Sunday, October 25, 2009

இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?

இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? கேட்கிறார் கனிமொழி.


புரியலீங்க அண்ணாச்சி! எதுக்கு, இதுக்கு மேல என்ன பண்ண முடியும்?


மரமண்டை! அதாண்டா, இலங்கை விழயத்தப்பத்தி பேசறாங்க.


ஏன்? ராஜ பக்சே கலைஞர் அப்பாக்கிட்ட கம்ப்ளைண்டு ஏதாவது செஞ்சாரா? அவுருக்கு போத்தின பொன்னாட குவாலிட்டி சரியில்ல, கிழிஞ்சு போயிருக்கு, கனிமொழி அக்கா பொன்னாட போத்தினப்ப இன்னும் நல்லா சிரிச்சு அதிகமா மகிழ்ச்சியைக் காட்டிருக்கலாம்னு.


உன்ன மரமண்டன்னு சொன்னது சரிதாண்டா! அதப்பத்தி இல்லடா. அவுங்க கேக்குறாங்க ஈழத் தமிழர்களுக்காக அவுங்க அப்ப என்னல்லாம் செஞ்சாங்க. இதுக்கு மேல என்ன செய்ய முடியும்னு.


என்னண்ணே? கனிமொழி அக்காதான் சொல்றாங்கன்னா, நீங்களும் ஜோக்கு அடிக்கறீங்கலேண்ணே!


மடையா இதுல ஜோக்கு என்னடா இருக்கு?


என்னண்ணே? கலைஞரும், கழகமும், இலங்கைத் தமிழர்களுக்காக என்னன்ன செய்தாங்கன்னு உலகம் முழுதும் எல்லாருக்கும் தெரியும்ணே.


என்னடா தெரியும்?


அதுதான், கனிமொழி அக்காவே சொல்லி இருக்காங்க ளேண்ணே! மனித சங்கிலிப் போராட்டம். பள்ளிக்கூட புள்ளைங்கள கை கோத்து நிக்க வச்சிட்டு, தலைவருங்க கார்ல போயி, அங்க அங்க நின்னு, அத ஒரு வாரம் உடாம டி.வி. ல காட்டினது. தலைவரோட நாலு மணி நேர உண்ணா விரதம். ரெண்டு மனைவி்ங்க, இரண்டு ஏ.சி. சுத்தி இருக்க, பட்டு மெத்தையில படுத்து. என்ன செய்வாங்க பாவம். அதுக்குள்ள எலெக்ஷன் வரவும், அதுக்கப்பறம், இந்த தள்ளாத வயசுல, டெல்லி போயி போராடி, பதவிகள் வாங்குனது. அதுக்கு மேல கூட்டமா போயி, கொல வெறியன் ராஜ பக்சேவ பொன்னாட போத்தி வாழ்த்தினது, ஆமாண்ணே, கலைஞர் குடும்பத்தோட தியாகங்கள நெனச்சா உடம்பு புல்லரிக்குதுணணே! இதுக்கு மேல என்னதான் செய்ய முடியும், எந்த ஒரு மனுசனும் தன் குடும்பத்துக்கு?

Thursday, October 22, 2009

தோத்துப் போனார் அருண் காவ்லி

மும்பை மாநகரத்தில் அருண் காவ்லி என்னும் ஒரு காவாலி. குற்றங்கள் பல புரிந்து பல வருடங்கள் காவலில் வைக்கப்பட்டவன். இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் போக்கிடம் எது? அரசியல் தானே. அதனால் அவன் ஒரு கட்சி ஆரம்பித்து முழு நேர அரசியல்வாதியானான். இரண்டாயிரத்து நான்காம் வருடம் 'அகில பாரதிய சேனா" என்ற அரசியல் கட்சியின் கீழ் எம்.எல்.ஏ. ஆனான்.


