Saturday, September 29, 2012

இந்திய வரலாறு 3

மௌலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்களின், காங்கிரஸ் தலைவர் பொறுப்பு 1946 ல் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நாடகத்தில், இதுவரை நாம் முக்கியமான நான்கு, ஆட்டக்காரர்களைப் பார்த்தோம். அவர்கள் காந்தி, நேரு, சர்தார் படேல் மற்றும் மௌலானா ஆசாத். 

மௌலானா ஆசாத் நான் அல்லது நேரு என்ற இரட்டை ஆட்டம் ஆடினார். நேரு தான் தலைமைப்  பொறுப்பில் இல்லாத பட்சத்தில், எந்த ஒரு இரண்டாவது நிலையிலும் நான் இல்லை, என்கின்ற பிடிவாத ஆட்டம் ஆடினார். என் நிலையினால் காங்கிரஸ் இரண்டு பட்டால், நான் அதற்குப் பொறுப்பு இல்லை என்று சொல்லாமல் சொன்னார். 

சர்தார் படேல் அவர்களின் நிலை அவருக்கும் மற்றவர்களுக்கும் தெளிவாக இருந்தது. நாட்டின் நலத்திற்கு முன்னர் நானும், என் பதவியும் முக்கியமானவை அல்ல. 

பல ஆண்டுகளுக்குப் பின்னர் தன நிலைப்பாட்டில் தவறு இருந்ததை நன்றாக உணர்ந்தார் மௌலானா. அவர் சொன்னதாவது: "நானும் சர்தார் படேலும் பற்பல  எண்ணங்களில் மாறுபட்டவர்களாக இருந்தோம். ஆனாலும் அவர் காங்கிரஸ் தலைமைப் பதவியில் இருந்திருந்தால், நேரு செய்த பல தவறுகளைச் செய்திருக்க மாட்டார். மேலும், காங்கிரஸ் கட்சியின் அக்காலக் கட்ட கொள்கைகள், திட்டங்கள்  முழுமையாக நிறைவேற்றப் பட்டிருக்கும். அதற்கும் மேலாக, ஜின்னாவிற்கு, காங்கிரசின் திட்டங்களைத் தடம் புரளச் செய்யும் வாய்ப்புக் கிட்டியிருக்காது."

இபோழுது ராஜாஜி அவர்கள் நிலையைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். "இராஜகோபாலாச்சாரி அவர்களுக்கு சர்தார் படேலிடம் இருந்த அதிருப்தி, கோபம், மற்றும் தயவற்ற எண்ணங்கள் அக்காலக் கட்டத்தில் சரியானவையாகவே புலப்படும்." (Prof.Makkhan Lal - Secular Politics Communal Agenda). ஏனென்றால் சர்தார் படேல், முதல் இந்திய ஜனாதிபதிக்கான பொறுப்புக்கு, ராஜாஜிக்கு சாதமாக  நின்றிருக்கவில்லை. 

ஆனாலும் படேல் மறைவுக்கு 22 ஆண்டுகள் பின்னர், ராஜாஜி எழுதினார்: "இந்திய நாட்டுச் சுதந்திர அறிவிப்பு நெருங்கி வரும் காலங்களில், காந்திஜி அமைதியாகக் காய்கள் நகர்த்துபவராக இருந்தார். அவர் ஒரு முடிவுக்கு வந்திருந்தார். காங்கிரஸ் தலைவர்களில் ஜவஹர்லால் நேரு தான் வெளிநாட்டு விவகாரங்களில் ஆழ்ந்த அறிமுகம் கொண்டவர் என்கின்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. எனவே அவர்தான் பிரதமராக வேண்டும் என்கின்ற எண்ணமும் தலைதூக்கி நின்றது. 'அனைவரிலும் அதிக நிர்வாகத் திறமை கொண்டவர் சர்தார் படேல் அவர்களே' என்கின்ற எண்ணம் பின்னுக்குத் தள்ளப் பட்டது 

நேருவை வெளியுறவுத்துறை அமைச்சராகவும் சர்தார்  படேல் அவர்களை பிரதமாராகவும் நியமித்திருந்தால் அதுவே  சரியானதாக இருந்திருக்கும். இரண்டு பேர்களில் நேருவே அதிக கூர்மை படைத்தவர் என்கின்ற என் எண்ணம் தப்பானது. சர்தார் படேல் இஸ்லாமியர்களின் மீது  விரோதப் போக்கு கொண்டவர் என்ற தவறான எண்ணம் பரவலாக இருந்தது. இதுவே எங்களின் பாரபட்ச முடிவுகளுக்கு ஆதாரமாக அமைந்தது".














