Sunday, November 30, 2008

WHAT KIND OF A VICTORY IS THIS?

THE WAR IS OVER. THERE IS JOY ALL AROUND. ALREADY THE CHIEF MINISTER OF MAHARASHTRA HAS STARTED TALKING AS IF WE HAVE WON A GREAT WAR AGAINST OUR ENEMIES. THAT IS VILASRAO DESHMUKH. LOOK AT THE LOGICS OF HIS DEPUTY R.R.PATIL. HE SAYS MORE THAN 5000 PEOPLE COULD HAVE LOST THEIR LIVES. ONLY 193 DID. THEREFORE IT IS A GREAT VICTORY.

THE LIFE OF EVERY INDIVIDUAL IS VERY PRECIOUS FOR MANY, FOR THE MEMBERS OF THE FAMILY AND OTHERS OUTSIDE THEIR FAMILIES. THE BRAVE HEARTS IN POLICE, ARMY AND NSG HAVE LOST THEIR LIVES. WHAT FOR? FOR THE FAILURE OF OUR POLITICIANS TO DO WHAT THEY WERE SUPPOSED TO DO IN THOSE HIGH OFFICES THEY ARE OCCUPYING. THESE HEROES LOST THEIR LIVES NOT BECAUSE, SOME ENEMIES ATTACKED OUR COUNTRY AND THESE MEN WERE DEPLOYED TO SAVE THE COUNTRY. BUT BECAUSE OUR CORRUPT AND INCOMPETENT POLITICIANS AND BUREAUCRATS MAKE WAY FOR SUCH THINGS TO HAPPEN.

GENTLEMEN AND LADIES. THERE IS NOTHING TO CELEBRATE AT THIS MOMENT. WE CAN ALL HAVE A SIGH OF RELIEF. BUT IT IS OUR DUTY TO ENSURE THAT A SIMILAR THING DOES NOT HAPPEN IN FUTURE. FOR THAT WHAT IS MOST IMPORTANT IS TO INTEGRATE OUR LIVES WITH TRUE PATRIOTIC VALUES. THAT CAN ONLY CHANGE THE SCENARIO. OTHERWISE, SUCH THINGS WILL BECOME MONTHLY OR EVEN WEEKLY OCCURRENCES.

Saturday, November 29, 2008

COUNTRY OF COWARDS, RULED BY THE CORRUPT


I WRITE THIS ARTICLE WITH DUE APOLOGIES TO THE BRAVE HEARTS IN THE POLICE, THE ARMY, AND THE STATE AND NATIONAL SECURITY AGENCIES.

OUR COUNTRY'S POPULATION AT LARGE IS SELF CENTRIC, FALSELY EGOISTIC, UNPATRIOTIC, COWARDS. NATURALLY WE ARE RULED BY THE POLITICIANS, WHO ARE UNPATRIOTIC AND CORRUPT TO THE ROOTS. WATCHING THE HAPPENINGS AT TAJ, TRIDENT AND NARIMAN HOUSE FOR THE LAST THREE DAYS, IT IS COMMON SENSE TO UNDERSTAND, HOW MALFUNCTIONING OUR ENTIRE SECURITY SYSTEMS ARE. FOR THE LAST ONE WEEK I HAVE BEEN TRAVELING A LOT ON ROAD, RAIL AND AIR. WHILE ALL THESE ARE HAPPENING IN MUMBAI, I SAW NO PANIC, NO ANXIETY, ON ANYONE'S FACE DOWN SOUTH. OF COURSE THEY HAVE THEIR OWN TROUBLE OF SWIMMING OUT OF THEIR HOMES, OR AT LEAST WALKING OUT IN KNEE DEEP WATER, WITHOUT POWER SUPPLY AND FOOD.

