Sunday, December 12, 2010

கம்பன் புகழ்கவிதை பாடுவோம்
வள்ளுவனை வான்சிறக்க வாழ்த்திடுவோம்
கண்ணகியின் கற்பினை வழிபடுவோம்
மேடைகளேறி அடுக்குமொழியில் அசத்திடுவோம் - ஆனால்
தனிவாழ்க்கையிலும், பொதுவாழ்விலும் நெறிதவறி
...கண்ணியம் கடந்து பொருளீட்டுவோம் - இதுதான்
தன்மானச்செயலென்று தலைகுனிவின்றிப் பிதற்றுவோம்
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்னின் தன்மானம்!
தன்மானத்திற்கு எதிரே எதுவும் கேள்வி எழுந்தால் தேட ஆரம்பிப்போம்
"நெஞ்சுக்கு நீதி"

Wednesday, December 8, 2010

வேற்றுமையில் ஒற்றுமை

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். எனது சரித்திர ஆசிரியர், மிகச்சிறப்பாக வகுப்பு நடத்துவார். அன்றைய தினத்திற்கான பாடங்கள் நடத்திய பிறகு, பத்து பதினைந்து நிமிடங்கள்

Sunday, May 30, 2010

முதலில் ஒழிப்போம் ஊழல்வாதிகளை!

மாவோவி்ஸ்டுகள் மற்றும் வேறு பல அமைப்புகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அப்பாவி மக்களின் உயிர் அழிந்து கொண்டிருக்கிறது. உடல்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. உள்துறை அமைச்சர் அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கிறார். அரசும், அரசியல் தலைவர்களும் பசப்பித்திரிகிறார்கள். நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறனுமின்றி வெட்கம் கெட்டு வாய் கூசாமல் வசனம் பேசித் திரிகிறார்கள்.

இன்று கலைஞர் சொன்னார்: மனித நேயமற்ற செயல் என்று. ஹிந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் இவர் கட்சியினர் செய்த மனித நேயமற்ற செயல்களை அவர் மறந்திருக்கலாம். இத்தள்ளாத வயதில் இது இயற்கை தான். பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து சாதாரண மக்களை கொன்ற செயல் பெரும் மனித நேய செயலோ? இக்கொடிய கொலை வெறிச்செயலில் இவர் தம் அன்பு மகனின், மத்திய அமைச்சரின் பங்கு என்ன என்று சொல்வாரா?

மேலும் சொன்னார் பொதுவுடைமை கொள்கையில் கலைஞருக்கு முழு உடன்பாடாம். உண்மைதான். பொது என்பது இவர்தம் இரண்டு மனைவிகளையும், மூன்று மனைவிகளின் மக்களையும் சார்ந்ததாக இருந்தால் பொதுவுடைமை, முழுவுடைமை தான்.

இன்றைய கேள்வி: இவ்வியக்கங்களை அடக்குவதற்கு ராணுவத்தை அனுப்பலாமா வேண்டாமா என்பதுதான். என்னுடைய எண்ணம், நம் ஊழல் அரசியல் தலைவர்களும், ஊழல் அரசு அதிகாரிகளும், ஊழல் வர்த்தகர்களும் தான் இது போன்ற சமுதாய அமைப்புகள் உருவாகுவதற்கு முக்கிய காரணம். எனவே தீர்வு இதுதான்: இவ்வூழல் வாதிகள் தங்களுடைய அனைத்து மறைத்து வைக்கப்பட்ட சொத்துக்களுடன், ஜார்கண்ட், சத்திஸ்கத், மற்றும் ஒரிசா காடுகளில் இறக்கிவிடப்பட வேண்டும்.

Sunday, May 23, 2010

பேச்சு, வெறும் வெட்டிப் பேச்சு!

மாவோவிஸ்டுகளின் கொலை வெறித் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தவறாமல் அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கிறார். முன்னேற்றம் ஏதும் இல்லை. கொலை வெறித் தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. மேலும் அதிகரித்துக் கொண்டிருக் கின்றன.


நமது இந்திய சமுதாயத்திற்கு பெரும் இன்னல் விளைவிக்கும் சமுதாய எதிர்ப்பு அமைப்புகளை நேர் நோக்கும் திண்ணமும், பக்குவமும், இதற்கும் மேலாக நேர்மைத் திறனும், இன்றைய அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் அமைப்புக்கும் சிறிதளவும் கிடையாது. மேலும் சொல்ல வேண்டுமானால் மாவோவிஸ்ட் போன்ற அமைப்புகள் உருவாகுவதற்கே இவர்கள் தான் காரணம். ஊழல் அரசியல் தலைவர்கள், அவர்களோடு இணைந்து நாட்டை சூறையாடும் அரசு அதிகாரிகள், மற்றும் ஊழல் வர்த்தகர்கள். நம் நாட்டிற்கு இவர்கள் இழைத்த அநீதி, கொடுமை, மாவோவிஸ்டுகள் இன்னும் நூறு வருடங்களில் கூட இழைத்து விட முடியாது. மாவோவிஸ்டுகளுக்கு முன்னரே வேரறுத்துக் களையப்பட வேண்டியவர்கள் ஊழல் அரசியல் வாதிகள், ஊழல் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழல் வர்த்தகர்கள். இவர்களை வேரறுக்க ஒரு புதிய இயக்கம் நம் நாட்டில் தேவை. கூடிய சீக்கிரம் உருவாகும் என்ற நம்பிக்கை சில பல நாட்களாக வளர்ந்து வருகிறது.

ராஜினாமா தமாசு!

மங்களூரில் நூற்றி ஐம்பதுக்கும் மேலோர் விமான விபத்தில் மரணம். துயரமான செய்தி. அதைத் தொடர்ந்து ஒரு தமாசு செய்தி. அமைச்சர் ப்ரஃபுல் படேல் ராஜினாமா. அதை ஏற்க மறுத்தார் பிரதமர். பிரதமர் புத்திசாலி. திறமை அடிப்படையில் உற்று நோக்கினால் இன்றைய மந்திரி சபையில் பலர் பதவியில் இருக்க தகுதி அற்றவர்கள். ஒவ்வொருவரிடமும் ராஜினாமாவை ஏற்றால், மிச்சம் அவரிடம் இரண்டு மூன்று பேர்களே தங்குவார்கள். சிங் இஸ் தி கிங்!

