Tuesday, October 13, 2009

நோபெல் பரிசும் சர்ச்சைகளும்

நோபெல் பரிசு ஒரு தமிழருக்குக் கெடச்சிருக்கே, நீங்க என்ன நெனைக்கிறீங்க அண்ணாச்சி?


ரொம்ப சந்தோசமான விஷயம் தான். இந்த நியூச பாத்த உடனே ரொம்ப சந்தோசமா இருந்திச்சு. ரெண்டு நாளைக்கு பொறகு ஒபாமாவுக்கு நோபெல் அமைதி பரிசு குடுத்து இருக்காங்கன்னதும் மனசுக்கு சங்கடமா போச்சு தம்பி.


ஏங்க அண்ணே? ஒபாமாவும் பெரிய மனுசரு தானே அண்ணே?


அது ஒண்ணுமில்லடா, அன்னை தெரசாவுக்கும், அதுக்கு அப்பால மைக் ஒபாமாவுக்கும் அதே விருதுன்னா மனசு ஒப்ப மாட்டேங்குது.


என்னே! இதெல்லாம் பெரிய பெரிய ஆளுங்க கோம்மிட்டீல கூடி தான முடிவு பண்ணுவாங்க, அதேப்படின்னே தப்பாகும்.


அதெல்லாம் வாஸ்தவம் தான். ஆனா நோபெல் பரிசு ஒண்ணும் சந்தேகங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் அப்பாற் பட்டதல்ல. கடந்த அம்பது, அறுபது வருடங்கள்ள பல தவறுகள் நடந்திருப்பதா பெரிய பெரிய ஆளுங்களே நெனைக்கறாங்க. அது போகட்டும். அமைதின்னா உனக்கு யார் பேர் மொதல்ல ஞாபகம் வரும்.


அமைதின்னா, அஹிம்ச - அஹிம்சன்னா அண்ணல் காந்தி அடிகள்.



அவுரு பேர அஞ்சு முறை நாமிநேட்டு பண்ணி குடுக்காம வுட்டாங்க. கடைசியா அண்ணல் காந்தி அடிகள் சுட்டுக்கொல்லப் பட்டத்துக்கு ரெண்டு நாள் கழிச்சு முடிவு பண்றதா இருந்தாங்க. கிட்டத்தட்ட அவுரு பேரு முடிவு ஆயிடிச்சு . ஆனா இறந்தவருக்கு நோபெல் பரிசு இல்லன்னு கதைய மூடி அந்த வருஷம் யாருக்குமே தரல.


ஆச்சரியமா இருக்கு அண்ணே!



இதுல என்னடா இருக்கு ஆச்சரியம்! எல்லாமே மனுசங்க தானடா. மனித குலம் முதிர்ச்சி அடைய இன்னும் பல நூறாண்டுகள் ஆகணும்டா.




Monday, October 12, 2009

நம்ம ஊரு வெங்கிக்கு உலக மரியாதை

விஞ்ஞானி வேங்கடராமனுக்கு நோபெல் பரிசு கிடைத்ததுதான். ஒரு நொடி முடியலை. சிதம்பரத்துக்காரர். தமிழனுக்குக் கிடைத்த பரிசு என்று ஒரே கூச்சல். மற்றொருபுறம், குஜராத்தில் தலைப்புச் செய்தி "வடோதரா'ஸ் வெங்கி வின்ஸ் நோபெல்" என்று. நோபெல் கமிட்டீ சொல்லுகிறது "அவர் இங்கிலாந்தை சேர்ந்தவர்" என்று. அவர் வசிப்பதோ அமெரிக்காவில்.



பிள்ளைப் பருவத்தில் பரோடா என்னும் வடோதரா சென்று பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் அங்கு முடித்து பின்னர் பயணித்தார் வெளி நாடுகளுக்கு. சிதம்பரத்திலும், சென்னையிலும் அவருக்கு எவாளவு பெரைத்தேரிந்து இருக்கும் என்று எனக்குத்தெரியாது. ஆனால் வடோதராவில் அவரை அறிந்தவர்களும், அவர் அறிந்து வைத்திருப்பவர்களும் பலர்.


சிதம்பரமோ, வடோதராவோ, இங்கிலாந்தோ, அமெரிக்காவோ, ஒரு இந்திய மண்ணில், இந்திய பெற்றோர்களுக்குப் பிறந்தவர். வாழ்க அவர் புகழ்!

எதிர்காலத்தில் நாத்திகம் - ஒரு கற்பனை

கடந்த இருபத்து வருடங்களில், நமது இந்தியா பல விஷயங்களில், குறிப்பாக விஞ்ஞானத்தில் பெரு வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால் கூடவே சாதி வெறியும், சாதிக்கலவரங்களும், மடங்களும், அம்மடங்களுடன் இணைந்த சாமியார்களும், தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு என்று எல்லா திசைகளிலும் வேகமாக வளர்ந்து நம்மை அச்சுறுத்தி இருக்கின்றன, அச்சுறுத்துகின்றன.