Thursday, September 27, 2012

இந்திய வரலாறு 2

நமது இந்திய நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தயாராகிக் கொண்டிருந்தது. அதற்கு சில வருடங்கள் முன்னே நம் நாட்டில் நடந்தவை, நாட்டின் அளவிலும், உலக அளவிலும், வரலாற்று முக்கிய நிகழ்ச்சிகள். நாம் ஒவ்வொரு நாட்டுப் பற்று கொண்ட இந்தியனும், அவற்றை அறிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம் என்பது என் எண்ணம். 

1937 இல் முஸ்லீம் லீக் பொதுத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது. அதற்குப் பின் உடனடியாக, பொதுப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், குறிப்பாக ஹிந்து மதத்திற்கு எதிராகவும் ஒரு போர் நிலை கொண்டு பணியாற்றினார். இதுதான் இந்தியாவில், கட்சி அரசியலை, ஜாதி அடிப்படையில் பிரித்து, எதிர்மறை நிலையை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாகும்.

இப்பிரிவினையை, சமநிலைப் படுத்தும் முயற்சியை காந்திஜி மேற்கொண்டார். புத்தி கூர்மையுடன் செயல்பட்டு, மௌலானா ஆசாத் அவர்களை காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆக்குவதில் முயற்சி கொண்டு வெற்றி கண்டார். அடுத்த ஆறு வருடங்களுக்கு மௌலானா அப்துல் கலாம் ஆசாத் தன்னுடைய பொறுப்பை மிகத் திறமையுடன் நிர்வகித்தார். 

1946 வரையில்  இரண்டாவது உலகப்போர் காரணமாகவும், பெரும்பாலான் காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் இருந்ததன் காரணமாகவும், காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடந்தேறவில்லை. மௌலானா ஆசாத், 1946 ஆம் ஆண்டு வரையில், காங்கிரஸ் தலைவர் பதவியில் செவ்வனே  செயல்பட்டார். 

அக்காலக் கட்டத்தில் உலகப்போரும் முடிவடைந்து, இந்தியா தன் சுதந்திரத் தன்மையையும் வெகுவாக எதிர்பார்த்திருந்தது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு புதிய ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பது அவசியமானது. 15 பி.சி.சி. (ப்ராவின்ஷியல் காங்கிரஸ் கமிட்டி) க்களில் 12 பி.சி.சி.க்கள் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களை தேர்ந்தெடுக்க விழைந்தனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, அவர்தம் பெயரை முன்மொழிந்தனர். இதற்கு அர்த்தம் மற்ற 3 பி.சி.சி.க்கள், ஜவஹர்லால் நேருவின் பெயரை முன்மொழிந்தனர் என்பதல்ல. சிற்சில காங்கிரஸ் கமிட்டி பிரநிதிகளைத் தவிர, எந்த ஒரு கமிட்டியும் முழு அளவில் அவர் பெயரை முன்மொழியவில்லை என்பதே உண்மை. 

அதற்குப் பிறகு நடந்த உயர் தலைவர்கள் கூட்டத்தில், காந்தி இச்செய்தியை தலைவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தினார். மேலும், நேருவிடம் நேரிடையாகக் கேள்வி எழுப்பினார்: "இந்நிலையில் என்ன முடிவு எடுப்பதென்று?" அமைதி காத்தார் நேரு. அதுவே அவர்தம் ஆழ்ந்த பதிலாக அமைந்தது. 

மௌலானா ஆசாத் தேர்தல் நடந்திடக் கோரினார். ஆனால் காந்தி  நேருவைத் தலைவராக்கிவிட வேண்டுமென்று, ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். வேட்பாளர் பெயர் முன்மொழிதலுக்கான தேதி 29 ஏப்ரல் 1946 அன்று முடிவடைந்திருந்தது. அன்று வரை நேருவின் பெயர் எந்த ஒரு ப்ராவின்ஷியல் கமிட்டியினாலும் முன் வைக்கப்படவில்லை. கிருபளானி நேருவின் சார்பில், தனி உறுப்பினர்களின் பரிந்துரைகளைப் பெறுவதில் மும்முரமாக களமிறங்கினார்.