Friday, May 21, 2010

காலாவதிப் பண்டங்கள்

கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தினம் தோறும் நாம் செய்தித் தாள்களில் காலாவதி மருந்துகள் மற்றும் காலாவதி உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதைப் பற்றிப் படிக்கிறோம். நன்று.

காலாவதியான அரசியல் வாதிகளைப்பற்றி என் எண்ணம் போய்க்கொண்டிருக்கிறது. பல காலாவதி அரசியல்வாதிகள் இன்னமும் தமிழ் நாட்டு அரசியலிலும், மற்ற மாவட்ட அரசியலிலும், மத்திய அரசியலிலும் குட்டையை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை இனம் கண்டு கொண்டு மக்கள் இவர்களை அரசியல் களத்திலிருந்து நீக்கினால் நாட்டிற்கு நல்லது, இளைய சமுதாயத்தினற்கு நல்லது.

Saturday, May 8, 2010

ஊழலின் விளைவிடம்

ஆயிரத்து ஐம்பதுகளில் நிலங்களை உழுதனர். ஆழ உழுவதற்கு அவர்களுக்கு உதவியவை கடவுள் எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு. நன்கு உழுது முடிந்ததும், விதைகளை சுறு சுறுப்பாக விதைக்க ஆரம்பித்தனர். ஊழல் விதைகளை. ஆட்சியில் அமர்ந்தனர்.

ஆனால் அண்ணா என்று ஒரு தலைவர் இருந்தார். சில பல தவறுகள் இருந்தாலும், தனக்காகவும், தன குடும்பத்திற்காகவும் ஊழல் வழிகளில் சொத்து சேர்க்க விரும்பி இருக்கவில்லை, அதற்குண்டான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை.

அண்ணாதுரை அவர்களின் இறுதி காலத்திற்காகக் காத்திருந்தனர். ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஒன்பதில் அவர் இறந்ததும், கலைஞர் சோகக்கவிதை பாடினார். முன்னமே எதிர்பார்த்து தயாரித்து வைத்த கவிதைப் பேச்சு போல் ஒலித்தது. தமிழ்ப் புலமையாலும், பேச்சுத்திறனாலும் பதவியைப் பிடித்தார். முதலமைச்சர் ஆனார்.

தஞ்சை மண்ணின் மைந்தன். விவ்சாயக்கலை குருதியிலும், எலும்புகளிலும், சதைப்பிண்டங்களிலும் வேரூன்றி இருக்க வேண்டும். அரசியல் என்னும் பொது நிலத்தில் வேளாண்மை துவங்கி விட்டது. தமிழ் மக்களின் மனமென்னும் நிலத்தில் விதைத்த ஹிந்தி எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவு வளர்ப்பு என்னும் பசப்புகள், தமிழனை பல வித போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கியது. நிழற் படங்கள், தொலைக்காட்சி, மது மற்றும், இலவசப் பொருட்கள். இன்றைய சாதாரண தமிழன் இவற்றுக்கு போதையாகி அல்லல் படுவது அன்றாட செய்தி. தன்மானத்தில் சிறந்தவன் தமிழன் என்று பேசிப் பேசி அவனது தன்மானத்தை ஒழிப்பதில் வெகுவாகச் செயல் பட்டனர். அமைதிப் பூங்கா தமிழகம் என்று பேசியே, தமிழ் நாட்டின் அமைதியை அழிப்பதில் சிறப்பாக செயல் பட்டனர். செயல் பட்டுக் கொண்டு இருக்கின்றனர். சட்டக்கல்லூரி அராஜகம் முதல், காவலர்கள் வழக்கறிஞர்கள் மோதல் தொடர்ந்து பற்பல செயல்கள். ஊழலுக்கும், அராஜகங்களுக்கும் பெயர் போன பல வட மாநில மக்களே வெட்கித் தலை குனிந்திருக்க வேண்டும்.

இன்று அறுவடை காலம். தினமும் பொங்கல் தான். ஊழலை விதைத்தார்கள். அரசியல் செல்வாக்கையும், பதவிகளையும், மற்றும் பல செல்வங்களையும் அறுவடை செய்கிறார்கள். நெருங்கிய மற்றும் பறந்து விரிந்த குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், வோட்டுக்கு பணம் என்ற பாசன நீர் செலுத்தி ஊழலை தமிழ் நாடு முழுவதும் பரப்பி விட்டார்கள்.

எதிர்காலத்தில் நிலத்துக்கு சொந்தக்காரர் யார் என்ற கேள்விக்கு விடை தருவது மிகவும் கடினமான செயல். மூன்று மனைவிகள், ஆறு மக்கள் செல்வங்கள் என்னும்பொழுது சிக்கல் தான். விதித்த வினைகளை அவர் அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது. அறுவடை செய்தே தீர வேண்டும். கண்ணதாசன் அன்றே சொன்னார்:
விதிஎன்று ஒன்றினை வெல்வதும் உண்டு காண்,
வெல்வதும் உன் விதியென வேதன் விதித்ததால்.

Friday, April 23, 2010

பெரியசாமி எங்கே?

நான் திருச்சியில் பள்ளிப் படிப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அந்த பள்ளி பல விதங்களில் பெருமை பெற்றிருந்தது. அனுபவம் மிகுந்த, தரமான ஆசிரியர்கள். நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள். வருடம் தவறாமல் உயர் எண்ணிக்கையில் தேர்வுகள்.

ஏழாம் வகுப்பில் திடீரென்று பெரியசாமி வந்து சேர்ந்தான். ஆச்சரியம் என்ன என்றால் பெரியசாமி அந்த நாள் வரை பள்ளிக்குப் போனதே இல்லை. படித்ததும் இல்லை. வாய்க்கால் ஓரத்தில் நின்று கொண்டு வருபவர் போவோர்களை வம்பு செய்வதுதான் அவன் முழு நேர வேலை. அவன் அப்பா ஊரில் பெரிய ஆள். ஊரில் இருந்த எல்லா சாராய, கள்ளுக் கடைகளுக்கும் அவர் தான் முதலாளி. ஊரில் ஒரு பய அவன் குடும்பத்தில் யாரையும் கேள்வி கேட்க முடியாது.