ஈசல் போன்று பெருகி வளர்ந்த அரசியல் கட்சிகள் மற்றும், அரசியல்வாதிகள் படுத்தும் பாடு போதாதென்று, இது போன்ற மடங்களும், சாமியார்களும் அடிக்கும் கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. அரசியல்வாதிகளும், இச்சாமியார்களும் இணைந்து பல கொள்ளைகளை நமது இந்தியாவில் அரங்கேற்றியுள்ளனர். முடிவில் இவ்விரு குலத்தினருமே, மக்களை மேலும் மேலும் முட்டாள்களாக்கி மேலும் மேலும் அவர்களை கொள்ளையடித்ததைத் தவிர இந்த நாட்டிற்காக எந்த ஒரு நன்மையும் செய்ததில்லை.


இவற்றுக்கு விதி விலக்கானவர்கள் ஒரு சிலர். அவர்களைப் பிரித்துக்காட்டுவது, இப்பொழுது என்னுடைய நோக்கம் அல்ல.


சரித்திரத்தை உற்று நோக்கிப்பார்க்கையில் எனக்குத் தெளிவானது, நாத்திகமும், பகுத்தறிவுப் பாசறையும் ஒரு மடம் தான். அந்த மடத்தில் உருவான சாமியார்கள் பலர் அரசியலில் சக்கை போடு போட்டு, அவர்களின் விரிவான குடும்பங்களை செல்வச்செழிப்பில் கொண்டு தக்க வைத்திருப்பது, தன்மானத் தனிழன் ஒவ்வொருவனுக்கும் தெரிந்த விஷயம் தான். தன்மானத் தமிழனுக்கு மேலும் தெரியும், பெரியார் .வே.ரா. தொலை நோக்கு கொண்டு, பேசிய பேச்சுக்கள், செய்த செயல்கள், அவர் வாழ் நாளிலேயே பலருக்கு பணம் பண்ணும் பாசறையாகி விட்டது என்பது.


இந்த யோசனையில் உதித்தது ஒரு கற்பனை:


அம்மா! அம்மா! என் ஃபிரெண்டு ஒருத்தன் ராஜா மணி சாமின்னு பேரும்மா. பெரியார் சாமியையும், மணியம்மை அம்மனையும் அவன் கும்பிடராம்மா. இந்த ரெண்டு சாமிகளும் நாம ஏம்மா கும்பிடரதில்லே?


அவங்க வேற மதம்டா! நம்ம மதத்தில அந்த சாமிங்கள கும்பிடரதில்லே!


அதெப்படியம்மா? அவுங்களும் ஹிந்து மதத்த சேர்ந்தவங்கதானே? என்ன நம்மள மாதிரி விபூதில்லாம் பூசரதில்லே. நம்ம பெரிய புராணம் படிக்கிறோம், அவுங்க பெரியார் புராணம், தினம் நூறு பார்ப்பன வசவுகள் படிக்கிறாங்க. இது தானேம்மா வித்தியாசம்.


அதில்லடா. பெரியார் சாமி இந்த பூமில ஈ. வே. ராமசாமி நாயக்கரா அவதரித்த போது நாத்திக மதம்னு ஒரு மதத்த ஆரம்பிச்சாரு. அந்த மதத்துல இருந்தவங்களுக்கு, சில கடுமையான விதிகள் இருந்துச்சு. கருப்பு சட்ட போடணும், கருப்பு துண்டு போர்த்தனும், நெத்தில விபூதி, குங்குமம் இதெல்லாம் இடக்கூடாது. பெண்கள் கல்யாணம் ஆனாலும், ஐயற கூப்பிட்டு, ஹோமம் வளக்கறது, தாலி கட்டறது இதெல்லாம் கூடாது.


கல்யாணத்துல பின்ன வேற என்னம்மா செய்வாங்க?


அதுவா! பெரியார் சாமியோட பக்தர் யாரையாவது கூப்பிட்டு அவர் தலைமையில கல்யாணத்த நடத்துவாங்க. அந்த பக்தரும், ஒரு அரை மணி நேரம் பார்ப்பன வசவுப்பேச்சு, கடவுள் இல்லை பேச்சு பேசி கல்யாணத்தை முடித்துக் கொடுப்பார்.