நேருவின் நிலை தெளிவாக இருந்தது. தன்னால்  எந்த ஒரு இரண்டாவது இடநிலையும் ஒப்புக்கொள்ளப்படாது என்பதில். தலைவர் பதவி இன்றியேல், எந்த ஒரு பதவிக்கும் தயாரில்லை என்பதில் அவர் திட்டவட்டமாக இருந்தார். அதன் காரணமாகவே பெரும் நாடகம் ஒன்று அரங்கேறியது. ஒரே வழி சர்தார் படேல் அவர்களை விலகிக்கொள்ள வைப்பது என்பதுதான் அது. சர்தார் படேல் ஒரு உண்மையான மற்றும் மிகவும் ஆழ்ந்த தேசியவாதி. தனிக்குணம் பெற்ற தலைவர். அவரைப் பொறுத்த அளவில், நாடு ஒரு தனி மனிதரையும் அவர்தம் பதவிகளையும் விட உயர்ந்தது. 

பின்னர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் எண்ணவடிவைப் பார்ப்போம்: மறுபடியும் காந்தி, வசீகரமான நேருவுக்காக, தனது நம்பிக்கைக்குரிய துணைவரைத் தியாகம் செய்தார்.



















Wednesday, September 26, 2012

இந்திய நாட்டு வரலாறு 1
 இந்திய நாட்டு வரலாறு என்று  சொன்னாலே நாம் ஒவ்வொருவரும்  படிப்பதும், கேட்பதும் இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்:

இந்திய வரலாறும், பண்பாடும், மிகுந்த அளவில் செழிப்பும், வளமும் கொண்டதாக இருந்தது.  அதன் தாக்கம், இன்றைய  சமூகக் கோட்பாடுகளிலும் ஊறி வளர்ந்திருக்கிறது என்று நான் சொன்னால் மிகையாக இருக்காது. பல்லாயிரமாண்டு காலங்களாக, பரந்து விரிந்த ஆட்சியமைப்புகள், வணிகத்துறை வாயில்கள், இந்து சமவெளி நாகரிகங்கள் என்று பல்வேறு வளர்ச்சிகளுக்கும், வளங்களுக்குமாக மேற்கோள் காட்டப்பட்ட நாடு நம் பாரத நாடு. உலகத்தின் நான்கு பெரு மதங்கள் இங்கு தான்  உருவாயின. ஹிந்துத்துவம், புத்தம், சமணமதம், மற்றும் சீக்கியம் இம்மண்ணில் தான் உருவாகி வளர்ந்தன. மேலும் பாரசீக மதம் சார்ந்தவர்கள், யூதர்கள், மற்றும் இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும், இம்மண்ணில் வந்திருந்து இந்நாட்டு குடியுரிமையுடன் பல நூற்றாண்டுகளாக, இம்மண்ணின் புதல்வர்களாகவே பெருமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். நம்நாடு, பாரதநாடு பல்வேறு பண்பாடுகளையும், பழக்க  வழக்கங்களையும் உள்ளடக்கி ஒரு  உன்னத  நாடாக உருவானது. 1947 ஆம் வருடத்தில் இந்திய நாடு, ஆங்கிலேயரின் அடிமைத் தளையிலிருந்து   விடுபட்டு,  சுதந்திரக் காற்றை சுவாசிக்க  ஆரம்பித்தது. ஒரு முன்னேற்றப்பாதை நாடாக பரிமளித்தது. 

 இதுபோன்ற உன்னதப் பின்னணியில் உருவான  ஒரு நாடு இப்பொழுது  உலக அரங்கில் எவ்வாறு பரிமளித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்த்தால் நமக்கெல்லாம் வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். சிறு வயதிலிருந்தே நான் சரித்திரப் பாடத்தை  மிகவும் ஆர்வத்துடன் படிப்பேன். என் நண்பர்கள் என்னை ஒரு விநோதப் பிராணியாகப் பார்ப்பார்கள். ஆனால் நான் அப்பொழுதும் திண்ணமாக இருந்தேன். நமது நாட்டு வரலாறைப் படிப்பது மிக சுவாரஸ்யமானது  மட்டுமல்ல, மிக  அவசியமானதும் கூட என்று நான் நம்பினேன்.

