறார். முன்னேற்றம் ஏதும் இல்லை. கொலை வெறித் தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. மேலும் அதிகரித்துக் கொண்டிருக் கின்றன.


நமது இந்திய சமுதாயத்திற்கு பெரும் இன்னல் விளைவிக்கும் சமுதாய எதிர்ப்பு அமைப்புகளை நேர் நோக்கும் திண்ணமும், பக்குவமும், இதற்கும் மேலாக நேர்மைத் திறனும், இன்றைய அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் அமைப்புக்கும் சிறிதளவும் கிடையாது. மேலும் சொல்ல வேண்டுமானால் மாவோவிஸ்ட் போன்ற அமைப்புகள் உருவாகுவதற்கே இவர்கள் தான் காரணம். ஊழல் அரசியல் தலைவர்கள், அவர்களோடு இணைந்து நாட்டை சூறையாடும் அரசு அதிகாரிகள், மற்றும் ஊழல் வர்த்தகர்கள். நம் நாட்டிற்கு இவர்கள் இழைத்த அநீதி, கொடுமை, மாவோவிஸ்டுகள் இன்னும் நூறு வருடங்களில் கூட இழைத்து விட முடியாது. மாவோவிஸ்டுகளுக்கு முன்னரே வேரறுத்துக் களையப்பட வேண்டியவர்கள் ஊழல் அரசியல் வாதிகள், ஊழல் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழல் வர்த்தகர்கள். இவர்களை வேரறுக்க ஒரு புதிய இயக்கம் நம் நாட்டில் தேவை. கூடிய சீக்கிரம் உருவாகும் என்ற நம்பிக்கை சில பல நாட்களாக வளர்ந்து வருகிறது.