Sunday, June 28, 2009

பகுத்தறிவு வியாபாரிகள்

நாற்பது, ஐம்பது வருடங்கள் முன்னர் இவர்கள் கடை விரித்தார்கள். கழகம் என்பது அதன் பேர். பகுத்தறிவு பிரச்சாரம் துவங்கினார்கள். ஒப்புக்கொள்ள வேண்டும். வியாபார தந்திரத்தில் திறமை அவர்களது. மெச்ச வேண்டும். இப்பகுத்தறிவு பிரச்சாரத்தில் மிகவும் கை கொடுத்தது மொழி வெறியும், பார்ப்பன விரோதமும். பிரச்சாரத்திற்குக் கிடைத்தார்கள் திறமையான பேச்சாளர்கள். அடுக்கு மொழியில் ஆவேசமாகப் பேசினார்கள். சாதாரணத் தமிழன், புளகாங்கிதம் அடைந்தான். கைகள் தட்டி ஆரவாரித்தான். வியாபாரம் சூடு பிடித்து விட்டது.நேற்று வரை, பார்ப்பன நண்பனுடன் தோள் மீது கை போட்டு நடந்தவன் உணர்ச்சிகள் உச்சத்துக்கு சென்றான். பூணூல் அறுத்தான். பெருமை அடைந்தான்.
ஆங்கில எழுத்துக்கும், இந்தி எழுத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன் தார் கொண்டு இந்தி எழுத்துக்களை அழித்தான். தலைவர்கள் "வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது" என்று கூக்குரல் கொடுத்தார்கள். கரி கொண்டு சுவற்றில் எழுதுவதிலும், தார் கொண்டு எழுத்துக்களை அழிப்பதிலும், பார்ப்பனனின் பூணூலை அறுப்பதிலும் தான் பகுத்தறிவின் பொருள் அடங்கி இருப்பாதாக எண்ணி இறுமாப்படைந்தான்.
பேச்சுசுத்திறமை உள்ளவர்கள் புகழ் பெற்றார்கள். புகழ் பெற்றவர்கள் பதவியும், பணமும், பேரளவு பெற்றார்கள். அண்ணன், தம்பிகளும், மச்சினன், மச்சினிச்சியும் கூடவே வளர்ந்தார்கள். விரிவான குடும்ப நபர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்களானார்கள். தலைவர்களுக்கு கூஜா தூக்கி, சேவகம் செய்த தொண்டர்கள், மனைவி, மக்கள் மறந்து, குடும்ப பொறுப்புகள் துறந்து, வீணாய்ப் போனார்கள். தலைவன் வாழ்க என்று கூறி தன் சொந்த குடும்புகளை வீழ்த்தினார்கள். பகுத்தறிவு மலர ஆரம்பித்தது. . . .................................. தொடரும்.

தேர்தலுக்கு முன்னும் பின்னும்

மே மாதம் ஒன்பதாம் நாள் எழுதியது
கல்லடித்துக் கொண்டிருந்தவர்கள் -
இனிகட்டி அணைத்துக் கொள்வார்கள்
சேறு இறைத்தவர்கள் வெகு சீக்கிரம்
சல்லாபித்துக் கொள்வார்கள் - தேர்தல் முடிந்ததும்
கோடி இழுத்து அவமதித்தவன்
கோடிகளை கை மாற்றிக்கொள்வான்
வாழ்க நம் ஜன நாயகம் - வளர்க நமது வோட்டுரிமை.

சூரத் கற்பழிப்புக் குற்றவாளிகள்


குஜராத் மாநிலத்தில், சூரத் நகரம். குஜராத் மாநிலம் பெரும்பாலும் பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு மாநிலம். குஜராத் மாநிலத்தில் பெரும் நகரங்களிலும், சிற்றூர்களிலும், பொதுவாக பெண்கள் பாதுகாப்புக்கு இன்னல் இல்லை. இருந்தும், அவ்வப்பொழுது சிற்சில சிறிய, பெரிய அநியாயங்கள் நிகழ்ந்து கொண்டு தானிருக்கின்றன.