200 ஆண்டுக்க்ளுக்குப் பின்னர் நமது சந்ததியினர், நமது இப்போதைய வரலாறைப் படித்தால் எப்படியிருக்கும், என்று சற்றே எண்ணிப் பார்த்தால் நல்லது என்று தோன்றியது. ஒரு  சிலர் கணிப்புப்படி,  பரவலாக  உலாவி வரும் வதந்திப்படி,  2012 டிசம்பரில்  உலகம் அழியாமல் இருந்தால், நமது சந்ததியினர் இந்தியாவைப் பற்றி என்ன படிப்பார்கள். ஒரு கற்பனை. நிஜமாகக் கூடிய கற்பனை:

சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னர்  இந்திய நாட்டை வெகுவாக நாகரிக வேடம் போட்டு  மெத்தப் படித்தவர்களும், மழையிலும் பள்ளிப் பக்கம் ஒதுங்காத எழுத்தறிவு இல்லாதவர்களும், ஒன்றே கூடி அரசியல்வாதிகள் என்கின்ற பெயரில் சுரண்டினர்.  கூட்டுக் கொள்ளை அடித்தனர். சுமாராகப் படித்தும், வெகு அளவில் படித்தும்  பட்டம் பெற்றவர்கள் பலர் அரசு அலுவலர் என்கின்ற பெயரில் அரசியல்வாதிகளில் கொள்ளைகளுக்குத்  துணை போயினர். மொத்தக் கொள்ளையில் தன பங்கைப் பெற்று பாராட்டி வாழ்த்தினர். தொழிலதிபர்கள் என்று பொய்ப்பெயரிட்டு இருவருக்கும் துணை போயினர் இன்னும் பலர்.

இதற்கு முன்னர் ஆங்கிலேயர்கள் நாட்டு எல்லைகளுக்குள் நுழைந்து 'கிழக்கிந்திய கம்பெனி' என்னும் போர்வையில் சிறுகச் சிறுக முழு நாட்டையும் தன வசமாக்கினர். நாட்டின் வளங்களைச் சுரண்டினர். சாதாரண இந்தியன் அவனிடம் ஆயுள் கால வூழியனாகி, அடிமையாகி அவனுக்குச் சேவைகள் பல செய்து வயிறு வளர்த்தான்.

இவர்களிடையே குஜராத் பகுதியில் போர்பந்தர் என்னும் நகரில் மோகன்லால் கரம்சந்த் காந்தி என்றொரு இளைஞர் இருந்தான். நன்கு படித்து பின்னர் சட்டம் பயின்றான். தெற்கு ஆப்பிரிக்காவில் ஒரு இந்திய இஸ்லாமியரின் சார்பில்  வழக்கில் வாதாடச் சென்ற இந்த இந்தியன், கருப்பன், புகை வண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்ததற்காக, புகைவண்டிப் பெட்டியை விட்டு தான் கொண்டு சென்ற பெட்டியுடன் நள்ளிரவில் வெளியே தள்ளப்பட்டான்.

அவனுக்குத் தன்னைத் தானே திருத்திக் கொள்ள வாய்ப்பு தரப்பட்டது. மற்ற எந்த ஒரு இந்தியனாக இருந்திருந்தாலும் தானுண்டு தன வேலையுண்டு என்று வேலை முடித்து நாடு திரும்பியிருப்பான். எம். கே. காந்தி அப்படிச் செய்யவில்லை. இளைஞர் வெகுண்டெழுந்தார்.
 'நான் இவ்வேறுபாட்டை எதிர்ப்பேன், இதற்காகப் போராடுவேன்' 
யாரை எதிர்த்துப் போராடுவார்? உலகத்தில் பாதிக்கு மேல் தன ஆளுகையில் வைத்திருக்கும் ஆங்கிலேயரை எதிர்த்து. பல நல்லெண்ணம் கொண்டவர்கள் அவரை அமைதிப்படுத்த முயன்றனர். அவர் அமைதியடைய விரும்பவில்லை. ஆங்கிலேய அரசை எதிர்ப்பதென்று ஒரு அதீத முடிவுக்கு வந்து விட்டிருந்தார்.

