Sunday, May 31, 2009

செக்யுலர் - மிகப் பெரிய பொய்

நமது இந்தியா ஒரு செக்யுலர் நாடு. அனைவரும் சமம். சாதி மத வேறுபாடு கிடையாது. இந்திய நாட்டின் சட்டங்களுக்கு முன்னர், அனைவரும் ஒன்றே. இந்திய நாடு சுதந்திரம் அடைந்த ஐம்பத்து இரண்டு வருடங்களில் சொல்லப்பட்டு, நெய் ஊற்றி வளர்க்கப்பட்டு, உலகத்தை நம்ப வைத்ததாக உணரப்படும் மிகப்பெரிய பொய் இதுதான்.
மிகவும் கவனமாக, நாடு சுதந்திரம் அடைந்த தினத்திலிருந்தே, அல்லது அதற்கு முன்னாலிருந்தே, திட்டங்கள் தீட்டி, நம் அரசியல் வாதிகள் இந்தியர்கள் அனைவரையும், மொழியால், இனத்தால், மதத்தால் பிரித்து லாபம் அடைந்தார்கள், அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்து - இஸ்லாம் பிரிவினை மிகப்பெரியது. இதை நாட்டின் தெற்கில் வாழ்பவர்கள் உணர்வது சிரமம். இரண்டு மதத்தினருக்கும் இடையே இருக்கும் இடைவெளி, வெறுப்பு, விரோதம் எளிமையாகத் தீர்க்கக்கூடிய விஷயமல்ல. பற்பல அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் கடுமையாக உழைத்து, இடைவெளியை அதிகப்படுத்தினார்கள். அதனால் பற்பல பெரும் லாபம் ஈட்டினார்கள்.
இன்று உண்மை நிலை இது தான். மேற்கிலும், வடக்கிலும், மற்றும் பல பிரதேசங்களிலும், இந்துக்கள் வாழும் இடங்களில் இஸ்லாமியர் வாழ முடியாது. இஸ்லாமியர் வாழும் இடங்கள், மினி பாகிஸ்தான் என்று அழைக்கப் படுகின்றன. மும்பையிலும், மற்றும் குஜராத்திலும், இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்து, பாகிஸ்தான் குழு வெற்றி பெற்றால், சில விஷமிகள் வெடி வைத்து கொண்டாடி விரோதத்தை வளர்த்தார்கள்.
தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்தில் என்னிடம் ஒரு இஸ்லாமிய நண்பர் கூறினார் "அல்லா வாக்குப்படி, ஒரு நாள் இல்லை ஒரு நாள், உலகம் முழுதும் இஸ்லாமிய மதம் மட்டுமே இருக்கும். அதைச் செய்து காட்டுவது ஒவ்வொரு இஸ்லாமிய மதத்தினரின் கடமை"
இது போன்றே எண்ணங்களை வளர்த்ததில் மதத்தலைவர்களும், அரசியல் தலைவர்களும் பெரும் பங்கு ஆற்றினர். தங்கள் லாபங்களை பங்கு போட்டுக்கொண்டனர். நஷ்டங்களை பொது மக்களாகிய நாம் மட்டுமே அனுபவிக்கிறோம் . மத பாகு பாடின்றி. .....................தொடரும்

இலங்கைத்தமிழன் செத்து மடிந்தான்




இதற்கு முன்னரும் எழுதினேன். தமிழன் செத்து மடிகி்றான் இலங்கையில். தமிழ் அரசியல் வாதிகளும், மற்றும் பலரும், நாடகம் ஆடுகிறார்கள், பசப்பித் திரிகிறார்கள் என்று. நம்பிக்கைக்குரிய தகவல் இன்று சொல்லுகிறது - இருபது ஆயிரத்திற்கும் மேலான தமிழ் மக்கள் விதிகளுக்குப் புறம்பாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலை இயக்கமும் ஒரு விதத்தில் காரணமாக இருக்கலாம். அதுவல்ல இன்று என்னுடைய வாதம்.






