Wednesday, March 11, 2009

தடி எடுத்தவன் தண்டல்காரன்

தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பார்கள். உண்மை. உண்மை. ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கை தெளிவாக்கிவிட்டது. சென்னை உயர் நீதி மன்றத்தில் நடந்த கலவரங்களுக்கு யார் காரணம் என்று. குற்றம் சாட்டப்பட்டவுடனே வெகுண்டு எழுந்தார்கள் நம் பண்பு மிகு வழக்கறிஞர்கள். வழக்கு ஆரம்பிக்கும் முன்னரே அவர்கள் தான் குற்றவாளிகள் என்று கை காட்டி, கூட்டம் போட்டு, கோஷம் போட்டு, குற்றத்தின் காரணத்தை திசை மாற்ற, குற்றத்தின் விதைகளை விதைத்தவர்களே வேஷம் போட்டு நாடகம் ஆடினார்கள். திரை விலகி விட்டது. முகத்திரை கிழிந்து விட்டது. இருந்தும் நாடகம் ஆடுகிறார்கள். சுதந்திர இந்தியா. ஆடுங்கள் ஆட்டம். அடங்கி விடும் ஒரு நாள். வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது இயற்கையின் நியதி.