சில பத்து இந்தியர்களைக் கூட்டி வைத்து பொது இடத்தில் அரசுத்தாள்களைத் தீயிலிட்டார். அவர் அடித்து உதைக்கப் பட்டார். பற்பல முறைகள் சிறையிலடைத்துத் துன்புறுத்தப் பட்டார். ஆனால் அவர் அடங்குவதாக இல்லை. மாறாக அவரின் போராட்டம் மேலும் மேலும் வளர்ந்தது.
'இந்தியாவை விட்டு வெளியேறு' என்று கூக்குரலிட்டார்.

கத்தியின்றி, ரத்தமின்றி போராடுவோமென்றார்.  
வன்முறையற்ற, ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். ஆனாலும் ஒன்று இங்கு தெளிவு படுத்தியாக வேண்டும்.  அவரால் இது போன்ற ஒரு இயக்கத்தை ஆங்கிலேயருக்கு எதிராக நடத்தியும் உயிர் வாழ முடிந்தது. அவர் குடும்பங்களும், மற்றப் போராளிகளின் குடும்பங்களும் உயிர் வாழ்ந்தன. உலகத்தில் பல பகுதிகளை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் பெருமளவு தனி மனித நாகரிகம் காத்து வந்தனர். ஆனால் இதே நாட்டில் பின்னர் சுதந்திரம் கிடைத்த பிறகு, ஆட்சியாளர்களின் குற்றங்களைத் தட்டிக் கேட்பது பெரும் ஆபத்தான விஷயமாக ஆனது. குற்றங்களைத் தட்டிக் கேட்பவர்களை நாட்டு விரோதிகள் என்றும், வெளிநாட்டு ஊடகர் என்றும் முத்திரையிட்டு, முடிந்தால் துன்புறுத்தினர்.

இக்காலக்கட்டம் குறிப்பாக விவசாயிகளுக்கும், உடலுழைப்பை மட்டுமே மூலதனமாக்கிப் பாடுபட்டு, ஊதியம் பெறுவோருக்கும் ஒரு சோதனையான காலமாக இருந்தது. பொருளாதார வசதிகளில் கீழ்நிலைக்காரர்களும், நடுநிலைக்காரர்களும் 'அன்றாட மான மரியாதைக்குரிய வாழ்வுக்கும்',
'தன குழந்தைச் செல்வங்களின் ஆசாபாசங்களுக்கும்' இடையில் சிக்கிப் பரிதவிப்பு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

தங்கள் அன்றாட வாழ்வை முறையாக வாழ்வதற்கு, தங்கள் கடும் உழைப்பில் பெற்ற வருமானத்தில், பற்பல வகையான வரிகளை செலுத்தி வந்தனர். இவ்வரிப்பணத்தில் வாழ்ந்த அரசியல்வாதிகளும், அரசு அலுவலர்களும் மேலும் பல ஊழல்கள் செய்து பொதுமக்களைத் துன்புறுத்திப் பணம் பெற்றதை வழக்கமாகவே கொண்டிருந்தனர். சாதாரண மனிதன் முதுகெலும்பு ஒடிந்தவனாக, தவறுகளைத் தட்டிக்கேட்கத் திராணியற்றவனாக, பொறுமை என்கின்ற பொய்யான பெயரில், அசாதாரண சகிப்புத்தன்மையுடன் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தான்.

ஊழல் அரசியல்வாதிகளுக்கும், அரசு அலுவர்களுக்கும் வேண்டியதைக் கொடுத்து தன் காரியங்களைப் பல நெறிகெட்ட வழிகளிலும் தொடர்ந்து செய்து, நாட்டின் தொழிலதிபர்களாக மின்னியவர்களும் பலர். மேலும் தொடர்ந்து இவ்வூழல்வாதிகளின் நெறியற்ற நிலைகளையும் செயல்களையும் கூர்ந்து பார்ப்போம். ........................தொடரும்.









Tuesday, September 25, 2012

HISTORY OF INDIA 4

HISTORY OF INDIA 4

I am afraid that when we speak about the History of our independent India, more often it could sound as Corruption in India. Over time, the history of India will be seen as the 'History of Corruption' that shaped the history of India. 