வெறி பிடித்த இலங்கை அரசு, நாட்டு விரோத அமைப்பை ஒழிக்கிறோம் என்ற பெயரில், முழுவதுமாக அறிந்தே, முன்னேற்பாடுகளுடன், தமிழ் இனத்தை, இலங்கை மண்ணில், அதன் எண்ணிக்கையை குறைக்கும் நோக்குடன், தனது ராணுவத்தை கட்டவிழ்த்து விட்டது. தரம் கெட்ட, இலங்கை அரசை தன விரிவான குடும்பத்தின் ஒரு அங்கமாக நினைத்து செயல் படும் ராஜ பக்சே, ஒரு தேர்ந்த அரசியல்வாதி. புலிகள் அமைப்பை அழிப்பது அவன் முதல் நோக்காக இருப்பினும், இதை காரணம் காட்டி, தனது மேலும் பெரிய துணை நோக்கான, தமிழ் இன எண்ணிக்கையை தம் நாட்டில் குறைப்பது என்பதில் பெரும் வெற்றி அடைந்துவிட்டான்.






ராஜா பக்சே, மற்றும் அவர்தம் ராணுவ அமைச்சர், ராணுவ தளபதி, மேலும் பலர் உண்மையில் உலகக் குற்றவாளிகள். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். நான் முன்னமே சொன்னேன் - பெரும் அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது என்று. மேலும் சொன்னேன், உலக அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும், கண் பொத்திக்குருடர்களாக, காது மூடி செவிடர்களாக, வாய் மூடி ஊமைகளாக வேடிக்கை பார்க்கிறார்கள் என்று.






அது போகட்டும். நமது உடன்பிறப்புகள், தமிழ் நாட்டில் தமிழ்த் தியாகிகள், தமிழர்களுக்காக, அவர்தம் நலன்களுக்காக, பல முறை, மீண்டும் மீண்டும் உயிர் துறந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடையே கட்டில், மெத்தை மீது, குளிர் சாதனப் பெட்டிகள் சூழ உண்ணா விரதம் இருந்தார்கள். சங்கிலிப் போராட்டம் நடத்தி நாள் கணக்காக தொலைக்காட்சிப் பெட்டிகளில் பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.






நெருங்கி வந்து விட்டது தேர்தல். நேரம் எங்கே நம் தலைவர்களுக்கு இலங்கைத் தமிழனைப் பற்றி யோசிக்க, மற்றும் செயல் பட? தலைவர்கள் ஒட்டுக்கணக்கு போட்டுக்கொண்டிருந்தார்கள். தலைவர்களின் தலைவர் பிள்ளைக்காகவும், பெண்ணுக்காகவும் பதவிக்கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். தமிழ் நாட்டில் சாதாரணத் தமிழனும், இலவசப் பொருள்கள் பெற்று, தலைவர்கள் போக்கில் சென்று, இலங்கைத் தமிழனை மறந்தான். ஓட்டுகளை குவித்தான். தமிழ்த் தலைவர்கள் இன்று வெற்றிக் களிப்பில் உலா வருகிறார்கள். பேரம் பேசி பதவிகள் பெற்றார்கள்.






இலங்கையில் தமிழனா? எங்கே இருக்கிறது இலங்கை? எங்களுக்கு தெரிந்ததெல்லாம் டெல்லி மாநகரம் தான். எங்களுக்கு தெரிந்ததெல்லாம் அங்கு இருக்கும் நாற்காலி தான். எங்களுக்கு தெரிந்ததெல்லாம் நாற்காலியுடன் இணைந்த செல்வாக்கு, அதிகாரம், கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் வாய்ப்புகள் தான்.






கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன:


விருந்து முடிந்த பின், விழுந்த இலைகளை


நக்கிடும் நாய்க்கும், நாளொன்று கழியும்


நாளைக்கழிப்பதே நானிலப் பிறப்பெனில்


வாழ்வென தாழ்வென வருவன சமமே

Saturday, May 30, 2009

பழைய கதை, புதிய நினைவு


ஷிபு சோரேன் என்பவர் கொலை வழக்குகளில் குற்றவாளியாகி மத்திய மந்திரி சபையில் பதவி வகித்த நேரம் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டவர். மத்திய மந்திரி பதவி துறந்து பின் ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் மந்திரி ஆனார். இவ்வருடம் மாநிலத் தேர்தலில் பரிதாபமாகத் தோற்கடிக்கப்பட்டு பதவி இழந்தார். ஒரு சின்ன உதாரணம் - இந்திய நாட்டின் சட்டங்களை திரித்து, வளைத்து, குற்றங்கள் பல செய்து, உல்லாசமாக நாட்டில் உலவி வரும் பல ஆயிரம் இந்திய அரசியல்வாதிகளுக்கு.


சமீபத்தில் இவர் தம் மகன் தூக்கத்திலேயே மரணம் அடைந்தார். அந்த செய்தியைப் படித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது, நான் பல வருடங்கள் முன்னர் படித்த ஒரு உண்மைக் கதை. கவிஞர் கண்ணதாசன் எழுதியது. அவர் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டு அப்பொழுதைய மாயவரம் சிறையில் இருந்தார். சிறையில், ஒரு கற்பழிப்பு, கொலை வழக்கில் ஐந்து பேர் சிறை தண்டனை அநுபவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் சொன்னான் - சத்தியமாக இந்த குற்றத்தை நான் செய்யவில்லை. ஆனால் பல வருடங்களுக்கு முன்னாள் இது போன்ற ஒரு குற்றத்தை செய்தேன் நான். அப்பொழுது தப்பித்து விட்டேன். பல வருடங்களுக்குப் பின்னர் இன்று நான் செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்கிறேன் என்றான்.


குற்றங்களை ஆய்பவர்கள் தவறு செய்யலாம். வழக்கறிஞர் தவறு செய்யலாம். நீதிபதி கூட பிழை செய்து விடலாம். ஆனால் எல்லாம் வல்ல இறைவன் தண்டிக்கத் தவறுவதில்லை.


ஷிபு சோரேன் அவர்களை கடவுள் கடுமையாகத் தண்டித்து விட்டார். நாம் கடவுளிடம் பணிவாக வேண்டுவோம் - "ஷிபு சோரேனுக்கு இனியாவது நல்லறிவு கொடுங்கள்" என்று.

மாறனும், மதுரை வீரனும்

பார்லிமென்ட் களை கட்டி விட்டது. மாறனும், மதுரை வீரனும் ஒரே குழுவில். தம் உயர் கொள்கைகளுக்காக, அவற்றை நிலை நாட்டுவதற்காக இவ்வுயர் தமிழ்த் தலைவர்கள் எந்த ஒரு தியாகமும் செய்வார்கள். அவர்கள் நினைவில் ஆழந்து நிலைத்திருப்பது, நாட்டின் நலனும், அதில் அவர்கள் பங்கு மற்றும் தான். அதற்காகவே தான் இருவரும் ஒன்று இணைந்து தாய் நாட்டின் தலை நகரில் செங்கோல் ஆட்சியில் அமரச் சென்று விட்டார்கள். இருவரும் இனி அடிக்கடி சந்தித்து, மதுரை மாநகரில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அநியாயத்துக்கு நீதி தேடுவார்கள். கொலையாளிகளை கூண்டில் ஏற்றுவார்கள். கொலையுண்டவரின் குடும்பம் மாறனுக்கும், மதுரை வீரனுக்கும் நன்றி கூறும்.
வாழ்க மாறனும், மதுரை வீரனும்! செத்தொழிக கொலை செய்தவர்களும், அதைத் தூண்டியவர்களும், மற்றும் அதன் காரண கர்த்தாக்களும்!