ரொம்ப ரொம்ப சுவாரசியமா இருக்கு - இன்னும் சொல்லுங்க அம்மா



தலைக்கு மேல வேல இருக்குடா. அடுத்த ஞாயித்திக்கிழம மத்தியானம் வீட்ல தான இருப்ப அப்ப சொல்றேன்



Saturday, October 10, 2009

நல்லதை எழுது

நான் சொன்னது "கெட்டதை எழுதுகிறேன், நல்லவை நடக்க எழுதுகிறேன்"


சந்தேகம் இருந்தால் இன்று தினமலர் செய்தித்தாளை எடுத்துப் படித்துப் பாருங்கள். மூன்று சதவித மக்கள், இந்நாட்டில் கொள்ளை கொள்ளையாக கறுப்புப்பணத்தை அமுத்துகிறார்கள். இதில் பெரும்பாலோர், ஊழல் அரசு அதிகாரிகள், ஊழல் அரசியல்வாதிகள், மற்றும் அவர்களோடு கைகோர்த்து நாட்டிற்கு இன்னலூட்டும் வியாபாரிகள். இதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஐந்து சதவிகிதத்திற்கு இணையாக குறைத்து விடுகிறார்கள்.


அதன் உண்மையான வெளிப்பாடு எங்கே என்று கேளுங்கள். நாம் அன்றாடம் உண்ணும் அரிசியிலும், பருப்பு வைகைகளிலும், ஒவ்வொன்றிலும் பிரதிபலிக்கிறது.



கூட்டிக் கழித்துப் பார்த்தால், நமது இந்திய நாட்டில், ஊழல் நடவடிக்கைகளை நாம் அறவே ஒழித்தால், சாமானிய மனிதனின் வாழ் நிலை பல படிகள் உயரும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், தினம் உழைத்து சம்பாதிக்கும் சாமானிய மனிதனின் வரவு குறைந்தது பதினைந்து சதவிகிதம் உயரும். அத்தியாவசிய செலவுகள் அதாவது உணவு, உடை, இருப்பிடம், வாகனம் வாங்கும் செலவு, பதினைந்திலிருந்து இருபது சதவிகிதம் குறையும்.



என்று நமது இந்திய மண்ணில் ஒவ்வொரு சாமானியனும் இதை உணர்கிறானோ, இதை உணர்ந்து வெகுண்டு எழுகிறானோ, அன்று, நாம் ஒரு புதிய சுதந்திரப் போராட்டத்திறகு தயாராகி விட்டோம் என்று கொள்.


நான் தயார்! நீ தயாரா? ஆனால் நினைவில் கொள் "Non Violence is the best form of Bravery"


நல்லதை எழுது

நம்ம ஃப்ரெண்டு ஒத்தன் - அவன நானும் விடாப்புடியா "தமிழன்பன் படிச்சியா, தமிழன்பன் படிச்சியா?" ன்னு நொய்க்க அவனும் தொந்தரவு தாங்காம படிச்சுட்டு
"பொறம்போக்கு! பொறுக்கி" அப்படின்னு கன்னா பின்னான்னு திட்ட ஆரம்பிச்சான்.




ஏன்டா, நல்ல விழயங்கள நான் எழுதறேன். என்ன ஏன்டா திட்டறே" என்று கேட்கவும், கை நீட்டாத குறையா
"எதுடா நல்ல விஷயம். நல்லவங்களப்பத்தி எழுதினா நல்ல விஷயம். எப்பப் பாத்தாலும், எடுபட்ட அரசியல்வாதிகளப்பத்தி எழுதறியே, எதுடா நல்ல விஷயம், வாய்ல வந்துடப் போவுது" என்று காய்ச்சினான்.




நான் சொன்னேன் "ஏன்டா, நல்ல விஷயத்தப் பத்தி நான் எழுதலையா! டெல்லி மெட்ரோ ரெயில் உருவாவதர்க்குக் காரண கர்த்தா ஸ்ரீதரன் பத்தி எழுதலையா."
"ஆமான்டா எழுதின, நீ எழுதி பத்து நாளைக்குள்ள பெரிய ஆக்சிடெண்டு ஆயி அவுருக்கும் டென்ஷன். ஏன்டா இப்படி பண்றே" என்று கண்டித்தான்.




சமீபத்தில் மேதகு அப்துல் கலாம் பேசியதாகக் கேள்விப்பட்டேன். அவ்வுரையில் அவர் இந்தியாவில் எவ்வளவோ சாதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், மற்றும் பல சாதனங்களும் இந்தியாவின் அவலங்களை மட்டுமே பிரதிபலிக்கின்றன. இது தவறு என்று.
யோசித்துப்பார்த்தேன். நான் இந்தியாவின், மற்றும் உலக அவலங்களைப் பற்றி மட்டுமே அதிகம் எழுதுகிறேன். ஏன்? தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்.