சூரத் மாநகரத்தில், சயீத், தாரிஃ, மற்றும் அபு பாக்கர் தொடர்ந்து பெண்களை ஓடும் கார்களில் கற்பழித்து, வீடியோவில் அவற்றை படமாக்கி விற்று இருக்கிறார்கள். இந்த மாதம் அவர்கள் பிடி பட்டார்கள். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. செய்தித் தாள்களிலும், ஆர்குட்டிலும், பிளாக்கர்களிலும் மக்கள் எழுதிக்குவிக்கிறார்கள். குற்றவாளிகள் மூவரையும், கடும் சொற்களால் வைது தீர்க்கிறார்கள். நல்ல செயல். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்ப போதிய ஆதாரம் இருக்கிறது. நன்று.


ஆனால், எங்கே அந்த மக்கள்? அந்த வீடியோ படங்களை வாங்கிப் பார்த்து ரசித்தவர்கள்? அக்கொடியவர்கள் இன்றும் அப்படங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கலாம். இம்மூன்று குற்றவாளிகள் நியாயமான முறையில் தண்டிக்கப்பட்ட பின்னரும், வீடியோ கண்டு களிப்பது தொடரலாம். கொடுமை என்னவென்றால், அவர்கள் நம் சமூகத்தில் நம்மிடையே பரவி இருக்கின்றனர். நம் குடும்பத்திலேயே கூட இருக்கலாம். உற்றார், உறவினர், சுற்றுப்புறத்தார் இவர்களில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்கள் பிடிபடாத குற்றவாளிகள். தண்டிக்கப்படாத கொடுமையாளர்கள். இம்மக்கள் பிடி படாத வரை, இக்கொடுமையாளர்கள் தண்டிக்கப்படாத வரை, நியாயம் கிடைத்துவிட்டதாக யாரும் கூற முடியாது.


Saturday, June 27, 2009

Who are the criminals?

Saeed, Tariq and Abu Baqr were arrested for raping young girls and video shooting and selling these acts. There are articles in newspapers, blogs, orkuts etc...etc... Great response. Gentlemen and ladies, your social conscience is very high. Well appreciated. Keep it up. When you do all these, condemning these criminals, what are you doing about those who have bought those videos from them. They may be watching those videos even after those criminals are punished and put in jail.
Who are these people? They are in the garbs of Gentlemen, and Ladies in our midst. Someone's father, someone's mother, husband, wife, son, daughter and so on. They are in our midst, may be within our families and in our neighbourhood. Who will punish them? How to identify them? However their crime is much more heinous in nature, and they deserve more severe punishments than Saeed, Tariq and Abu Baker. If you find them in your midst, hand them over to the police. Can you? Can I? Then all the hype we make about these atrocities makes sense. Otherwise, we are the guilty and each one of us deserve punishment.

சின்னஞ்சிறு கதைகள் 1

சிற்பி ஒருவர் சிற்பம் செதுக்கிக் கொண்டிருந்தார். அருகில் சென்று ஒருவர் அவர் கலைச்செயலை, அவர் தம் ஈடுபாட்டை உன்னிப்பாக கவனித்தார். பின்னர், அவர் திரும்பிப் பார்த்த பொழுது மெல்ல அவரிடம் கேட்டார்.
"என்ன சிலை செய்துக்கிட்டு இருக்கீங்க?"
"பிள்ளையார் சிலை" என்று பதில் வந்தது.
மீண்டுமொரு கேள்வி "இந்த சிலையை எங்க வைக்கப்போறீங்க?"
பொறுமையாக பதில் சொன்னார் கலைஞர் "அந்த கோபுரத்தின் உச்சியில், வலது பக்கத்தில்" என்று சுட்டிக் காட்டினார்.
தற்செயலாக கவனித்த பார்வையாளர் "பக்கத்துல பிள்ளையார் சிலை இன்னொண்ணு இருக்கே, மறுபடியும் ஏன் பண்றீங்க?" என்று கேட்டார்.
"இதுவா! இது ரிஜெக்ட் ஆயிருச்சு!" என்று சொன்னார்.
பார்வையாளர் மறுபடியும் "யாரு ரிஜெக்ட் பண்ணாங்க?"
"நான் தான்"
"ஏன்?"
"ஒரு தவறு ஆயிடிச்சு"
கூர்ந்து கவனித்த பார்வையாளர் "கண்ணுக்குக் குறை ஒண்ணும் தெரியலையே!" என்றார்.
கலைஞர் "பிள்ளையாரோட தும்பிக்கைல, நடுல ஒரு சின்ன கீறல் விழுந்துடிச்சு" என்றார்.
உற்றுப்பார்த்த பார்வையாளர் "இவ்வளவு பக்கத்திலேர்ந்து பாக்கற ஏன் கண்ணுக்குக் தெரியல, அவ்வளவு உயரத்தில வச்ச பிறகு யாருக்குத் தெரியும்?" என்று தன் சந்தேகத்தை தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த சிற்பி "இரண்டு பேருக்குத் தெரியும். எனக்கும், பிள்ளையாருக்கும்" என்று கூறி முடித்து கவனமாக சிலை செதுக்குவதைத் தொடர்ந்தார்.