THE TRUTH BEYOND THIS, NO WHERE, THAT IS IN BUS DEPOTS, OR RAILWAY STATIONS I SAW ANY ENHANCEMENT OF SECURITY SYSTEMS AND PERSONNEL. BACK IN MY ROOM ON THE T.V. SCREEN, I SAW AND HEARD THE NEWS READER, READING "THE SECURITY SYSTEMS HAVE BEEN BEEFED UP IN THE STATE". WHAT NON-SENSE AND WHOM ARE THEY FOOLING? THE SECURITY PERSONNEL WERE BUSY ESCORTING THE C.M, OTHER MINISTERS AND M.L.As VISITING THE FLOOD AFFECTED AREAS. THEY ARE AFTER ALL THE VVIPs AND THEY NEED ALL THE SECURITY. THAT IS ABOUT OUR LEADERS.

WHAT ABOUT OUR PEOPLE?

FROM THE OTHER PARTS OF THE COUNTRY I HEAR LOT OF ANGER AGAINST THE MUSLIM COMMUNITY AND PAKISTAN IN PARTICULAR. WHAT KIND OF ANGER IS THIS? I OPINE THAT IT IS NOT ANGER ARISING OUT OF AWARENESS AND REALIZATION. IT IS JUST ONE MORE CHANCE TO SPIT ON THE FACE OF THAT PARTICULAR COMMUNITY. NOTHING BEYOND THAT.

IF IT WERE THE OUTCOME OF AWARENESS RESULTING IN ACTUAL REALIZATION, THERE WILL BE A GREAT SENSE OF RESPONSIBILITY AND OWNERSHIP. WE WILL STOP BLAMING THE POLITICIANS AND START LOOKING INTO OUR OWN CHARACTERS. THIS IS THE FIRST STEP TOWARDS ANY CHANGE. SUBSEQUENTLY, ALL OUR BEHAVIORS WILL BE BASED ON SOUND PATRIOTIC VALUES.

THIS HAS TO BEGIN FROM THE LEVEL OF NOT THROWING AWAY WASTES, SPITTING ON OUR ROADS, AND SO ON TO HIGHER LEVELS OF THOUGHT AND ACTION. MOST IMPORTANTLY NOT TO GIVE OR TAKE BRIBE. TILL THEN I CAN ONLY SAY "WE" "WE ARE THE CULPRITS, WE ARE THE ASSASSINS, WE ARE THE SOCIETAL TERRORISTS". AND WE GET PUNISHED ONCE IN A WAY BY THE PEOPLE WE CREATE.





Sunday, November 23, 2008

அன்புமணியின் ஆணை

அன்பு மணி ஆணை இட்டார். பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என்று. இன்று நிலை என்ன? சில நாட்களுக்கு முன்னே அவர் ஆட்சியில் அமர்ந்திருக்கும் டில்லி மாநகரம் சென்று இருந்தேன். மிக்க மகிழ்ச்சி. சிற்சில சிறிய உள் தெருவுகளிலன்றி பெரும்பாலான இடங்களில் மக்கள் புகை பிடிப்பதை நான் காணவில்லை. ஆனால் சென்னையில் நான் கண்டது என்ன?

பீடி பிடிப்பவர்களும் சரி! சிகரெட்டு பிடிப்பவர்களும் சரி! வேட்டி அணிந்திருந்தாலும், லுங்கி அணிந்திருந்தாலும், பாண்ட் அணிந்திருந்தாலும், எந்த பாகுப்பாடும் இல்லாமல், முழுச்சுதந்திரமான உணர்வோடு புகைப் பிடித்துத் தள்ளுவதை தாராளமாகப் பார்க்க முடிந்தது. ஒரு உயர்தர ஓட்டலில், நுழைவு வாயிலில் படித்தவராக, நல்ல பதவியில் இருப்பதாகக் காணப்பட்ட ஒரு நபர் நின்று சிகரெட்டு பிடித்துக்கொண்டிருந்தார். நான் அதை ஆட்சேபிக்கவும், நீங்க என்ன போலிஸ்காரரா? உங்க வேலைப் பாத்துக்கிட்டுப்போங்க சார் என்று அதட்டலாகச் சொன்னார். மேலும் பேச விருப்பமில்லாமல் நகர்ந்தேன். என்ன அன்பு மணி சார்? உங்கள் உத்திரவு, தமிழ்நாடு சென்று அடைய வில்லையா? அங்கு இயங்கும் உங்கள் நண்பர்களின் அரசு உங்கள் ஆணையை மதிக்கவில்லையா?