Sunday, May 24, 2009

SINGH IS THE KING - 2


Dr.Singh is the king. I said people in India have reflected their trust in this educated, knowledgeable, and a decent gentleman. The other good news is that likes of behanji, that is Mayawati, Ram Vilas Paswan, Mulayam Singh Yadav, Lallu Prasad yadav, and A.R.Antulay have been humbled. Lallu's one seat loss and the party's loss will only be a bad news for some IIM-ites from Ahmedabad, who hailed him as a hero sometime back.


This is only a beginning. Likes of Karunanidhi have started their pressurisation for plum post for their party men. In India we all by now know - what a plum post means in ministry or the bureaucracy. In the case of Karunanidhi, not just party members. Son and daughter of different wives. He has to make a balance between both his living wives, and their children. The grand nephew probably comes in the third place. Dr.Singh as of now nailed the controversy with a bold statement "I have to run a government and I also have to worry about its effectiveness"


Hold for a moment. The fate of India will be decided to some measure by the decision of a politician as to how he wants to balance between his two wives. True democracy. Of course this is a small or a big price we have to pay for being a democratic country.


Dr.Singh - Play it cool! Play it tough! Do not take into your ministry the criminals that you know.

l

SINGH IS THE KING

I believe, Singh, Manmohan Singh is the king and the victory is a reflection of the common man's trust in him. Educated, and decent, the people have declared that he must continue as the Prime Minister. Congratulations Dr..Singh the King!
Coming to the atrocities committed on Sardarjis - post Indira Gandhi assasination, I strongly believe that the truth has never come out. The people, the so called leaders who are scot free and aging must be brought to the book and justice served. For taking a firm decision Dr.Singh must forget for a while that he is a congressman and think as a member of the Sikh community. The community that was created and serves as the gaurdians of our great India. Booking the crimanals and serving justice is the most humble way of passing our gratitude to the nation's heroic community, and the protectors of our nation.
Will Dr.Singh do that? contd............

Friday, May 15, 2009

தமிழனுக்காக ............

தமிழனுக்காக, தமிழனின் துயர் நீக்க, தமிழர்களின் தலைவர் நெஞ்சுக்கு நீதி தேடுகிறார்.
நானும் தினம் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றான் ஒரு புத்திசாலி சிறுவன்! தினமுமா? என்ற கேள்விக்கு அவன் பதில் சிற்றுண்டிக்குப் பின்னரும், மதிய உணவுக்கு முன்னரும்!

வாழ்க தமிழன்! வளர்க இனப்பற்று!
இதைப்படித்தவர்கள் அவசியம் இதற்கு முன்னைய கட்டுரையையும் கண்டிப்பாக படிக்க வேண்டுகிறேன்!


Monday, May 4, 2009

தமிழனுக்காக மட்டும் அல்ல - மனித குலத்திற்காக

எல்.டி.டி. . செய்தது, செய்வது, சரி, தவறு என்ற வாக்கு வாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால் என்னால் உறுதியாகச்சொல்ல முடியும் ராஜபக்சே அரசு தமிழர்கள், தமிழ் பேசும் மனித குலத்தின் மீது நடத்தும் வெறியாட்டம் எந்த ஒரு இனத்தினனாலும், எந்த ஒரு மொழி பெசுபவனாலும், எந்த நாட்டைச் செர்ந்தவனாலும் ஒப்புக்கொள்ள முடியாத அநியாய செயல்.

ராஜபக்சே ஒரு தேர்ந்த ஊழலில் ஊறிய அரசியல்வாதி. அவன் தன் ஊழல் செயல்களை, தம் நாட்டு மக்களிடமிருந்து மறைக்க, திசை திருப்ப ஆடும் ஆட்டம் இது. உலகத்தில் பல விதமான மனித நேய நிறுவனங்கள் இருக்கின்றன. அவை எல்லாம் இது வரை, இந்த வெறியாட்டத்தை நிறுத்த செய்த செயல்கள் என்ன? பெரிதான கேள்விக்குறி!