Wednesday, June 17, 2009

Singh is the King 5

In continuation of what I wrote on Jagathrakshakan, continuing in the ministery in Singh is the King 4 - Not a day he deserves to continue as a minister. The more time he is there, more the opportunity to meddle with the proceedings and justice not being served. In the interest of the Indian Public and the worth while democracy in India, Jagathrakshakan must be sacked immediately. Singh can take him back if he is really proved innocent. But what has been made public so far does not indicate the same. Then why hesitate? If Singh has really meant what he said during the negotiations with DMK, he must have sacked him by now. If not, Singh, the King did not really mean what he said.

Monday, June 15, 2009

நீதி நெஞ்சுக்கு, பணம் பெட்டிக்கு


சமீபத்துல, வயசானவரு ஒரு அரசியல்வாதி, தமிழ் நாட்டுல இல்ல, மகாராஷ்டிரால கைது ஆயிருக்காரு. பதம் சிங் பாட்டில் அவர் பெயரு. அவுரு செய்த குற்றம் என்ன. எவ்வளோவோ வருஷத்துக்கு முன்னாடி காசு கொடுத்து வேண்டாதவங்க ரெண்டு பேரை கொலை பண்ணிட்டாருன்னு குத்தம் சாட்டியிருக்காங்க. சி.பி.ஐ. விசாரிச்சு கைது பண்ணி ரிமாண்டு வாங்கியிருக்கு. இதைக்கேட்டு, அவுரு இருந்த கட்சிக்கு அவமானமா போச்சு. வேக வேகமா மீட்டிங்கு போட்டு, அவுரா கச்சிலேருந்து விளக்கிட்டாங்க. என்னங்கடா இது? வேடிக்கையா இருக்கு. அரசியல், அரசியல் வாதின்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்.



நம்ம தலைவருங்க எவ்வளவோ என்னென்னவோ பண்ணியிருக்காங்க. இதெல்லாம் பெரிய விஷயமா எடுத்திக்கினா, முக்கா வாசி பேரு, வாழ்க்கை முழுக்க ஜெயில்ல தான் இருக்கணும். ஏதோ நீதிய நெஞ்சுக்குள்ள வெச்சிக்கினு, பெட்டில பணத்த ரொப்புனமான்னு போய்க்கிட்டே இருக்கணும். சரிப்பா, அவரு தான் தப்பு பண்ணிட்டாரு, ஏதோ வேகத்துல, சும்மா குறுக்க வந்திக்கினு இருக்கானேன்னு, காசு கொடுத்து கதைய முடிச்சிட்டாருன்னு வச்சுக்குவோம். கட்சி ஏம்ப்பா அவுர நீக்கணும். அரைக்கிறுக்கானா இருக்கானுங்க. ஏதோ ரெண்டு பெட்டிய தலைவருக்கு, அதாவது அவரு தலைவருக்கு தள்ளினோமா, அவுரு பார்லிமெண்டுல சப்போர்ட்டா நாலு வார்த்தை பேசினாரான்னு இல்லாம, கட்சிய வுட்டு தூக்கராங்கலாம். ஷரத் பவ்வரு அண்ணாச்சிய நம்மூருக்கு வந்து டிரெயினிங் எடுத்துக்கிட்டு போகச்சொல்லு. தன்மானம்னா என்ன்னன்னு அவருக்கும் புரியும், அவுரு கட்சிக்காரங்களுக்கும் புரியும்.



தன்மானம்னா, நெஞ்சுக்குள்ள நீதி, பொட்டிக்குள்ள பணம். புள்ளைங்களுக்கு பதவி. புரிஞ்சிதா உடன்பிறப்பே. புரியிலைன்னா நம்ம டாக்டர் அமைச்சர்ட்ட கேளு. அவுரு சொல்லுவாரு.