பதவியில் அமர்ந்து பேசுவதும், பேப்பர் வழியில் ஆணை போடுவதும் எளிது? எந்த ஒரு ஆணையும் நடைமுறை படுத்தப்பட வேண்டும். அதற்கு உண்டான தயாரிப்புகளுக்கு பின்னரே ஆணை போட வேண்டும். இல்லையென்றால் இது போன்ற நல்லெண்ணங்கள் எள்ளி நகையாட வைக்கும், வெட்டிப் பேச்சுக்களாகவே முடியும்.

Saturday, November 22, 2008

அறிவுரை வேண்டாம்

சட்டக் கல்லூரி வாசலில் நடந்தது, இன்றைய சமுதாய வளர்ச்சி நோக்கில் பார்த்தால், காட்டு மிராண்டித் தனமானது, கண்டிக்கத் தக்கது, கண்டனம் செய்யப்பட வேண்டியது. ஆனால் தமிழ் நாட்டின் முதலமைச்சர் வருத்தப்படவில்லை, அநீதிகளை கண்டிக்கவில்லை, கொடுத்தது அறிவுரைகள் மட்டுமே. அறிவுரைகள் யாருக்குத் தேவை? தவறு செய்பவர்களுக்கு. அறியாமையின் காரணமாக, தவறாக சிந்தித்து, தன் செயல்களின் பின் விளைவுகளை உணராமல் தவறு செய்பவர்களுக்கு, வயதிலும், வாழ்க்கை நெறியிலும் வுயர்ந்தவர்கள், முதிர்ந்தவர்கள் கொடுக்க வேண்டியது அறிவுரை. ஆனால் சட்டக்கல்லூரி வாயிலில் நடந்தது, தவறு அல்ல. அநாகரீகம், அநீதி, அதிகாரத்தில் இருப்பவர்களால் முழுவதும் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியல் செயல். கைபொத்தி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்தபின், அறிவுரை வழங்குவது எந்த விதத்தில் நியாயம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டியது, ஆறுதல் மட்டுமன்றி, மருத்துவத்துறையில் முழு உதவி. அநியாயம் இழைத்தவர்கள் கண்டிக்கப் படுவது மட்டுமன்றி, சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத் தரப்பட வேண்டியவர்கள். இதற்கு உண்டான, நெஞ்சுக்கு நீதி யும், நீதியை நிலை நாட்ட வேண்டிய துணிவும், வேற்றுமை பாராத உயர்ந்த எண்ணமும் இருக்கிறதா தமிழக முதல்வரிடம் என்பதை காலம் நன்றாகக் காட்டிக் கொடுத்து விடும்.

Sunday, November 16, 2008

பார பட்சமான உணர்வுகள்

சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் கலைஞர் திரு.கருணாநிதி அவர்களின் மத, கடவுள் சம்பந்தப் பற்றிய உணர்வுகளின் வெளிப்பாடுகளைப் படித்தேன். நெற்றியில் நாம் விபூதி பூிக்கொள்வதைப் பற்றியும், பார்ப்பனர்கள் பூணூல் அணிவதைப் பற்றியும் கேள்விகள் எழுப்பினார்.


பகுத்தறிவு (அவர்கள் எண்ணப்படி) வாதங்களை முன் வைத்தார். சற்றே எள்ளி நகையாடினார். நன்று அய்யா! நன்று! இதே போன்ற முற்போக்கு எண்ணங்களை கிருத்துவர் முன்னமும், இஸ்லாமியர் முன்னமும் வைப்பீர்களா? சிலுவை எதற்கு என்றோ, தாடி மற்றும் குல்லா எதற்கு என்றோ உங்களால் கேட்டு விட முடியுமா? ஐந்து கால வழிபாடு எதற்கு என்றோ உங்களால் கேட்டு விட முடியாமா?