அது போகட்டும். தமிழன், தமிழ் உடன்பிறப்பு என்று பிதற்றித் திரியும், தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் செய்தது என்ன? மிகப்பெரிய கேள்விக்குறி! ஒன்றும் செய்ய விரும்ப வில்லையா? ஒன்றும் செய்ய இயலவில்லையா? அல்லது முயற்சி எடுப்பதில் அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலோ, அல்லது கட்சி விவகாரத்திலோ நஷ்டமா?

பதில் எதுவாக வேணாலும் இருக்கட்டும். உண்மை இதுதான். தமிழ் பேசும் மனிதனுக்கு, சாதாரண குடும்பங்களுக்கு, உலக அளவில், ஒரு கொடூரம் இழைக்கப்பட்டு வருகிறது. அரசியல் வாதி அரசியல் லாபம் பார்க்கிறான், மனித நேய நிறுவனங்கள் கண்கள் மூடி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்கின்றன.

குழந்தைகள் செத்து மடிகின்றன. நாம் அனைவரும் கோழைகளாக, செயலற்றவர்களாக, செய்திகள் படித்து ச் ச் சூ கொட்டி சுய நலமிகளாக திரிகிறோம். யோசித்துப்பார் தமிழா! - யோசித்துப்பார் மனிதா! நீ செய்யக்கூடியது என்ன!

விழித்தெழு! உயிர்வதையை தடுத்து நிறுத்து!

Sunday, May 3, 2009

தேர்தலுக்கு முன்னும் பின்னும்

கல்லடித்துக் கொண்டிருந்தவர்கள் - இனி
கட்டி அணைத்துக் கொள்வார்கள்
சேறு இறைத்தவர்கள் வெகு சீக்கிரம்
சல்லாபித்துக் கொள்வார்கள் - தேர்தல் முடிந்ததும்
கோடி இழுத்து அவமதித்தவன்
கோடிகளை கை மாற்றிக்கொள்வான்
வாழ்க நம் ஜன நாயகம் - வளர்க
நமது வோட்டுரிமை.

Saturday, May 2, 2009

அன்று பகுத்தறிவு வியாபாரிகள் 2

விஞ்ஞானம் வேகமாக வளர்ந்தது. கம்ப்யூட்டர் வரவும் , செல் ஃபோன் வரவும், சாதாரண இந்தியனின், குறிப்பாக தமிழனின் வாழ்வை நன்முறையில் வெகுவாக பாதித்தது. கிராமத்த்தில் விவசாயம் செய்து, வருமானம் குன்றி, வறுமையில் வாடிய விவசாயியின் மகன் பொறியியல் படித்தான். எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் விஞ்ஞானத்தில் வல்லுனனான். அமெரிக்காவும், இங்கிலாந்தும் பறந்து சென்றான். பகுத்தறிவு பிரச்சாரம் வியாபாரம் ஆகவில்லை. பல லட்சம் குவித்த தமிழன் கூடவே குறைவில்லாமல் கவலைகளையும் குவித்தான். கோவில்கள் பெருகின. சாதிக்கொரு அரசியல் கட்சி போலவே, சாதிக்கொரு சாமியாரும் உருவெடுத்தார். கோவில்களும் சாதிச் சாயம் பூசிக்கொண்டன.
பகுத்தறிவு பாது காவலரகள், நாத்திக சாமியார்கள் எலெக்ட்ரானிக் மீடியம் துணையுடன் இக்காலத்தில் நன்கு விற்கக்கூடிய, பக்தியை விற்க ஆரம்பித்து விட்டார்கள். மூட நம்பிக்கைகளை முன்னே வைத்து, உலக தமிழர்களை அணுக ஆரம்பித்து விட்டார்கள். தொலைக்காட்சிகளில் இவர்கள் தொல்லை தாங்க வில்லை.
ஒரு கழகக்கண்மணி அலை வரிசையில், ஒரு சீரியலில், நாயகி முக்கியமான வேளையாக வெளியே போகும்போது பூனை அவள் பாதையில் குறுக்கிட்டு காரியத்தைக் கெடுக்கிறது. கழகக்கண்மணிகளின் மிகப்பெரும் மூத்த தலைவன், பகுத்தறிவின் நாயகன், நெஞ்சுக்கு நீதியை தேடிக்கொண்டே இருப்பவர், அவர்தம் அலை வரிசையில் நாயகி மனத்துயரம் கொண்டு மாரியம்மன் கோவிலில் தொடர்ந்து மணியடிக்க, பூ விழுகிறது. அதுவும் சிகப்பு, செம்பருத்திப்பூ. அம்மன் ஒரு வயதான பெண்மணி உருவில் வந்து நல்ல சொல் சொல்கிறாள். நாயகி புல்லரித்துப் போகிறாள்.
என்ன ஒரு வளர்ச்சி! பகுத்தறிவு வியாபாரத்தில் துவங்கி இன்று பக்தி, பக்தி என்று கடவுள் நம்பிக்கை கொண்ட நான் சொல்ல மாட்டேன், மூட நம்பிக்கை வியாபாரம் நன்கு வளர்ந்து விட்டது. பகுத்தறிவிலும் பணம். பக்தி என்ற பெயரில் பகுத்தறிவு குன்றிய நம்பிக்கைகளிலும் பணம்.
வாழ்க தமிழன். வளர்க அவனது பகுத்தறிவு!