Singh is the King 4

The initial response from Kapil Sibal is encouraging. But will he or anyoneelse take full responsibility, go ahead, reveal the truth and help the country's justice system punish the guilty. It is a great opportunity for the Singh's ministry to control the alliance parties' arm twisting for ministerial berths. Jagath, must be removed unceremoniously and the people of the country will be with 'Singh the King'
The above is a part of the article I wrote 12 days ago at this site. In the last 10 days, there is no word on the press further about this episode. My fear that the justice may not be served for reasons well known are getting stronger by the day. If Dr.Jagathrakshakan stays in the ministry it is like slap on the face of crores of Indians who trusted Dr.Manmohan Singh and voted for him. Kapil Sibal's initial utterings were very encouraging. What is happening now? Who is probing the issue? Besides all these why Jagath has not been told to leave yet?
Is the political bargaining going on? Is the cover up in full swing? Where is Jagath? In Delhi or Chennai? If he were in Chennai, he must be there for a good reason. The most predictable for me is that the people in the video do not exist at all. If they do, they have nothing to do with either Balaji or Ramachandra. And the case will be closed soon. If that happens every law abiding citizen in India must put down his head in shame and cry for himself. A law abiding ordinary citizen will loose faith in democracy and the true spirit of the Indian Constitution and the Indian Judiciary. It is now time for every one with decency act and demand Dr.Jagathrakshakan's immediate resignation from the ministry and the post of the Member of Parliament.

சிறு பிள்ளைகள் போல்


நான் நேத்து ஒரு திருமணத்துக்கு போயிருந்தேன். சரியான கூட்டம். விடுமுறை தினங்களா, சிறு பிள்ளைகள் நிறைந்து இருந்தனர். சந்தோஷமாக இருந்தது. சாப்பாட்டு நேரம் துவங்கியது. சிறு குழந்தைகளுக்கு முதலில் சாப்பாடு போட ஆரம்பிச்சாங்க. ஒரு பையன், ஸ்வீட்டு வச்சதும் முதல்ல எடுத்து சாப்பிட்டு விட்டான். அந்த ஸ்வீட்டு வச்சவர் மறுபடியும் ஸ்வீட்டு எடுத்துக்கிட்டு அந்தப்பக்கம் வரவும், அச்சிறு பையன் அவர கூப்பிட்டு மறுபடியும் ஸ்வீட்டு கேட்டான். அவர் கண்டிப்பாக, ஒருத்தருக்கு ஒண்ணு தான் என்றார். அதற்கு அந்தச் சிறுவன் "சார் எனக்கு ஸ்வீட்டு வைக்க மறந்து போய்ட்டீங்க" என்று, இன்னுமொரு ஸ்வீட்டுக்கு அடி போட்டான்.



பக்கத்துல இருந்த பையன், "என்னடா அருண் இப்படி அநியாயமா ஜகத்ரக்ஷகன் மாதிரி பச்சப்பொய் சொல்ற"



அதற்கு அருணும் விட்டுக்கொடுக்கல "ஏண்டா! அவரோட என்ன ஏன் கம்பேர் பண்ற? நான் என்ன டாக்டரேட்டா வாங்கி இருக்கேன் பொய் சொல்ல. அதுவுமில்லாம நான் ஸ்வீட்டு சாப்ட்டேன்னு என்னோட வெப் சய்ட்டிலயா போட்டு இருக்கு. போடா! வேணும்னா எனக்கு அவர் வந்து ஸ்வீட்டு போடும்போது, உனக்கும் ஒண்ணு போட சொல்றேன். பேசாம சாப்ட்டுட்டு போ. என்ன சரியா?" என்றான். சுத்தி நின்னவங்க வாயடைச்சுப் போய்ட்டாங்க.



நான் நினைத்தேன், இங்கே அமைச்சர் ஒருவர் உருவாகிக்கொண்டிருக்கிறார் என்று.