(இக்கேள்விகளை எழுப்புவதற்கு, கிருத்துவ அன்பர்களும், இஸ்லாமிய அன்பர்களும் என்னை மன்னிக்க வேண்டும். கடவுள் நம்பிக்கை உள்ள நான் இது போன்ற அர்த்தமற்ற கேள்விகளை, பகுத்தறிவு என்ற போர்வையில் கேட்கத் துணிய மாட்டேன்.)


முடியாது. எனென்றால், இது அவர்கள் மேல் உள்ள பாச உணர்வோ, அல்லது அவர் தம் மதங்களின் மேல் உள்ள அபிமானமோ அல்ல. அவர்களிடம் மற்றும் பார்ப்பன விரோத இந்து மக்களின் கைகளில் இருக்கும் ஒட்டு. இவர் இது போன்ற பேச்சுக்களால் பார்ப்பன விரோத ஓட்டுக்களை எண்ணும் போது, கலைஞரின், கலைஞர் தொலைக்காட்சி வல்லுனர்கள் பார்ப்பன ஆதரவு தொடர் நாடகங்களை மற்றவர் மூலம் அரங்கேற்றி பார்ப்பனர் ஓட்டுக்களையும், முக்கியமாக பெண்மக்களின் ஓட்டுக்களை, வலுப்படுத்திக் கொள்வார்கள்.


நெஞ்சுக்கு நீதி
பெட்டிக்குள் ஒட்டு
பிள்ளைக்குப் பதவி- நாம்
குனிபவர்களை மட்டுமே குட்டுவோம்

நெஞ்சிலடிக்கும் நீதி

நேற்று தமிழ்நாட்டுச் செய்திகளை கேட்டு, கண்டு, நெஞ்சு கொதித்தேன். என் தமிழ் மண்ணுக்காக விம்மி அழுதேன். தமிழன்னையின் மார்பு மீது தமிழ் இளைஞர்கள் சிலரை, வேறு சில தமிழ் இளைஞர்கள் தள்ளிவிட்டு அவர்தம் நெஞ்சு மீது மிதித்தனர். இவர்கள் அனைவரும் எதிர் வரும் காலங்களில் நீதி மன்றங்களில் நின்று நீதியைப் பாதுகாப்பதற்குத தேவையான் அறிவு தேடும் அன்பு மாணவச்செல்வங்கள். கேடு கெட்ட செயல்.



சில அடிகள் தொலைவில் நமது தமிழ் நாட்டு, நாட்டு மக்களின் பாதுகாவலர்கள், கேட்டும் கேட்காதது போல், கண்டும் காணாதது போல் உயிரற்ற , உணர்வுகளற்ற அசையாப்பொருள் போல் சவ அமைதி காத்தனர். மரங்கள் இருந்திருந்தால் இலைகளை அசைத்து தன் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கும். நாய் இருந்திருந்தால் பாய்ந்து சென்று சிலரை கடித்திருக்கும். ஆனால் ஒரு காலத்தில் உலகத்தின் தலை சிறந்த பாதுகாவலர்களுக்கு இணையாக கருதப்பட்ட நமது தமிழ் நாட்டுப் பாதுகாவலர்கள், அந்நியனாய், அநியாயமனவனாய், கொடூரமானவனாய், கோழை கோமாளியாகி, தமிழ் நாட்டுக்கும், தமிழனுக்கும் இழுக்கு வர வைத்தனர்.