பெரியசாமியின் அப்பா கோவிந்தசாமிக்கு திடீரென்று ஒரு ஆசை. தான் தான் பள்ளிக்குப் போனதில்லை. தன மகனாவது பள்ளியில் படிக்க வேண்டுமென்று. எங்கள் பள்ளி தலைமை ஆசிரியரைப் பார்த்து இந்த விஷயத்தைச் சொன்னார். தலைமை ஆசிரியர் மோகன் சார் பதறி விட்டார். ஆனால் சொல்லவும் முடியவில்லை மெல்லவும் முடியவில்லை. கோவிந்தசாமி அவரிடம் "என் மகன் வயசு பசங்க எந்த வகுப்பில படிக்கிறாங்க?" மோகன் சார் "ஏழாவது வகுப்பு!" என்று சொல்லவும், கோவிந்தசாமி, பெரியசாமியை ஏழாவது வகுப்பில் உக்கார வைத்து விட்டுப் போயிட்டார்.

பரிதாபம் என்ன வென்றால், பெரியசாமிக்கு வகுப்புல நடக்கறது ஒரு எழவும் புரியல. பின்னால உக்காந்துகிட்டு நடு நடுல குரல் கொடுப்பான். குரல் வரலேன்னா தூங்கறான்னு அர்த்தம்.


இப்ப என்னன்னா அவன் ஒரு வாரமா வகுப்புக்கு வரதில்ல. தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியரிடம் கேட்டார் "பெரியசாமி விடுமுறை விண்ணப்பம் குடுத்திருக்கிறானா? இல்லையா?" ஆசிரியர் முகுந்தன் மௌனமாக சிரித்தார். அவர் சிரிப்பின் அர்த்தம்: பெரியசாமி விடுமுறை விண்ணப்பம் குடுத்தா என்ன குடுக்காட்டி என்ன? வகுப்புல வந்து ஒண்ணும் புரியாம உக்காந்திருக்க, வந்தா என்ன வராட்டி என்ன? இதுக்கு ஏன் சார் என்ன கேள்வி கேக்கறீங்க?


Tuesday, April 20, 2010

தண்டனை உறுதி!

கீழுள்ளது நான் ஏற்கனவே எழுதியிருந்தது. நேற்று சுப்ரீம் கோர்ட், தண்டனையை உறுதி செய்து விட்டது. மனு ஷர்மாவுக்கு ஆயுள் தண்டனை, விகாஸ் யாதவ் மற்றும் டோனி கில்லுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை. வாழ்க மக்கள் நாயகம், வாழ்க நீதித்துறை. செத்தொழிக கேடு கேட்ட அரசியல்வாதிகளின் அவர்தம் குடும்பத்தினரின் ஈனச் செயல்கள்.


Tuesday, November 10, 2009

உயர் சமூகம், அதன் கேடுகெட்ட உறுப்பினர்கள்

மூன்று மாதங்களுக்கு முன்னர் எழுதியது:

வினோத் ஷர்மா என்பவன் ஒரு முன்னாள் ஹரியானா மாநில அமைச்சர். அவனோட தறுதலை பிள்ளை மனு ஷர்மா. நண்பர்களுடன் உயர் விலை கார்களில் ஊர் சுற்றுவதும், நாளையும் இரவையும், மதுவுடனும், தரம் கெட்ட மாதர்களுடனும் போக்குவதுதான் இது போன்ற பல உயர் வகுப்பு, பொருளாதாரத்தில் உயர் வகுப்பு தருதலைப்பிள்ளைகளின் பொழுதுபோக்கு.




அது போன்றே ஒரு இரவு திரிந்து அலைந்தவன், ஜெச்சிக்கா லால் என்பவளை சுட்டுக்கொன்றான். அவனுடன் கூடவே இருந்தனர் அமரீந்தர் சிங், அவனுடைய நண்பன் ஆலோக் கன்னா மற்றும் விகாஸ் யாதவ். இதில் விகாஸ் யாதவ் என்பவன் உத்தர் பிரதேசத்தைச்சேர்ந்த ஒரு ராஜ்ய சபா உறுப்பினரின் தறுதலை மகன்.




இக்கொலைக்கு பிறகு, வேறு வழியில்லாமல் மனு போலீசில் சரணடைந்தான். கொன்றதாக வாக்குமூலம் கொடுத்தான். பின்னர் தனக்கும் ஜெஸ்ஸிகா லால் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றான். தருதலைப்பிள்ளையின் தரம் கெட்ட அப்பன் சாட்சியங்களை விலை கொடுத்து வாங்க முயற்சித்தான். பிடி பட்டான். தன் அமைச்சர் பதவியை விட்டு விலகினான்.



கொலையாளிக்கு வாதாட விலை உயர் சட்ட நிபுணர்கள். அவனுக்காக வாதாடியது மட்டுமல்லாமல் தரம் கெட்டு பதப்பித் திரிந்தார்கள். மக்கள் முட்டாள்கள் என்றனர். குற்றத்தை திசை திருப்ப முயற்சித்தனர். கேடு கெட்ட காவலர்கள் துணை போனார்கள்.



ஷயன் முன்ஷி என்பவன் கொல்கத்தாவில் ஒரு கண்மருத்துவரின் மகன். உயர் தர பள்ளிகளில் பயின்றவன். கொலையை நேரில் பார்த்தவன். முதலில் பார்த்ததாகச்சொன்னவன், பிறகு மாற்றி மாற்றி பேசினான். பெண்டாட்டியுடன் நாட்டை விட்டு தப்பி ஓட முயன்றான். விமான மையத்தில் பிடி பட்டான்.



காவலர்கள் சோரம் போனார்கள். வழக்கறிஞர்கள் உண்மை அதாவது அன்னையை விற்கத் துணிந்தார்கள், காசுக்காக. நீதிபதிகள் தடுமாறினார்கள். பதவிகளில் இருப்பவர்களின் அதிகாரத்திற்கு பயந்தார்கள். மக்களும், பத்திரிக்கை உலகமும் வெகுண்டு எழுந்தனர். மனு ஷர்மா ஆயுள் தண்டனை பெற்றான். அவன் நண்பர்கள், கொலைக்கு உடந்தையானவர்கள் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர்.