Having said that, let us see what Mahatma Gandhi said about Congress and corruption: "I would to the length of giving the whole Congress a decent burial, rather than put up with the corruption that is rampant". This was Gandhiji's reaction to corrupt practices by the Congress ministries formed under 1935 act in six states in the year 1937. The so called disciples of Gandhi however, ignore his concdrn over corruption in post Independence India, when they came to power. 

The first scandal in Independent India:
The jeep scandal in 1948 was the first major corruption case in independent India. V.K.Krishna Menon, the then Indian high commissioner to Britain ignored protocols and signed a Rs.80 lakh contract for the purchase of army jeeps with a forein firm.

While most of the money was paid upfront, just 155 jeeps landed. But the then Prime Minister Nehru forced the government to accept them. There was an inquiry committee led my Ananthasayanam Ayyangar. But the Congress Government was in no mood to listen to the committee's findings. Govind Ballabh Pant, the then Home Minister announced on September 30, 1955, "As far as Government was concerned, it has made up its mind to close the matter. If the opposition was not satisfied they can make it an election issue".

Soon after all these Krishna Menon was inducted into the Nehru's cabinet without portfolio. Later he became Nehru's trusted ally and the defense minister of India.

Morals of the story: 
1. If you want a ministerial berth in a Congress regime, get involved in a scandal first.

2. The Indian defense was not spared from corruption as early as in 1948. Why then keep talking even today about Bofors, and Howitzer deals.

















 

Saturday, September 22, 2012

Money does not grow on trees. It comes from our Taxes

 பணம் மரங்களில் காய்ப்பதில்லை
எங்கள் வரிகளிலிருந்து வருகிறது 

பிரதமர் நேரடியாக நம் மக்களுடன் உரையாடப் போகிறார் என்று கேள்விப்பட்டதும் எதிர்பார்ப்பு அதிகமானது. காலையிலிருந்தே முன்னேற்பாடு. வேலைகள் அனைத்தையும் விரைவில் முடித்து விட்டு பிரதமர் பேச்சில் முழு கவனம் செலுத்த விழைவு. பேசப்போகிறவர் பிரதமர் மட்டுமல்ல. மெத்தப்படித்த பொருளாதார வல்லுநர். 1991 இல் நிதி மந்திரியாக இருந்து உயரிய பொருளாதார மாதிரிகளை முன் வைத்தவர். எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும். 

முதலில் ஹிந்தியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் பேசினார். பொருளாதார வல்லுநர் பேச்சைக் கேட்க அமர்ந்தவன் ஒரு சாதாரண அரசியல்வாதியின் பேச்சைக் கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். 

'பணம் மரங்களில் விளைவதில்லை' என்று கூறி வரி செலுத்தும் சாதாரண குடிமகனை விவரமற்றுக் கடிந்து கொண்டார். அவருக்கு அவர் தம் பேச்சை எழுதிக் கொடுத்தவர், இன்றைய நிலையில், குடிமக்களின் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டவரில்லை என்பது புலனானது. தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், பெருமளவு பணவீக்கம், மற்றும் நாளும் தொடரும் கட்டுங்கடங்கா ஊழல்கள். இவற்றினிடையே, 

நாங்கள்,  பல்வேறு வகைகளில் நாளும் வரிகள் செலுத்தும் குடி மகன்கள்  உங்களைக் கடிந்து கொண்டிருக்க வேண்டும் - "பணம் மரங்களில் விளைவதில்லை. எங்கள் வரிகளிலிருந்து வருகிறது" என்று.  நாங்கள் உங்களைக் கட்டாயம் கடிந்து கொண்டிருக்க வேண்டும் "நீங்களும், உங்கள் மந்திரிகள் மற்றும் பல்துறை அதிகாரிகளும்  எங்கள் வரிப்பணத்தில் ஊழல் செய்யாதீர்கள், பணம் நிறையப் பெற்றுக்கொண்டு மிகவும் தரமற்ற ஆட்சியை எங்களுக்குத் தராதீர்கள்" என்று. ஆனால் மாற்றாக நீங்கள் எங்களைக் கடிந்து கொண்டீர்கள். வேடிக்கையாக இருக்கிறது. 