அரசியல்
வாதி ஆகி, சட்டசபைல இடம் புடிச்சிட்டா எவனுக்குமே பரிபூரண விமோசனம் அல்லவா கிடைச்சுடும். போலீஸ் பாதுகாப்பு உண்டு. நேரடியா அடிதடி செய்யறத சட்டசபைல மட்டும் வச்சுக்கலாம். தெருவுல அதைச்செய்ய உடன்பிறப்புகள் பல பேர் இருப்பாங்க. கொலையே செய்து மாட்டிக்கிட்டாலும், எதிர் கட்சியின் சதி என்று பழி போடலாம். கூட்டத்தைக் கூட்டி, அராஜகம் செய்து, நீதியை (அநீதியை) தனக்கு சாதகமாக்கலாம். ஆட்சி மாறினால் தான் கட்சி மாறி, குற்றங்களிலிருந்து தப்பித்து, மனித குல சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்ளலாம்.


ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்மணிகளை மணம் முடிக்கலாம். அவர்கள் தம் பெண், பிள்ளைகளுக்கு, ஸ்டேட்டிலிருந்து, சென்ட்ரல் வரை பதவிகள் பல பெறலாம். மாமன், மச்சான் என்று விரிந்த குடும்பங்களுக்குப் பற்பல நன்மைகள் செய்யலாம். மொத்தத்தில் மக்கள் வரிப்பணத்தை தங்கள் குடும்பச் சொத்தாகக் கருதி, பித்தலாட்டங்கள் பல செய்து பிழைக்கலாம்.


ஆனால் இந்த முறை தோத்துப் போனார் அருண் காவ்லி. இருந்தாலுமென்ன, ஆட்சியல் அமருபவனுக்குக் கிடைப்பதில் கொஞ்சம் கமிஷன் அரசியலில் மற்றவர்களுக்கும் கிடைக்கும். அத வச்சு அடுத்த எலெக்ஷன் வரைக்கும் ஓட்டலாம்.

கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்

தினம் தினம் தமிழ் செய்தித்தாள்களில், தங்களைப் பற்றிய செய்தியோ, தாங்கள் பேசியோ பேச்சோ பதிவாகியிருக்கும். நாட்டுக்கு நலன் பயக்கும் விஷயங்கள் எதுவும் யோசித்துப் பேசுவீர்கள் என்று பார்த்தால் பெரும் ஏமாற்றம் தான். பாவம் உங்கள் சங்கடம் எங்களுக்கும் ஓரளவு புரிகிறது. தினம் தினம், அதற்கு முந்தைய தினம் ஜெயலலிதா என்ன பேசினார் என்று படித்துப் புரிந்து கொள்வதிலேயே, இந்த தள்ளாத வயதில், பெரும் நேரமும், அதிக அளவில் மனோ வலிமையையும் செலவிட வேண்டியதாக இருக்கும். அதற்கும் மேலாக தெள்ளிய தமிழில் பதிலடி அடிக்க, மேலும் யோசித்தே நாள் கடந்து விடும்.


விட்டுத்தள்ளுங்கையா ஜெயலலிதாவின் பேச்சை! உண்மையாச் சொல்றேன், நீங்க சொல்றது வச்சுத்தான், செல்வி ஜெயலலிதா என்ன பேசினாங்கன்னு தெரிய வருது. நீங்க ஜெயலலிதாவை எதிர்க்கிறீங்களா, அல்லது அவங்க பேச்சுக்கு விளம்பரம் குடுக்கறீங்களான்னே சந்தேகம் வந்துடுது.


எனவே நீங்க பாட்டுக்கு சிவனேன்னு, மன்னிக்கணும், வெங்காயமேன்னு, நெஞ்சுக்கு நீதி தேடறதிலேயே முழு நேரம் ஈடுபட்டா நல்லா இருக்கும். நீங்க உண்டு, உங்க சக்கர நாற்காலி உண்டுன்னு ஒய்வு எடுங்க. தமிழ் நாட்டுல பெரிய மாத்தம் ஒண்ணு்ம் வந்துடாது.


வாழ்க தமிழ்! வளர்க தலைவர் குடும்பம்!