வினோத் ஷர்மா, தருதலைப்பிள்ளையின் கேடு கெட்ட தந்தை இன்னமும் அரசியல் வியாபாரம் பண்ணிக்கொண்டுதானிருப்பான் என்று தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவில் எதுவும் சாத்தியம்.

Sunday, April 18, 2010

நரேந்திர மோதி எங்கே, தமிழக முதல்வர் எங்கே?

உலகத்தமிழர்களை உசுப்பியுள்ளார் மோடி - மோதி என்று இருந்திருக்க வேண்டும். பரவாயில்லை. இது இன்றைய தினமலரில் ஒரு தலைப்புச் செய்தி. இச்செய்தியின் படி "வரும் மே மாதம் முதல் தேதி, குஜராத் மாநில பொன் விழா துவங்குகிறது. இவ்விழாவை வரும் இருபத்து ஒன்பதாம் தேதி முதல் மூன்று நாட்கள் அமர்க்களமாகக் கொண்டாட குஜராத் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. விழாவில் பங்கேற்க வருமாறு, நாடு முழுவதும் வாழும் குஜராத்திகளையும், வெளி நாடு வாழ் குஜராத்தியர்களையும் மோடி அழைப்பு விடுத்துள்ளார். .......................... சில நாட்களுக்கு முன், குஜராத் மாநில உள்ளாட்சி மற்றும் உணவுத் துறை அமைச்சர் நரோத்தம் படேல் தலைமியிலான குழுவினர் தமிழகம் வந்தனர். சென்னையில் வசிக்கும் குஜராத்தியர்களை சந்தித்து விழாவிற்கு அழைப்பு விடுத்துச் சென்றுள்ளனர். இக்குழுவில் குஜராத் கட்ச் மாவட்ட கலெக்டராக உள்ள தென்னரசன் இடம் பிடித்திருந்தார்".

இது தான் செய்தி. மேலும் தினமலர் நாளிதழ் இந்நடவடிக்கை உலகத்தமிழ் மக்களுக்கு தமிழ் நாடு முதல்வரிடமிருந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கிறது.

எதிர்பார்க்கலாம், தவறு ஒன்றும் இல்லை. யாரிடமிருந்து என்பதுதான் கேள்வி. எதிர்பார்ப்பவர்கள் யார் என்பது தான் கேள்வி. வோட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணம் எதிர்பார்க்கும் சமுதாயம் ஒன்று தமிழகத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல் கட்சிகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய ஒரு சூழ்நிலையில் அந்நிய மண்ணின் வாசனை பிடித்தும், தூய தமிழ் மண்ணுக்காக ஏங்கும் எந்த ஒரு தன்மானத் தமிழனும், இன்றைய தமிழ் நாட்டு அரசு சார்ந்த செயல் திட்டங்களில் இணைய விரும்ப மாட்டான். தமிழ் நாட்டின் முதல்வர் யார்? குஜராத் முதல்வர் மோதி யார்? வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

தமிழக முதல்வர் மு.கருணாநிதி மூன்று முறை மணம் முடித்தவர்
குஜராத் முதல்வர் நரேந்த்ர மோதி கட்டை பிரும்மச்சாரி

தமிழக முதல்வரின் நேர் உறவினர்களும், விரிந்த உறவினர்களும், பணமும் பெரும் பொருள் லாபங்களும், பற்பல பதவிகளும் ஈட்டியவர்கள், ஈட்டிக் கொண்டிருப்பவர்கள்.

நரேந்திர மோதி அவர்களின் தாயார் இன்னமும் ஒரு நடுத்தர சமூகத்தில் ஒரு சாதாரண உறுப்பினராக வாழ்ந்து வருபவர். அவரது சகோதரர் அரசு அலுவலில் இருந்து ஓய்வு பெற்று, இன்றைய தினமும் வெகு மக்கள் போக்குவரத்தில், அதாவது நகரப் பேருந்துகளில் பயணம் செய்பவர்.


தமிழக முதல்வருக்கு தமிழன் தமிழச்சி என்பதற்கு பொருள், மு.க.ஸ்டாலின், அழகிரி மற்றும் கனி மொழி.

குஜராத் முதல்வருக்கு குஜராத்தி என்றால், குஜராத் மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு இந்தியனும்.

தமிழக முதல்வருக்கு தன், தன் மக்களின் வளர்ச்சியே தமிழ் நாட்டின் வளர்ச்சி.

குஜராத் முதல்வருக்கு குஜராத்தின் வளர்ச்சியே தன் வளர்ச்சி.

தமிழக முதல்வர் ஒரு சாதாரண நிகழ் கால அரசியல்வாதி.

குஜராத் முதல்வர் ஒரு நாட்டுப்பற்று கொண்ட உயர் மனிதன்.

மக்களே, குஜராத் முதல்வர் செய்யும் செயல்களை, திராவிட இயக்கத் தலைவரகள், தலைவிகள் ஒரு போதும் செய்து விட முடியாது.

குஜராத் முதல்வர் ஒரு நாட்டுப்பற்று கொண்ட சமுதாயத்தை உருவாக்கி, தன் வழியில் திருப்பிக்கொண்டிருக்கிறார்.

தமிழக முதல்வர் ஒரு ஊழல் சமூகத்தை உருவாக்கி, தன் வழியில் திருப்பிக் கொண்டிருக்கிறார்.

வாழ்க குஜராத்! வளர்க மோதி அவர்கள் புகழ்!






Monday, April 12, 2010

குஜராத் மாநிலத்திற்கு புகழ்



குஜராத் மாநிலத்தில் இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டு நிகழ்ந்த நில அதிர்வுப் பேரழிவைத் தொடர்ந்து Gujarat State Disaster Management Authority, குறுகிய காலக்கட்டத்தில், பேரழிவு கண்ட கட்ச் பிரதேசத்தை வெகு சிறப்பாக புனரமைத்தது. இதைத்தொடர்ந்து இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு அவர்களுக்கு கிட்டிய உலக அளவிலான விருதின் விவரங்களை அவர்கள் ஏட்டின் நகலெடுத்து கீழே கொடுத்துள்ளேன்.