மறு எண்ணிக்கையில் ஜெயிச்சான் சின்னு

ரெங்க நகர் கிரிக்கெட்டு கேப்டன் தேர்தலும், சின்னு மறு எண்ணிக்கையில் ஜெயிச்சதும், நான் எழுத மறந்ததும்:
பத்து நாட்களுக்குப் பிறகு கிடைத்த தகவல் - கருவண்டு தங்கராசு சாரை திரைக்குப் பின்னே கொண்டு சென்ற நேரம் , சின்னாவின் அண்ணன், வெங்கி வீட்டுக்குப் போயி இருநூற்று ஐம்பத்து ரூபாய் பணமும், வெங்கியின் அம்மாவுக்கு ஒரு புடவையும் கொடுத்து சரி கட்டினதாகக் கேள்வி.

Thursday, October 1, 2009

கமிஷன் அடிச்சு காணாமல் போனார் கோமல் பட்டாச்சார்யா

எங்க ஊர்ல, அதுதான் மாந்துறைல ஷர்மீளா ஆன்டியத் தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது. ஷர்மீளா ஆண்டி அவ்வளவு கலர், அவ்வளவு அழகு. வெங்கடேசன் மாமா பையன் ராமசுப்பு, வாலிப வயசுல ஒரு வேலையா கல்கத்தா போயிட்டு அங்க ஒரு மூணு நாலு மாசம் தங்கும்படியா ஆயிடுச்சு. அங்க கல்கத்தாவைச் சேர்ந்த ஷர்மீளா மேல லவ்ஸ் ஆயிட்டாரு. அதுக்குப்புறம், வெங்கடேசன் மாமா குடும்பத்தோட கல்கத்தா போயி, சத்தம்போடாம, பையனுக்கு ஷர்மீளாவோட கல்யாணம் பண்ணி மகனையும், மருமகளையும் மாந்துறைக்குக் கூட்டிட்டு வந்துட்டார்.


ராமசுப்புவும், ஷர்மீளாவும் மெட்ராஸ்ல இருந்தாங்க. மாசத்துக்கு ஒரு தடவையோ, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவையோ வருவாங்க. வெங்கடேசன் மாமா குடும்பத்துக்கு மாந்துறையுலும், வாளாடியிலும், லால்குடியுலும் ஏகப்பட்ட சொத்து. எல்லாத்தையும் நிர்வாகம் பண்ணிக்கிட்டு இருந்தவர் திடீர்னு ஒரு நாள் மண்டையப்போடவும், ராமசுப்புவுக்கும், ஷர்மீளாவுக்கும் பர்மெனேன்டா மாந்துறை வந்து செட்டில் ஆகும்படியா ஆயிடிச்சு.


இப்ப என்னவோ கல்கத்தா ஆன்டி, தமிழ்ப்பெண்மணி மாதிரி தமிழ்ல பொளந்து கட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ஒருநாள் சமூக சேவை சங்கத்துல முடிவு பண்ணாங்க - பள்ளிக்கூட பசங்கள்லாம் லால்குடில ஸ்கூலுக்குப் போக பஸ் வாங்கலாம்னு. ஒடனே ஷர்மீளா ஆன்டி மும்முரமா இறங்கிட்டாங்க.


அவுங்களுக்கு தூரத்து சொந்தக்காரர், கோமல் பட்டாசார்யான்னு ஒருத்தர் இருக்கார். அவருக்கு, இந்த பஸ், காரு இதெல்லாம் வாங்கரதுல ரொம்ப வருஷ அனுபவம்னு. டிரங்கால் போட்டு பேசி ஊர் பெரியவங்க அவர வரவழைச்சாங்க. அருமையா பேசினாரு, இங்கிலீஷிலியும், ஹிந்தியிலும். அவுரு பேச்சு புரியாம நிறைய பேரு அவுரா உத்துப்பாத்துக்குட்டு தலையாட்டினாங்க.


அதுக்கப்பறம் என்ன நடந்ததுன்னு நான் சுருக்கமா சொல்றேன்.


எங்க சமூக சேவை சங்கத்துக்கு, புது பஸ்னு சொல்லி, சல்லிக்காசு பெறாத பழைய பஸ்சு ஒண்ண தள்ளி விட்டுட்டார். அதுக்கு கோமல் பட்டாச்சார்யா நெறையா கமிஷன் அடிச்சுட்டதா பேசிக்கிட்டாங்க. அவுருக்கு போன் போட்டுக்கேட்ட அவுரு சொல்றாரு "கல்கத்தாவுக்கு நீங்க வந்து என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்றேன்' .


ஒரு வழியா செலவழிச்சது போரும்னு எங்க சமூக சேவை சங்கம் கேசைத் தூக்கிக் கிடப்பிலே போட்டுடுச்சு.