Wednesday, October 21, 2009

எல்லாம் நன்றாகவே நடக்கின்றன

சுதர்சன் நாச்சியப்பனும், அருணும், தெளிவாகச்சொல்லிட்டாங்கைய்யா, எல்லாம் நல்லபடியா இருக்கு. முகாம்கள்ள இலங்கைத் தமிழ் மக்கள் வசதியா இருக்காங்க. நாங்க இதெல்லாம் பத்தி முழு ரிப்போர்ட்டு மன்மோகன் சிங்கு கிட்டயும், சோனியா அம்மாக்கிட்டயும் குடுக்கொறோம்னு சொல்லிட்டாங்க.


திரை விலகாமலே ஒரு நாடகம் நடந்தது
நடிகர்கள் மேடையில் அல்ல, பார்வையாளர் புறம்
பார்த்தார்கள், ரசித்தார்கள், பொன்னாடை போர்த்தி
பாராட்டினார்கள், கொலையாளன் குதூகலிக்க
மேடையில் ஓடிய ரத்த ஆற்றை கண்டும் காணாமல்
திரும்ப வந்து, ஈவிரக்கம் சிறிதுமின்றி பொய் வார்த்தை பேசுகிறார்கள்
கடவுளின் நாடகத்தில் இவர்கள் பாத்திரங்கள்
பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்,
பிரதமரிடமல்ல, இவர்களைப் படைத்தவனிடம்

ஊழல் செயல்களை கை விடத்தயாரா?

'நாக்சலைட்டுகள், வன்முறையை கைவிட்டு, அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த முன் வர வேண்டும்' - என மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.


சாமானிய, நாட்டுப்பற்று கொண்ட இந்தியன் கூறுகிறான் "அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், பேராசை வணிகர்களும் ஊழல் செய்வதை கைவிட்டு, நாட்டுப் பற்றுடன் நல் வழி நடக்க முன் வர வேண்டும்"


வருவார்களா? நாக்சலைட்டுகள் உருவாகவே இந்த மூணு பேர் தானய்யா காரணம்.

நெஞ்சிலடிக்கும் நீதி

கீழ்க்கண்ட வரிகள் நான் சென்ற வருடம் நவம்பர் பதினாறாம் தேதி எழுதியவை. ஒரு வருடம் முடியப்போகிறது. குற்றமிழைத்தவர்கள் தண்டனை பெற்றனரா? தெரிந்தவர்கள் தயவுசெய்து சொல்லுங்கள்

நேற்று தமிழ்நாட்டுச் செய்திகளை கேட்டு, கண்டு, நெஞ்சு கொதித்தேன். என் தமிழ் மண்ணுக்காக விம்மி அழுதேன். தமிழன்னையின் மார்பு மீது தமிழ் இளைஞர்கள் சிலரை, வேறு சில தமிழ் இளைஞர்கள் தள்ளிவிட்டு அவர்தம் நெஞ்சு மீது மிதித்தனர். இவர்கள் அனைவரும் எதிர் வரும் காலங்களில் நீதி மன்றங்களில் நின்று நீதியைப் பாதுகாப்பதற்குத தேவையான் அறிவு தேடும் அன்பு மாணவச்செல்வங்கள். கேடு கெட்ட செயல்.



சில அடிகள் தொலைவில் நமது தமிழ் நாட்டு, நாட்டு மக்களின் பாதுகாவலர்கள், கேட்டும் கேட்காதது போல், கண்டும் காணாதது போல் உயிரற்ற , உணர்வுகளற்ற அசையாப்பொருள் போல் சவ அமைதி காத்தனர். மரங்கள் இருந்திருந்தால் இலைகளை அசைத்து தன் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கும். நாய் இருந்திருந்தால் பாய்ந்து சென்று சிலரை கடித்திருக்கும். ஆனால் ஒரு காலத்தில் உலகத்தின் தலை சிறந்த பாதுகாவலர்களுக்கு இணையாக கருதப்பட்ட நமது தமிழ் நாட்டுப் பாதுகாவலர்கள், அந்நியனாய், அநியாயமனவனாய், கொடூரமானவனாய், கோழை கோமாளியாகி, தமிழ் நாட்டுக்கும், தமிழனுக்கும் இழுக்கு வர வைத்தனர்.