GSDMA has been awarded the GOLD AWARD by the Commonwealth Association for Public Administration & Management (CAPAM) for the initiatives undertaken in governance. The theme for the Fourth Biennial International Innovations Award Programme - 2004 was "Innovations in Governance". GSDMA has taken many innovative approaches on reconstruction and rehabilitation as well as long-term disaster mitigation planning in the State after the 2001 earthquake. With this background, GSDMA applied for the Fourth Biennial CAPAM International Innovations Awards Programme - 2004 with an entry titled "Gujarat Emergency Earthquake Reconstruction Project (GEERP)". CAPAM received 154 submissions worldwide for the theme "Innovations in Governance".



இந்த விருதைப் பெற்றது ஒரு புறம் இருக்கட்டும். GSDMA ஆற்றிய பணி மிகவும் உயர் தரமானது. இதற்கு முக்கிய காரணம், முதல்வர் மோதி அவர்களின் ஆதரவுடன் உயர் நோக்குடன் பணியாற்றிய அரசு அதிகாரிகள். இவ்வதிகாரிகளில் முக்கிய பங்கு ஒரு தமிழருக்கும் உண்டு. அவர் பெயர் திருப்புகழ். பெயரில் புகழும், சிந்தனை மற்றும் செயல்களில் நேர்மையும் ஒருங்கே அமைந்த உயர் தமிழர் அவர். உயர் இந்தியர் அவர். வாழ்க குஜராத் புகழ். வளர்க இம்மாநில நேர்மை உயர் அதிகாரிகள்.

தயவு செய்து தமிழ் நாட்டில் நடக்கும் கேலிக்கூத்துகளை நினைத்து ஒப்பிட்டு வருத்தப்படாதீர்கள். காசுக்கு ஓட்டுப் போடுபவர்களுக்கு அது போன்று தலைவர்கள் தான் கிடைப்பார்கள். அத்தலைவர்களுக்கு ஊழல் அதிகாரிகள் தான் ஊழியம் செய்வார்கள்.

Sunday, April 11, 2010

போலி மருந்து, காலாவதி மருந்து

தமிழ் நாட்டில் பரபரப்பு. போலி மருந்து விற்பனை. காலாவதி மருந்து புதுப்பிக்கப்பட்டு விற்பனை. மீனாட்சி சுந்தரம் மற்றும் பலபேர் கைது. அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர், விலை உயர்ந்த மருந்துகளை கடத்தினாள், கைது ஆனாள். தினமலரில் தினமும் தலைப்புச் செய்திகள். புகைப்படங்கள்.


நான் மற்றொரு தினம், தினமலர் செய்தித்தாளில், துப்புரவு பணியாளர் தனலட்சுமியின் புகைப்படம் பார்த்தேன். குனிந்த தலை, அவமானத்தால் குறுகிய கண்கள். சூழ்நிலைகளின் ஆளுகைக்கு உட்பட்டு குற்றம் செய்த குறுகுறுப்பு. அதனுடன் கலந்த பயம். தான் செய்த குற்றங்களுடன் இணைந்தவர்களின் பெயர்களை சொல்லலாமா, சொல்லக்கூடாதா என்ற தவிப்பு. இதுதான் இன்று அந்த கடை நிலை ஊழியரின் நிலையாக இருக்கும்.

இதே நிலையில் ஒரு மெத்தப்படித்த உயர் அதிகாரி இருந்திருந்தால், வாய் கிழிய சிரித்து, கை அசைத்து வெற்றிக்களிப்பில் போஸ் கொடுப்பான். வெட்கம் மானமின்றி வேண்டாதவர்களின் சதிஎன்று பிதற்றுவான். இது தான் இன்றைய இந்தியா. இவன்தான் இன்றைய தன்மான இந்தியன்.


நடந்த குளறுபடிகளுக்கு முக்கிய காரணம் யார்?

இன்று தினமலர் செய்தித்தாளின் தலைப்புச்செய்தி இதற்கான பதிலை தெளிவாகத் தருகிறது.

தலைப்பு இதுதான்: காலாவதி மருந்து விவகாரம் - போலீஸ் சுகாதாரத்துறை மோதல்.

குற்றச்சாற்று - சுகாதாரத்துறை சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை.

மருந்துக் கட்டுப்பட்டு அதிகாரி இளங்கோ தலைமையிலான மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையினர் சென்னை எழும்பூரைச் சேர்ந்த பிரதீப் சோர்டியா மற்றும் சஞ்சய் குமாரைப் பிடித்து காலாவதி மருந்துகளைக் கைப்பற்றினர். பின்னர் போலீசில் புகார் அளிக்க தாமதித்தனர். இதை சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் ஒப்புக் கொண்டுள்ளார். தாமதம் ஏன்?

பொதுவாக இது போன்ற விவகாரங்களில் இந்தியக் குடிமகன் என்ற பொறுப்பில் நான் அறிந்தவை இவை: தாமதம் என்றால் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று பொருள். பின்னர் போலீசில் புகார் என்றால், பேச்சு வார்த்தை தங்களுக்கு சாதகமாக இல்லை, அல்லது, விவகாரம் தங்கள் கட்டுப்பாட்டை மீறிப் போய் விட்டது என்று பொருள். போலீசில் புகார் செய்வது மட்டுமே சாத்தியம். இதையும் மீறி இன்னொரு காரணமும் இருக்கலாம். இதுவும் பேச்சு வார்த்தை முடிவில் வருவது. மாட்டிக்கொள். வழக்கு நிற்காமல் செய்து விடுவோம்.

நமது இந்திய மக்கள் குடியுரிமை அரசும், அரசைச் சார்ந்த அதிகாரிகளும் ஊழல் யானைகளை விட்டு ஈக்களையும், கொசுக்களையும் அடிப்பதற்கே நேரத்தையும், மக்கள் வரிப்பணத்தையும் செலவு செய்வது அறுபத்து மூன்று ஆண்டுகால சாதனை. தனலட்சுமி ஒரு கொசு. ஊழல் வெறி யானைகளை பிடித்து அடக்குங்கள். சிறையில் அடையுங்கள். பாராட்டுவோம்.