அது போகட்டும். முன்னதாக, பெட்ரோல் விலையேற்றத்தில் போது சொல்லப்பட்டது. "பெட்ரோல் உபயோகிப்போர் பணக்காரர்கள். சாதாரண குடிமகனுக்குத் தேவை டீசல். எனவே பெட்ரோல் விலையேற்றம். டீசல் விலை ஏற்றமில்லை" என்று. நேற்று இரவு சொன்னீர்கள் "டீசல் பெரும் பணக்காரர்கள் தங்கள் பெரிய கார்களில் உபயோகிக்கிறார்கள். பெட்ரோல் ஸ்கூட்டர் ஓட்டுபவர்களும், மோட்டார் பைக் ஓட்டுபவர்களும் உபயோகிக்கிறார்கள் என்று". ஏனிந்த முரண்பாடு. பெருவண்டிக்கு உபயோகப் படுத்தப்படும் டீசல் வெறும் 0.6 சதவிகிதம் மட்டுமே என்பது எனக்குத் தெரிந்த விவரம்.

45 வருடங்களுக்கு முன் என் முப்பாட்டி சொன்னாள்: "கலியுகம்டா இது கலியுகம். போகப்போகப் பாரு. பத்தினி என்று பாராட்டப் பட்டவள், காசுக்காக குறுக்கு வழியில் செல்வாள். படித்தவர்கள் என்று போற்றப்பட்டவர்கள் பொய் பேசித் திரிவார்கள்". நான் அன்று அவளை நம்பியிருக்கவில்லை. பாட்டி பாவம் சிறு பொது அறிவு கொண்டு பெரிதாகப் பகட்டித் திரிகிறாள் என்று. நேற்றிரவு உங்கள் பேச்சு முப்பாட்டியின் கலியுகக் கூற்றை உண்மையாக்கி விட்டது. எப்படி அய்யா, எப்படி உங்களால் கண்ணிமைக்காமல், இந்தக் கண்றாவியை பேச முடிந்தது. 

இதுவரை தங்கள் அமைச்சரவையைப் பற்றி யார் எது சொன்னாலும், உங்களிடம் ஒரு தனி மனிதர் என்கின்ற நிலையில், ஒரு தவிர்க்க முடியாத நம்பிக்கை என்றும் இருந்தது. 'ஊழல்வாதிகளால்  சூழப்ப் பட்டிருக்கும் ஒரு நேர்மையான மனிதர்' என்கின்ற பச்சாதாபம் இருந்தது. ஆனால் அவையனைத்தும் இன்று தங்கள் பேச்சுக்களால் தவிடு போடி. நன்றி அய்யா. நன்றி. தங்களின் தப்பான முகத்திரையை தாங்களே கிழித்தெறிந்ததற்கு.

1991 இல் தங்கள் செயல்பாடுகளை உதாரணம் காட்டினீர்கள். 1991 க்கும் 2012 க்குமிடையே எந்த ஒரு சமநிலையும் இல்லை. அன்று சோனியாஜி இருந்திருக்கவில்லை. 2ஜி, சி.டபிள்யூ.ஜி, சி.ஜி. இன்னும் பல, இதுவரை வெளிவராத ஜிக்கள் இருந்திருக்கவில்லை. தாங்களும் இதுபோல் தடுமாற்றத்தில், ஆட்சித் தடுமாற்றத்தைச் சொல்லவில்லை, நன்னெறித் தடுமாற்றத்தில் இருந்திருக்கவில்லை.

தங்களையும், இந்நாட்டையும், நாட்டு மக்களையும் கடவுள் என்றொருவர் இருந்தால் அவர் மட்டுமே காப்பாற்ற முடியும். வாழ்க! வளர்க!











Money Does not grow on Trees. It comes from our Taxes.

Money does not grow on Trees

For the last two days, I was quite anxious. May be most of you too, to listen to the Prime Minister addressing the public. I thought finally we have a chance to listen to a scholar, an economist, a man who made so much difference to the country by his economic policies, as a finance minister in P.V.Narasimharao's Ministry. So all our expectations were well founded.We were ready to listen to his version of the rationale in the recent policies of the Government particularly with regards to price rice of Diesel and a sudden decision, as it appeared to open the flood gates of FDI

First of all I am of the opinion, that the address that he read out was not well researched and not written by some one who has high sensitivity to the tax paying public. Why do I say so? At one point in time the Prime Minister chided the tax paying public "Money does not grow on trees". This according to me is the most frivolous utterances our Prime Minister could make at this point in time. Scam after scam, non stop price escalation of essential commodities, added to the poor governance, these are actually the words of the tax paying aam admi. 