இவர்கள் இடம் மாற்றம் செய்யப்படலாம். செய்யச்சொன்னதை சரியாக செய்ததற்காக, அந்த இட மாற்றம் சரியான பரிசாகவும் இருக்கலாம். உண்மையில் அபராதமாகவும் இருக்கலாம். ஆனால் இது போதாது. இந்த அநீதியை, காட்டுமிராண்டித்தனத்தை, கல்லூரி வாயிலில் அரங்கேற்றிய மாணவர்களும், மாணவர்களல்லாத கைகூலிகள் மட்டுமன்றி, அங்கு நின்ற பாதுகாவலர்களும் கடுமையாகத் தண்டிக்கப்ப் பட வேண்டும்.



இது மட்டுமல்ல. கல்லூரியின் முதல்வர், கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும். விசாரணைகள் முடிந்து நியாயமான தீர்ப்பு கிடைக்கும் வரை தமிழ் நாட்டு முதல்வர், கலைஞர், தன் 'நெஞ்சுக்கு நீதி' எழுதுவதையும், பிரசுரம் செய்வதையும், விற்பனை செய்வதையும் முழுமையாக நிறுத்த வேண்டும்.



ஏனென்றால், தமிழகம் ஒரு அமைதிப் பூங்கா என்று பாராட்டிப் பாராட்டிப் பின்னர், உண்மையில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை இன்று இது போன்ற நிலைக்குத் தள்ளியதில் பெரும் பங்கு இந்த திராவிடர்களின் பெயரில் ஆரம்பித்த இக்கழகங்களையே சாரும்.

Tuesday, November 11, 2008

ஆனந்த் மற்றும் பிந்த்ரா - தொடர்ச்சி

நான் தமிழ் நாட்டில் குக்கிராமத்தில் பள்ளிப் படிப்பு படிக்கும்போதே எனது ஆசிரியர்கள் எனக்கு, தாததாபாய் நவ்ரோஜியைப் பற்றியும் மற்றும் கோபால கிருஷ்ண கோகலே, சுபாஷ் சந்த்ர போஸ், இரும்பு மனிதர் வல்லப் பாய் படேல் போன்றவர்களைப் பற்றி விளக்கி இருக்கிறார்கள். நாங்களும் அவற்றை கவனமாகக் கேட்டு இன்று வரை நினைவில் நிறுத்தி இருக்கிறோம்.
நான் கேட்பதெல்லாம் ஒரு சிறிய கேள்வி மட்டுமே. விந்திய மலைக்கு மேற்புறம் இருப்பவர்கள் திருப்பூர் குமரனை அறிவார்களா? கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி யை அறிவார்களா? வாஞ்சிநாதனை அறிவார்களா? நாட்டுப்பற்று உள்ளவர்கள், நாட்டுக்காக உடமை மற்றும், உயிரைத துறந்தவர்கள் வடக்கில் மட்டுமே இருந்தது போல் ஓர் மாயை உருவாக்கப் பட்டு இருக்கிறது. வடக்கு - தெற்கு இடைவெளி இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே உருவாக்கப் பட்டு விட்டது. இந்த இடைவெளி இன்று மேல் மேலும் வளர்வதாகவே நான் உணர்கிறேன். ------------ தொடரும்

Wednesday, November 5, 2008

ஆனந்த் மற்றும் பிந்த்ரா

கேட்பதற்கு கடினமாக இருக்கும். ஜீரணிப்பது சுலபமான விஷயமல்ல. ஒப்புக்கொள்ள முடியாது என்று மறுப்பவர்களும் இருக்கலாம். ஆனால் நீண்ட நாள் யோசித்து நான் எழுத முடிவு எடுத்தேன். என்னைப் பொறுத்தவரை நான் எழுதுவதில் பெருமளவு உண்மை இருக்கிறது.
வடக்கு, மேற்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களிலிருந்து தமிழ் நாட்டுக்கு வருபவர்கள் சொல்லிகிறார்கள், "அங்கு மக்கள் இந்தி பேச மறுக்கிறார்கள். ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் மட்டுமே பதில் தருகிறார்கள். இந்தி பேசுபவர்களை விரோதியாகக் கருதுகிறார்கள்". இதில் பெருமளவு உண்மையும் இருக்கிறது. இது போன்ற நிலை உருவாக யார் காரணம், என்ன காரணம்..........தொடரும்