வாழ்க இந்தியா! வளர்க இந்திய மக்கள் குடியுரிமை! வாருங்கள் அடக்குவோம் ஊழல் வெறி யானைகளை!

Sunday, March 28, 2010

தலை சிறந்த முதல்வர்! தலை சிறந்த இந்தியன்!


இன்றைய இந்தியாவில் கருணாநிதிகளுக்கு இடையே, மாயாவதிகளுக்கு இடையே, ஷிபு சோரன்களுக்கு இடையே, ஒரு வித்தியாசமான முதல்வர். ஒரு வித்தியாசமான இந்தியர். அவரை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமானால், உணர வேண்டுமானால், குஜராத் என்னும் மாநிலத்தில் வாழ வேண்டும். அல்லது குறைந்த பட்சம், நீண்ட நாட்கள் குஜராத்தில் வாழ்பவர்களிடமிருந்து அறிந்து கொள்ளவேண்டும். நான் ஒரு குஜராத்தில் வாழும் தமிழன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.

நேற்று இம்முதல்வர் ஒரு சரித்திரம் படைத்தார். இந்தியாவின் தலைமை நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வு குழுவின் முன் கடுமையான், பல மணிநேரங்கள் நீண்ட, கேள்விக் கணைகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டார். கிட்டத்தட்ட நள்ளிரவு நேரத்தில் ஒரு நாயகனாக வெளி வந்தார்.

இவர் அக்குழுவின் முன் நிறுத்தப்பட்டது, தன குடும்பத்திற்காக ஊழல் வழிகளில், பெருமளவில் சொத்து சேர்த்தற்காக அல்ல. ஒரு பெட்டியுடன் இரண்டு மூண்டு உடைகளுடன் நகரத்திற்கு வந்து, அரசியல் வாழ்வில் புகுந்து, பல பெண்களை மணம் புரிந்து, தன பெண் பிள்ளைகளுக்கும், விரிந்து பரந்த உறவினர்களுக்கும் பதவிகளும், மிகப்பெருமளவில் பணமும் சேர்த்து உல்லாச வாழ்க்கை வாழ வழி வகுத்ததற்காக அல்ல. அது போன்ற கேடு கேட்ட அரசியல் வாதி ரகத்தைச் சேர்ந்தவரல்ல நரேந்திர மோதி.

நாடு சுதந்திரமடைந்தும் பல வருடங்கள், குஜராத் மக்கள், தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தில், தீய வழி நடத்தப்பட்ட சிலரின் செயல்களால், பெரிதும் அவதிக்கு உள்ளானர். அங்கும் இங்குமாக தொடர்ந்து கொல்லப்பட்டனர். காங்கிரஸ் அரசினர், வாக்குகள் வேண்டி மௌனம் சாதித்தனர். கோத்ரா புகைவண்டி எரிப்பு ஒரு ஊக்கி. மக்கள் வெகுண்டு எழுந்தனர். நடந்தவை உணர்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடுகள்.

இன்று மோதியை எதிர்த்துப் பேசும் காங்கிரஸ் கட்சியனருக்கு, வாய் திறந்து பேச எந்த வித அருகதையும் கிடையாது. இருபத்தாறு வருடங்களுக்கு முன்னர் இந்திரா காந்தி அவர்களே ஊட்டி வளர்த்த ஒரு குழுவினரினால் கொல்லப்பட்ட பொழுது நடந்தது என்ன? இந்திய நாட்டுக்கு பெரு வாரியாக ரத்தம் சிந்தும் ஒரு சமூகத்தினர், வீடு புகுந்து அடித்துக் கொல்லப்பட்டனர். அவ்வினப்பெண்களின் கற்பு சூறையாடப் பட்டது. சஜ்ஜன் குமார் போன்ற காங்கிரம் தலைவர்கள் இவற்றை வழி நின்று நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டனர். சஜ்ஜன் குமார் முன் ஜாமீன் பெற்றான். தலை மறைவானான். இன்று வரை தண்டிக்கப்படவில்லை.

குஜராத்தில் இன்னலுற்ற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக, நீங்கள் கண்ணீர் சிந்துபவராக இருந்தால் நான் உங்களிடம் கேட்க விரும்புவது இதுதான். நம் இந்திய நாட்டின் பாதுகாப்பு படைகளில் பெருமளவு பங்கு பெற்று, நாட்டிற்கு தன்னலமற்ற சேவை செய்யும் ஒரு சமூகத்தினருக்காக நீங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினீர்களா? இல்லையென்றேல், உங்கள் செயல் ஒரு பசப்பு. பொய்யானது. ஒரு சமூக அநீதி. இது போன்ற மக்களின் செயல்கள் நாடுப்பட்று இல்லாத ஒரு சமூகத்தினை உண்டாக்கிக் கொண்ட்ரிருக்கிறது.

நரேந்திர மோதி ஒரு உண்மையான மனிதர். குஜராத்தில் வாழும் அனைவரையும், மொழி, மத, இன வேறுபாடன்றி, குஜராத்தியாக கருதுபவர். அவர் மூச்சு, எண்ணம், உணர்வு, செயல், அனைத்துமே குஜராத்தின் முன்னேற்றத்தை முன்னிறுத்தியவை. அவர் ஒரு நிகரில்லாத் தலைவர். அவர் ஆட்சி பீடத்தில் இருக்கும் மாநிலத்தில் வாழ நாங்கள் பெருமைப் படுகிறோம்.

கருணாநிதிகளும், மாயாவதிகளும், ஷிபு சோரன்களும் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் வாழும் நிலை ஏற்படாததற்கு நன்றி கூறுகிறோம். மோதி என்னும் தலை சிறந்த இந்தியன், நாட்டுப் பற்று கொண்ட ஒரு அரசியல் தலைவன் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறோம்.

வாழ்க மோதி! வாழ்க குஜராத்! வாழ்க குஜராத் நன்மக்கள்!