அன்று பகுத்தறிவு வியாபாரிகள்

நாற்பது, ஐம்பது வருடங்கள் முன்னர் இவர்கள் கடை விரித்தார்கள். கழகம் என்பது அதன் பேர். பகுத்தறிவு பிரச்சாரம் துவங்கினார்கள். ஒப்புக்கொள்ள வேண்டும். வியாபார தந்திரத்தில் திறமை அவர்களது. மெச்ச வேண்டும். இப்பகுத்தறிவு பிரச்சாரத்தில் மிகவும் கை கொடுத்தது மொழி வெறியும், பார்ப்பன விரோதமும். பிரச்சாரத்திற்குக் கிடைத்தார்கள் திறமையான பேச்சாளர்கள். அடுக்கு மொழியில் ஆவேசமாகப் பேசினார்கள். சாதாரணத் தமிழன், புளகாங்கிதம் அடைந்தான். கைகள் தட்டி ஆரவாரித்தான். வியாபாரம் சூடு பிடித்து விட்டது.

நேற்று வரை, பார்ப்பன நண்பனுடன் தோள் மீது கை போட்டு நடந்தவன் உணர்ச்சிகள் உச்சத்துக்கு சென்றான். பூணூல் அறுத்தான். பெருமை அடைந்தான். ஆங்கில எழுத்துக்கும், இந்தி எழுத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன் தார் கொண்டு இந்தி எழுத்துக்களை அழித்தான். தலைவர்கள் "வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது" என்று கூக்குரல் கொடுத்தார்கள். கரி கொண்டு சுவற்றில் எழுதுவதிலும், தார் கொண்டு எழுத்துக்களை அழிப்பதிலும், பார்ப்பனனின் பூணூலை அறுப்பதிலும் தான் பகுத்தறிவின் பொருள் அடங்கி இருப்பாதாக எண்ணி இறுமாப்படைந்தான்.

பேச்சுசுத்திறமை உள்ளவர்கள் புகழ் பெற்றார்கள். புகழ் பெற்றவர்கள் பதவியும், பணமும், பேரளவு பெற்றார்கள். அண்ணன், தம்பிகளும், மச்சினன், மச்சினிச்சியும் கூடவே வளர்ந்தார்கள். விரிவான குடும்ப நபர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்களானார்கள். தலைவர்கலுக்கு கூஜா தூக்கி, சேவகம் செய்த தொண்டர்கள், மனைவி, மக்கள் மறந்து, குடும்ப பொறுப்புகள் துறந்து, வீணாய்ப் போனார்கள். தலைவன் வாழ்க என்று கூறி தன் சொந்த குடும்புகளை வீழ்த்தினார்கள். பகுத்தறிவு மலர ஆரம்பித்தது. . . .................................. தொடரும்.