Sunday, November 2, 2008

BINDRA AND ANAND

IT WILL BE DIFFICULT TO TAKE. IT WILL BE DIFFICULT TO DIGEST. IT WILL BE IMPOSSIBLE TO ACCEPT. BUT THERE LIES SOME TRUTH. PEOPLE FROM NORTH WHEN THEY VISIT SOUTH, PARTICULARLY, TAMILNADU, THEY HAVE A COMPLIANT: PEOPLE THERE DO NOT SPEAK HINDI. THEY ANSWER ONLY IF WE TALK TO THEM IN ENGLISH. THIS IS TRUE. THERE IS A CLEAR NORTH/SOUTH DIVIDE.
THIS HAS BEEN SEEDED BY OUR POLITICIANS OF ALL PARTIES AND CULTIVATED OVER TIME. BUT TODAY I HAVE TO WRITE CERTAIN TRUTHS AS THEY ARE. YOU MAY BE FROM SOUTH OR NORTH, EAST OR WEST. ASK YOURSELF. TRY TO ANSWER MY QUESTIONS:
AS A STUDENT IN A VILLAGE IN TAMILNADU, I HAVE STUDIED ABOUT BHAGAT SINGH, GOPALKRISHNA GOKHALE, NETHAJI SUBHASH CHANDRA BOSE, SARDAR VALLABH BHAI PATEL AND SO ON.
PEOPLE IN WEST, NORTH AND EAST: HAVE YOU STUDIED ABOUT BHARATHIAR, SUBRAMINIA SIVA, TIRUPPUR KUMARAN, V.O.CHIDAMBARANAR - THE FIRST INDIAN TO BUILD A SHIP AND SAIL IN THE SEA AGAINST THE BRITISH ORDERS AND VANCHINATHAN. IN TAMILNADU WE HAVE STREETS IN THE NAMES OF ALL THOSE NAMES I MENTIONED IN THE PREVIOUS PARAGRAPH. SIMILAR SOUTH INDIAN NAMES WILL YOU FIND IN THE OTHER PARTS OF THE COUNTRY? DID THESE NAMES APPEAR IN LESSONS ON FREEDOM STRUGGLE IN YOUR SCHOOL EDUCATION?
I AM FAIR IN COMPLEXION. THEREFORE I AM NOT BELIEVED TO BE A SOUTH INDIAN. THE SKIN COLOR OF THE SOUTH INDIANS IS A MATTER OF HUMOUR ALWAYS. THERE ARE MANY JOKES ON THIS. SOMETIMES THE FANATICISM IS AS STRONG AS THE DIVIDE BETWEEN THE WHITES AND THE BLACKS IN THE WEST. ATLEAST IN THOUGHTS AND FEELINGS. INCIDENTALLY I HAVE COME ACROSS MANY DARK SKINNED NORTH INDIANS.
FROM VERY EARLY DAYS A MYTH HAS BEEN CREATED THAT THE ENTIRE FREEDOM STRUGGLE WAS FOUGHT BY PEOPLE IN NORTH. AND THE PEOPLE IN SOUTH HAD NO ROLE TO PLAY.
TODAY DOES VISHWANATHAN ANAND - A GREAT ACHIEVER AND AN INDIAN, GET AS MUCH MEDIA COVERAGE AND APPRECIATION FROM THE COUNTRY LEADERS, AS MUCH AS WAS SHOWERED ON ABHINAV BINDRA. AT THE END THE TRUTH FOR PEOPLE IN NORTH "HE IS A MADRASI". TODAY THE TRUTH IS 'A MADRASI' FOR PEOPLE ABOVE VINDHYAS, A MADRASI IS A DARK SKINNED LOW CASTE INDIVIDUAL. AS LONG AS THIS EXISTS, DO NOT EXPECT A MADRASI TO RESPOND TO YOU IN HINDI.