Long Live Narendra Modi


Shri.Narendra Modi is the first Chief Minister in India to present himself for SIT investigation. Not just that he was present. He put himself through the ordeal of getting questioned over several hours, from noon to almost midnight. He is a Chief Minister Par excellence. And as a Gujarat Tamil I salute him.


Remember readers, he was not grilled for corruption. He was grilled for an instantaneous people upheaval [A state of violent disturbance and disorder (as in politics or social conditions generally)], towards the wrongs meted out to them over generations. Congress has no moral backing to ridicule him.


In 1984, when Indra Gandhi was assassinated, by the people she nurtured and grew, the congressmen unleashed atrocities on our beloved sikh brothers and sisters, Sajjan Kumar, a congress MP was accused for the attacks. He took anticipatory bail. He was declared absconding. 16 years on and nothing has happened. Want to know more, go to Delhi and other Sikh dominated regions in the country and listen to their sorrowful stories. You will know what the congressmen did to the men who form the core of our defense forces. Listen to the sorrowful stories of the Sikh women, who have given birth to those courageous, selfless warriors defending our country.

Amongst those who read this article, those who have not shed their tears for the Sikh men and women who have laid their lives unjustly, later shedding tears for their Muslim brethren in Gujarat are the pseudo secularists. And these are the people, who are responsible for nurturing the non patriotic Indian Citizens.

Narendra Modi is simply great. He is a man of action. He is a Patriot. Neither he has made the state politics a family business like Karunanidhi of Tamilnadu, or he has performed the shameless acts of wearing currency notes and building monuments for self like Mayawati of Uttar Pradesh. He is certainly a Chief Minister par excellence. He breaths Gujarat development . He speaks Gujarat development. He acts in the interest of Gujarat. He considers each one living in Gujarat a Gujarati. Whatever the language one speaks. Whatever the caste, creed or community he belongs to.

We are happy that we do not live in the states of Karunanidhis, Mayawatis, and Shibu Sorens. We are Proud that we live in the state headed by Shri.Narendra Modi.

Long Live Modi! Long Live Gujarat! Long Live Gujaratis!

Saturday, January 9, 2010

விழித்தெழு இந்தியா. விழித்தெழு!

ரூபாய் ஆயிரம் கோடி மோசடி.

Friday, January 8, 2010

விழித்தெழு, இந்தியா விழித்தெழு!

வெடிகுண்டு வீசி எஸ்.. படுகொலை, அமைச்சர்களுக்கு முன்பாக பயங்கரம். இது இன்றைய தமிழ் செய்தித்தாளில் தலைப்புச் செய்தி. திராவிடர் கழகங்களின் ஆட்சியில் தமிழ் மண் ரத்தம் சுவைத்துக் கொண்டிருக்கிறது. நடக்க வேண்டியதுதான் நடந்து கொண்டிருக்கிறது. நாற்பது வருடங்களுக்கு முன்னர், ஹிந்தி போராட்டம் என்ற பெயரில், பார்ப்பன எதிர்ப்பு என்ற பெயரில், கழகங்கள் கட்டவிழ்த்துவிட்ட, அராஜகங்கள் சுதந்திர இந்திய சரித்திரத்தில் ஒரு முன்னோடி. அன்று இவர்கள் சொன்னார்கள். தமிழ் நாடு அமைதிப் பூங்கா என்று. அன்றே ஒவ்வொரு தமிழனுக்கும் புரிந்திருக்க வேண்டும். இவ்வமைதியை அழிக்காமல் விட மாட்டார்கள் இவர்கள் என்று. உண்மையில் பார்த்தால் இன்று, ஊழலிலும், அராஜக நடவடிக்கைகளிலும், சமூகக் குற்றங்களிலும், வட இந்திய மாநிலங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் தமிழ் நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. கழகங்களின், தன மானத் தலைவர்களின் மிகப்பெரும் காணிக்கை இது.

தூங்கியது போதும் தமிழா, விழித்தெழு!


விழித்தெழு இந்தியா, விழித்தெழு!

விழித்தெழு இந்தியா, விழித்தெழு!

ஹரியானா மாநிலத்தில் ராதோட் என்னும் உயர் போலீஸ் அதிகாரி. பெரும்பாலான அரசு அதிகாரிகளுக்கு இருக்கும் மமதை. தான் நினைத்ததைச் செய்யலாம் என்ற அதி சுதந்திரப் போக்கு. செயல். இதன் உரு வடிவம், டென்னிஸ் வீராங்கனை ருசிகா என்ன்ற பெயர் கொண்ட பதினான்கு வயதுடைய பெண்ணின் மீது அவன் கொண்ட காம வெறி. அவள் மீது அவன் செய்த பலாத்காரம். அவள் பணிந்து போக வில்லை. வெகுண்டு எழுந்தாள். தப்பி ஓடினாள். அவள் உயிர் தோழி ஆராதனா, ராதோட் செய்த ஈனச்செயலை, நேரில் கண்டாள். தோழிக்குத் தோள் கொடுத்தாள். போலீசில் புகார் செய்ய அக்குடும்பத்தை ஊக்குவித்தாள்.


உயர் போலீஸ் அதிகாரியின் மீது பலாத்காரப் புகாரா? பொறுக்குமா, போலீஸ் துறை. விட்டுவிடுவானா காமுகன், ராதோட். ருசிகாவின் குடும்பத்திற்கு இன்னல் பல கொடுத்தான். வேடிக்கை என்னவென்றால், காமுகன், ராதோடின் மகளும் ருசிகாவும் ஒரே பள்ளியில் படித்து வந்தார்கள். ராதோடின் மகளுக்கு அது அவமானமாக இருந்தது. தன் தரம் கேட்ட தந்தையின் உதவியுடன், ருசிகாவை பள்ளி நிர்வாகம் பள்ளியை விட்டு வெளியேற்றச் செய்தாள்.

