Sunday, December 12, 2010

கம்பன் புகழ்கவிதை பாடுவோம்
வள்ளுவனை வான்சிறக்க வாழ்த்திடுவோம்
கண்ணகியின் கற்பினை வழிபடுவோம்
மேடைகளேறி அடுக்குமொழியில் அசத்திடுவோம் - ஆனால்
தனிவாழ்க்கையிலும், பொதுவாழ்விலும் நெறிதவறி
...கண்ணியம் கடந்து பொருளீட்டுவோம் - இதுதான்
தன்மானச்செயலென்று தலைகுனிவின்றிப் பிதற்றுவோம்
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்னின் தன்மானம்!
தன்மானத்திற்கு எதிரே எதுவும் கேள்வி எழுந்தால் தேட ஆரம்பிப்போம்
"நெஞ்சுக்கு நீதி"

Wednesday, December 8, 2010

வேற்றுமையில் ஒற்றுமை

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். எனது சரித்திர ஆசிரியர், மிகச்சிறப்பாக வகுப்பு நடத்துவார். அன்றைய தினத்திற்கான பாடங்கள் நடத்திய பிறகு, பத்து பதினைந்து நிமிடங்கள்