Saturday, June 13, 2009

புதுப் புதுச் செய்திகள்

புதியன புகுதலும், பழையன கழிதலும், தினம் தினம் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயங்கள் தான். ஆனால், அரசியல் அநாகரீகங்களும், ஒழுங்கீனங்களும், மிகப்பெரும் அளவு ஊழல்களும், பெருமளவு, அன்றாடம் புகுந்து, பத்திரிகைகளுக்கு கொண்டாட்டம் தான். இன்று ஒரு செய்தி. நாளை வேறு புது செய்தி. மக்களுக்கு தினம் தினம் மகிழ்ச்சி. மருத்துவர் ஜகத்ரக்ஷகன் செய்தி வந்து அந்த ரீல் இரண்டு நாட்களுக்கு ஓடியது. மூன்றாவது நாள் பத்திரிகைகளும் மறந்து விட்டன. மக்களும் மறந்து விட்டார்கள். அதற்குள் என்.சி.பி. கட்சித்தலைவர் கொலை வழக்கில் கைதான செய்தி. ஒன்றுக்கு ஒன்று மிஞ்சும் செய்தி. மக்களுக்கோ தினம் தினம் மகிழ்ச்சி. தினம் தினம் மறதி. இன்னைக்கு பிக் பாக்கெட்டு செய்தின்னா, நாளைக்கு முடிச்சு அவுக்கி செய்தி, மத்தா நாள் வீடு புகுந்து கொள்ளை அடித்தவன் கதை. அதற்கு அடுத்தநாள் கற்பழிப்பு, கொலை செய்தவன் கதை. இவர்களெல்லாம் சொத்த்துக்கு வழியில்லாம தெருப்போருக்கும் பொறுக்கி கூட்டத்தினர் அல்ல. இவர்களெல்லாம் அரசியல் வாதிகள். தலைவர்கள்.எம்.எல்.ஏ.வாக, எம்.பி. யாக இருந்தவர்கள் இருப்பவர்கள். ஏன்? இதில் அமைச்சர்கள் கூட உண்டு. உலகின் தலை சிறந்த குடியாட்சியில் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள்.
வெட்கக்கேடு - அரசியல் தலைவர்களுக்கல்ல. அவர்களுக்கு ஒட்டுப்போட்ட ஒவ்வொரு இந்திய குடி மகனுக்கும்.

Friday, June 5, 2009

தார்மீகப் பொறுப்பு

எங்க வூட்டுப் பக்கத்தில ஒரு சீனியர் சிட்டிசன் இருக்காரு. அந்துருண்டை போட்டு காப்பாத்தின பழைய சமசாரங்களெல்லாம் அப்பப்ப எடுத்து வுடுவாரு. காமராசு, காமராசு, அவரு கொள்கை வழில வந்தவங்கன்னு, சொல்ராங்களே இவங்கெல்லாம் இப்ப, அவரு இறந்தப்ப அவருக்குன்னு எந்த வித சொத்து பத்தும் கிடையாது. கக்கன், கக்கன்னு, ஒரு அமைச்சர் இருந்தார் தமிழ் நாட்ல. தாழ்த்தப் பட்ட வகுப்பினரை சேர்ந்தவர். அவர் போக்குவரத்துக்கு டவுன் பஸ் தான். லால் பஹதூர் சாஸ்த்ரி இரயில் துறை அமைச்சரா இருந்தார். அறியலூர்ல ஒரு டிரெயின் ஆற்றில் விழுந்தது. அதுக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று தன் பதவியை உடனே ராஜினாமா செஞ்சாராம்.
சொல்லு உடன் பிறப்பு. இந்த அந்துருண்ட கதையெல்லாம் சொல்லி, டாக்டர் அய்யா, அவரு தான், டாக்டர் ஜகத்ரக்ஷகன், அமைச்சர் பதவி விலகணும்னு ஒளர்ராறு. இது என்ன வெறும் ரயில் கவுரற விஷயமா? கோடிக்கணக்கான சொத்து கவுர்ற விஷயம். அதுவும் என்ன, தெரியாமலா டோனேஷன் வாங்கறோம். இதுக்காக எவ்வளவு வருஷ உழைப்பு. அதிகமா சொல்ல வேண்டாம். தன் மானத்தை விட்டு என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்குன்னு பண்றவங்களுக்குத்தான் தெரியும். தன் மானமாம், தார்மீகப் பொறுப்பாம், வெங்காயம், இதெல்லாம் வெட்டிப்பேச்சு. சீனியர் சிட்டிசன் பேச்சு.
விசாரண தாண்டி, வழக்கு நடந்தா அதுவும் தாண்டி, பதவிய பத்திரமா பாதுகாத்தாத்தான், அவர் நெஞ்சுக்கும், எங்கள் தலைவர் நெஞ்சுக்கும் உண்மையான நீதி கிடைக்கும்.