இது மட்டுமா, ருசிகாவின் அண்ணன் மீது பல பொய்யான வழக்குகள் போட்டு பல முறை சித்திரவதை செய்தனர். ருசிகாவின் குடும்பத்தினர் தளர்ந்து போய் விடவில்லை. ராதோடின் மீதான வழக்கை திரும்பப் பெறவில்லை. ஆவேசம் கொண்ட ராதோட் தொடர்ந்து ருசிகா குடும்பத்துற்கு இன்னல் கொடுத்தான். கடைசியாக, தன்னால் தன் குடும்பத்திற்கு, குறிப்பாக அண்ணனுக்கு நடக்கும் கொடுமைகளை காணச்சகிக்காமல் ருசிகா தற்கொலை செய்து கொண்டாள்.

அவள் உயிர் தோழி ஆராதனாவும் அவள் குடும்பத்தினரும் ராதோடை விடவில்லை. வழக்கு தொடர்ந்தது. திருமணமாகி ஆஸ்திரேலியா சென்ற தோழி தொடர்ந்து வழக்கை வாதாடினாள்.

குற்றவாளி ராதோட், சன்மானங்கள் பல பெற்றான். விருதுகள் பல பெற்றான். பதவி உயர்வுகள் பெற்றான். ஹரியானாவின் டி.ஜி.பி. பதவி பெற்றான். வழக்கு தொடர்ந்தது. குற்றவாளி தண்டிக்கப்பட்டான். ஆறு மாத சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம். தீர்ப்பு வந்ததுமே பெயிலில் வெளியானான். தற்பொழுது அவனுக்காக அவன் மனைவி அபா நீதி மன்றத்தில் வாதாடுகிறாள். நடப்பதெல்லாம், பத்திரிகைகளின் வியாபாரம் என்கிறாள். கணவனைச் சிறை தண்டனையிலிருந்து காப்பாற்ற, என்ன விலை வேணுமானால் கொடுக்கத் துணிந்து நீதிக்கு எதிராகச் சோரம் போகிறாள்.

ருசிகாவின் குடும்பத்தினரும், அவள் தோழி ஆராதனாவின் குடும்பத்தினரும் தங்கள் முற்றுகையைத் துவங்கி விட்டார்கள். பொது மக்கள் பெருமளவில் ஆதரவு கொடுக்கிறார்கள். பத்திரிகை உலகம் கை கொடுக்கிறது. வெற்றி நிச்சயம். காமுகன் சிறை படுவான். குறைந்தது பத்து வருடங்கள் ஜெயில் வாசம் உறுதி.


தூக்கம் போதும் இந்தியனே!


விழித்தெழு, இந்தியா விழித்தெழு!




Sunday, January 3, 2010

விழித்தெழு இந்தியா, விழித்தெழு!

தப்பி ஓடினர் கைதிகள். தப்பி ஓடிய மூன்று கைதிகள், சாதாரண பிக் பாக்கெட் குற்றவாளிகளோ, கழுத்துச் சங்கிலி அறுப்புக் குற்றவாளிகளோ அல்ல. பாகிஸ்தானிய ஊடுருவல்காரர்கள். நம் நாட்டிற்கும், நம் நாட்டு மக்களுக்கும், பேரளவில் அழிவு விளைவிக்கக் கூடியவர்கள்.

இம்மூவரும், அப்துல் ரசாக், முஹம்மத் சாடிக், மற்றும் ரபாகத் அலி, இந்திய தலை நகராம், தில்லி மாநகரத்தில் ரெட் ஃபோர்ட் பகுதியில், குண்டு வெடிப்பு செய்து அதற்காக, சிறை தண்டனை முடிந்து, பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப் பட இருந்தனர். 2000 ல் இவர்கள் கைது செய்யப்பட பொழுது இவர்கள் வசம் பதினேழு கிலோ ஆர்.டி.எக்ஸ். மற்றும் ஐம்பது கிலோ ஹெரோயின் இருந்தது. இந்நிலையில் சிறை தண்டனை அனுபவித்து, பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட இருந்தார்கள். ஆனால் அம்பிகா ரெஸ்டாரண்டுக்கு உணவு உண்ண, ஒரு இன்ஸ்பெக்டருடன் சென்று, தப்பி ஓடினார்கள்.

இது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. நமது அரசுத்துறைகள் எல்லா வற்றிலும் புரையோடி இருக்கும், அதிகாரிகளின் தகுதியின்மை, பொறுப்பின்மை, ஊழலின் உள்ளோட்டம், மற்றும் குற்றங்களிலிருந்து எளிதாக தப்பிக்கக்க் கூடிய உண்மை நிலைகளின் எடுத்துக்காட்டு.

இம்மூன்று குற்றவாளிகளின் நிலை என்னாகும். அவர்கள் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓட மாட்டார்கள். இந்தியாவிலேயே தங்குவார்கள். தங்கள் சதிச் செயல்களுக்கு ஆட்கள் சேர்ப்பார்கள். இந்திய வோட்டர் லிஸ்டிலும் இடம் பெறுவார்கள். நமது கேடு கேட்ட அரசியல் தலைவர்கள் வீராப்பாக வெட்டிப் பேச்சு பேசுவார்கள். கொலை காரர்களிடம் காசு கொடுத்து ஒட்டு வாங்குவார்கள். அரசுத்துறை கமிட்டிகள் அமைத்து, வேலை வெட்டி அற்ற வெட்டிக் கிழங்களுக்கு வேலை போட்டுத் தரும். வரிப்பணத்தில் தள்ளாத வயதிலும் அவன் உல்லாசமாக கார், டிரைவர் சகிதம் உலா வருவான். குற்றம் செய்தவர்கள் தப்பிப்பார்கள்.

தேசப்பற்று அற்ற இந்தியன் தூங்குவான்.

விழித்தெழு இந்தியா, விழித்தெழு!

ஒரு மாத உறக்கம்

ஒரு மாதத்திற்கு மேலாக, நான் எதுவும் எழுதவில்லை, தமிழன்பனில். தொடர்ச்சியாக படிப்பவர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கலாம். அவர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். கடந்த ஒரு மாதத்தில், நான் இதுவரை எழுதியவற்றை, நுணுக்கமாகப் படித்தேன். எனக்குள்ளே வாதம் - பிரதிவாதம் செய்தேன். மேலும் சிறப்பாக எழுதும் முடிவுடன், அடுத்த அடியை எடுத்து வைக்கிறேன். நன்றி! புத்தாண்டு வாழ்த்துக்கள்!