Our dear Prime Minister, money does not grow on trees. It comes from our hard work and the taxes that we pay. Therefore, please be careful with our money. Your ministers and bureaucrats have no business to squander our money in scams and in return offer us a poor governance. You have said frivolously to us, what we must have told you with a snub for your frivolity and sob at our foolhardiness in electing you and your ministers. 

Wah! Manmohanji! I wish an early end to your government, 
because we pay tax, and you people think that 'money grows on trees'.

Do they in Cell Phones, International Games, Coal Mines.....and how do I know what next!

You compared your present decision to the decisions taken in 1991 as a finance minister when Rao was the P.M. There is no comparison Mr.P.M. In 1991 there was no SoniaG, 2G, CWG, CG and may be more to come soon!
When last time there was an escalation in Petrol price, we were told that the diesel price is not increased because it is used by aam admi. While Petrol is used to drive vehicles of the rich. But this time you said, petrol price is not increased because it is used by scooterists, that is aam admi. And diesel is used by rich men with SUVs. OMG! The use of diesel by SUVs in India, if my information goes right is about 0.6% of the total Diesel usage. It is most used by the agriculturist, in public transport systems, and in shipping commodities across the country.

I did not believe when my great grand mother, about 45 years ago, told me these words: "We are in Kaliyug. Things will go from bad to worse. A true Patni will not hesitate to sell herself for money. The intelligentsia of this world will become a bundle of lies. The people whom you respect and give honor will behave in a cheap and condemnable manner". As an youngster those times, I thought it was just a brag. When this day I hear the utterances of well educated men and women like you, I am compelled to believe her predictions and the concept of Kaliyug.  

Manmohanji. I always had a benefit of doubt when it came to you. I always considered you a knowledgeable and honest man in the middle of political mavericks. Now  I am afraid the doubt is gone and I have come to believe that you are no different from all those scam tainted men and women around you. May God bless you and this country!











Friday, September 21, 2012

HOW MUCH DO WE KNOW ABOUT RAJAJI?

Couple of readers after reading the last article on 'History of India', commented back saying that they wanted to have more information about Rajaji, Shri.Rajagopalachariar. Thus this piece of writing. Several writings have helped me to obtain authentic and relevant information:

Shri.Chakravarthi Rajagopalachariar was born on December 8, 1878 near Hosur in the then Salem District. He did his schooling in Hosur, Arts Graduation in Bangalore and law education in Law College, Madras. When Swami Vivekananda went to Madras, he visited the Law College, entered into Shri.Rajagopalachari's room and they had a brief conversation. 

After obtaining his graduation in law he went back to Salem to begin his private practice as a lawyer. Soon he was acclaimed as one of the most efficient criminal lawyers in the town. And at that point in time, he was just 21 years old. Varadarajulu Naidu was a patriot and was prosecuted in Salem for speaking against the British Government. Rajagopalachariar took this high profile case and was successful in getting his acquittal. 

After this incident, so far a lawyer and a professional was inspired to contribute to the society by participating in various social reformation programs. He was in the year 1917, elected as the President of the Salem Municipal Council. He started night schools for the uneducated adults and factory workers. Schools for Harijans were opened under his administration. He ensured water supply to Harijans' locality in his town. Even many elderly people whom he respected opposed him. But he did not relent. 

Then happened a major event. Annie Besant was arrested and taken by train which crossed Salem. A large number of people gathered at the station to see Annie Besant. Rajagopalachariar, disciplined the crowd, ensured orderly behavior and avoided untoward incidents, as the Collector of Salem was preparing to give shooting orders to his police force. Later he represented Annie Besant and got her acquittal from the charges the British Government had made. 

While Gandhi made the Dandi Salt Satyagrah in Gujarat, Rajagopalachariar organized and executed the Vedharanyam Salt Satyagrah. He joined Congress and entered into active politics. When for the first time Congress participated in General Elections and won, he became the Chief Minister of the Madras Province.

On the eve of Indian Independence, he was a Central Minister when Nehru was the Prime Minister, later the Governor of West Bengal. He was of course the first Indian Governor General. He occupied that position till the day of declaration of the Repulic of India on January 26th, 1950.
                          
 Visit this page again to know more to know about Rajaji..............