இவர்கள் இடம் மாற்றம் செய்யப்படலாம். செய்யச்சொன்னதை சரியாக செய்ததற்காக, அந்த இட மாற்றம் சரியான பரிசாகவும் இருக்கலாம். உண்மையில் அபராதமாகவும் இருக்கலாம். ஆனால் இது போதாது. இந்த அநீதியை, காட்டுமிராண்டித்தனத்தை, கல்லூரி வாயிலில் அரங்கேற்றிய மாணவர்களும், மாணவர்களல்லாத கைகூலிகள் மட்டுமன்றி, அங்கு நின்ற பாதுகாவலர்களும் கடுமையாகத் தண்டிக்கப்ப் பட வேண்டும்.



இது மட்டுமல்ல. கல்லூரியின் முதல்வர், கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும். விசாரணைகள் முடிந்து நியாயமான தீர்ப்பு கிடைக்கும் வரை தமிழ் நாட்டு முதல்வர், கலைஞர், தன் 'நெஞ்சுக்கு நீதி' எழுதுவதையும், பிரசுரம் செய்வதையும், விற்பனை செய்வதையும் முழுமையாக நிறுத்த வேண்டும்.



ஏனென்றால், தமிழகம் ஒரு அமைதிப் பூங்கா என்று பாராட்டிப் பாராட்டிப் பின்னர், உண்மையில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை இன்று இது போன்ற நிலைக்குத் தள்ளியதில் பெரும் பங்கு இந்த திராவிடர்களின் பெயரில் ஆரம்பித்த இக்கழகங்களையே சாரும்.

Tuesday, October 20, 2009

முற்போக்கு சிந்தனை - வருடம் 2013

உங்க பையன் என்ன படிக்கிறான்?


எம்.. கருணாநிதியின் சிந்தனைகள். பிச்சு உதர்றான். ஒரு வருஷமா 'பெண் குலத்தைப் பத்தி அவரோட சிந்தனைகள், செயல்கள்' ஜெயலலிதா ஆட்சியில் நள்ளிரவில் கைதானபோது அவருடைய சிந்தனைகளும் செயல்களும்', அதற்கும் மேலாக 'இலங்கைத்தமிழர்களுக்கு கலைஞர் ஆற்றிய தொண்டுகள்' அப்படின்னு பல விதமா தீவிர ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கான். எம்.ஏ. முது கலைப் பட்டத்தோட பி.ஹெச்.டி ஏ அவனுக்கு கெடச்சாலும் கெடச்சுடும்.


அருமை! அருமை! முக்கியமா அவன் எடுத்துக்கிட்ட தலைப்புகள் - உண்மையா சொல்றேன் உங்க பையன் அசத்திட்டான்.


அது மட்டுமா, அவரோட கடமை உணர்ச்சியப்பத்தி எழுதும்போது, அருமையான புகைப்படங்களைப் போட்டு அசத்திட்டான். முக்கியமா சொல்லணும்னா, ஏ.சி. பெட்டிகள் சூழ, மனைவிகள், மக்கட் செல்வங்கள் சூழ மெத்தையில் படுத்து சில மணி நேரங்கள் இலங்கைத்த் தமிழர்களுக்காக உண்ணா விரதம் இருந்தாரே - அது அவரது கடமை உணர்ச்சிக்குச் சான்று.



சட்டமன்றத்தில் எதிர்கட்சித்தலைவி ஜெயலலிதா வுக்கு நடந்த நிகழ்ச்சி கலைஞரோட உடன்பிறப்புகளின் கண்ணியத்த எவ்வளவு தெளிவா காட்டிச்சு. கட்டுப்பாடு, ஒரே ஒரு உதாரணம் போதும். சட்டக்கல்லூரி வாசல்ல கொலை வெறிக்காட்சி அவர் ஆட்சியில நடந்த பொது, அவரோட போலீசுங்க, ஒரு அடி முன்னால வைக்காம, உணர்ச்சி வசப்படாம, எவ்வளவு கட்டுப்போடோட இருந்தாங்க.


இதெல்லாம் பாராட்டாம சில பேரு வாய்க்கு வந்த படி பேசறாங்க, எழுதறாங்க. இதுக்கெல்லாம், சாட்டையடி கொடுப்பான், என் மகன் அவோனோட ஆராய்ச்சில.