Showing posts with label விழித்தெழு தமிழா. Show all posts
Showing posts with label விழித்தெழு தமிழா. Show all posts

Saturday, April 25, 2009

தமிழன் - எங்கே அவன்?


மனித சங்கிலி, தொடர் உண்ணாவிரதம், ஒரு நாள் கடையடைப்பு - நாடகங்கள் தொடர்கின்றன. இலங்கைத்தமிழனுக்காக நம் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள், தலைவர்கள் என்று தவறாக அழைக்கப் படுபவர்கள் முதலைக் கண்ணீர் விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். முதலைகள் கண்ணீர் விடுவதெல்லாம் இறைச்சிக்காகத்தான். நம் இந்திய, தமிழ் நாடு உட்பட, அரசியல் வாதிகளுக்கு உணவு, பணம், பொருள், பதவி, பெருமை எல்லாமே, சராசரி இந்தியனின் பசியிலும், பட்டினியுலும், துயரத்திலும் தான்.

பசியில் வருந்துவான் தமிழன், பார்த்துப்பார்த்து பேராசை வளர்ப்பான் அரசியல்வாதி,

நோய்வாய்ப்படுவான் தமிழன், நோட்டுக்களை எண்ணுவான் அரசியல்வாதி.

வாடுபவன் தமிழன், வளர்பவன் அரசியல்வாதி.

அரசியல்வாதிகள் முதலைகள், தலை கொடுக்கத் தயார் சராசரி தமிழன்.

விழித்தெழு தமிழா! வீணே தலைவன் புகழ் பாடாதே!