SINGH IS THE KING 3

Last time when I wrote on this topic, Dr.Manmohan Singh was forming his ministry. Karunanidhi and company pushed themselves ahead and got his son and grand nephew in to the ministry. Dr.Singh stated clearly that when we have to run the government we also have to look into it's effectiveness.
The first scam is out. Times of India's investigation has put minister Jagathrakshakan in a spot. Will Dr.Singh be a Rakshakan for Jagathrakshakan or simply the Jagath. We will have to wait and watch.
The initial response from Kapil Sibal is encouraging. But will he or anyoneelse take full responsibility, go ahead, reveal the truth and help the country's justice system punish the guilty.
It is a great opportunity for the Singh's ministry to control the alliance parties' arm twisting for ministerial berths. Jagath, must be removed unceremoniously and the people of the country will be with 'Singh the King'

Thursday, June 4, 2009

முகத்தில் கரி!

யார் முகத்திலையா கரி? எங்க டாக்டரையா முகத்திலையா? அவரு எப்படி டபாய்ச்சாரு பாத்தியா! முட்டி மோதி பேப்பர் காரங்க நேர்ல வந்தவுடனே டாக்டரு அய்யா எவ்வளுவு தெளிவா பதில் சொன்ன்னாரு படிச்சியா? அந்த காலேஜுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைன்னு. எப்பவோ பாவம் எல்லாரும் கேட்டாங்களேன்னு டிரச்டியா இருந்தார். அதுவும் ஒரு பொது நலப் பணியாகத்தான். நெட்டுல பாத்தாங்கலாமான்! அவுரு தான் சேர்மனாம். நெட்டுல எவன் வேணா எது வேணா போடுவான் எல்லாம் உண்மையாயிடுமா?
போகப்போக பாரு. அவரு விசாரணை, வழக்கு எது வந்தாலும் எப்படி சந்திப்பாருன்னு. மக்கள் வரிப்பணம் வீணா தண்ணியா செலவாகும். நாட்கள் ஓடும், மாதங்கள் ஓடும், வருடங்கள் ஓடும். அய்யா, நமது உடன்பிறப்பு, கரை படியாம, சின்ன நெஞ்சுக்கு ஒரு சின்ன நீதியோட பளபளப்பாரு. வரிப்பணத்தை வீணா வெட்டி வேலையா விசாரணைக்கும், வழக்குக்கும் குடுத்த மக்களின் முகத்தில் கரி.
என்ன, ஒரே ஒரு சிக்கல். அடுத்த வருஷம் இந்த டொனேஷன் பணத்தை இருபதிலேருந்து, முப்பது லட்சமாக்க வேண்டி வரும். பின்ன, விசாரணைக்கும், வழக்குக்கும் லட்ச லட்சமா செலவு பண்ண பணம் எவன் குடுப்பான்.
வாழ்க இந்தியா! வளர்க சுதந்திரம்! அரசியல் புரிவோரின் அளவு கடந்த சுதந்திரம்!

ஆரம்பிச்சிட்டங்கைய்யா, ஆரம்பிச்சிட்டாங்க!

நேத்திக்கு, தமிழ் நாட்டுக்கு ஆயிரத்து சொச்சம் மைல்கள் தூரத்தில் உட்கார்ந்து டைம்ஸ் ஆப் இந்தியா பேப்பரை வாங்கியதும், முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் தமிழ் நாட்டுச்செய்தி. மத்திய அமைச்சர் ஜகத்ரக்க்ஷகனுக்கு சொந்தமான கல்லூரியில் மருத்துவக் கல்விச் சீட்டுக்கு இருபது இலட்சம் ரூபாய் வேண்டினார்கள்.
ஏங்கையா! என்னய்யா புதுசா கண்டுபிடிச்சிட்டீங்க? என்னமோ உலக மகா அதிசயத்த கண்டுபிடிச்ச மாதிரி. எவ்வளுவு வருசக்கணக்கா, பல பேரு, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாம, உருப்படியா எந்த வேலையும் செய்ய, அதற்கு உண்டான படிப்பு இல்லாம, பொறுக்கிகளாய் திரிந்து, அரசியலே சிறந்த தொழில் என்று அதில் புகுந்து, தங்களோட முழு வாழ்க்கையையும் பொதுப் பணிகளுக்காக அர்ப்பணித்து இருக்கிறார்கள்.
இந்த மாதிரி பொதுப்பணிக்காக தங்களோட வாழ்க்கையை அர்ப்பணிக்கும்போது சில நிர்பந்தங்கள் இருக்கத்தான் செய்யும். இதப்போய் பெரிசு பண்றீங்களே! இப்படி வாங்கற பணத்தை பூரா அவங்க என்ன அவங்க வூட்டுக்கேவா தூக்கிட்டிப் போறாங்க? எவ்வளவு பேருக்கு தினப்பட்டுவாடா, மாதப்பட்டுவாடா, வருடப்பட்டுவாடா - இதெல்லாம் புரியாம வம்பு பண்றீங்களேய்யா!
இதெல்லாம் மீறி, சுருட்டற பணத்தை சுவிஸ் பாங்கில கொண்டு போய் சேக்கிறதுக்கு படர பாடு, மாத சம்பளத்துக்கு வேலை பாத்து, கம்பனி செலவுல பேனாவும் பேப்பரும் வாங்கி கிறுக்கரவுங்களுக்கு எங்க தெரியும்.
இதுக்கு நடுவுல அத்வானியும், மோதியும் புருடா உட்டாங்க. சுவிஸ் பாங்கில இருக்குற பணத்தையெல்லாம் வெளில கொண்டு வருவோம்னு. நல்ல வேளை - அவங்க கட்சி ஊத்திக்கிச்சு. இதனால்தான் மதச்சார்பு கட்ச்சிகளோட உறவே வச்சுக்கல.
சரி அத வுடு! டாக்டர் சீட்டுக்கு இருபது லட்ச ரூபா குடுத்தா என்ன தப்பு! டாக்டர் ஆயி வெளிய வந்ததும் எவ்வளுவு வழி இருக்கு சம்பாதிக்க. நேர்மையா இருந்து சில ஆயிரம் பார்க்கலாம். ஆனா அந்த மாதிரி ஆளு எங்க காலேஜுக்கு ஏன் வரான். இருபது லட்சம் குடுத்து வரவன் சில வருஷங்கள்ல பல கோடி பார்ப்பான். மருத்துவ உதவியிலிருந்து, நீலப்படம் வரைக்கும்.
மறுபடியும் சொல்றேன் - சாதாரண, மரியாதையான குடும்பத்தில் பிறந்து, படிப்புகள் படித்து, மாத சம்பள சாமானியனுக்கு இதெல்லாம் புரியாது. இதெல்லாம் புரியணும்னா, தெருப்பொறுக்கியா சுத்தி, சோடா பாட்டில் வீசி, கட்ச்சித்தொண்டனா இருந்து, கை கால் பிடித்து, வாழ்க்கைல முன்னுக்கு வந்திருக்கணும். புரியுதா உடன்பிறப்பே?

Tuesday, June 2, 2009

செக்யுலர் - மிகப்பெரிய பொய்

இந்திய அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும் கடந்த ஐம்பத்து இரண்டு வருடங்களில் மிகச்சரியாகப் பணியாற்றி இருக்கிறார்கள். இந்திய மக்களுக்கு இந்தியன் என்ற உணர்வு முழுவதுமாக வராமல் கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள். இன்று நாம் இந்தியர்கள், மதத்தாலும், இனத்தாலும், மொழியாலும் பிரிக்கப்பட்டு, நாம் அனைவரும் இந்தியர்கள் என்கின்றன மிகவும் தேவையான உணர்வு இன்றி, ஒருவரிடம் ஒருவர் விரோதப்போக்கு கொண்டு திரிகிறோம்.
அது மட்டுமன்றி, தேசப் பற்று என்பது அறவே இல்லாமல், வெளி நாடுகளில் செய்யத்துணியாத செயல்களை, நமது அன்னை திரு நாட்டில் தயங்காமல் செய்கிறோம். சாதாரண இந்திய குடி மகன், இன்று லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையோ, அல்லது அரசியல் வாதியையோ வெறுத்து ஒதுக்குவதில்லை. அவர்களிடம் அடிபணிந்து, கால்கள் பற்றி, தன் காரியங்களை சாதிக்கத் துணிந்து விட்டான். தன் மானம் என்ற பெரும் பொக்கிஷத்தை இழந்து, தன் லாபம் தேட இறங்கிவிட்டான். அரசியல்வாதி வென்று விட்டான். .......தொடரும்