Tuesday, June 12, 2012

பராசக்தி படம் பார்த்தேன். ரசித்தேன். அதன் தாக்கம் இது.

டி வி சானல். விசித்திரம் நிறைந்த பல சீரியல்களை ஒளி பரப்பியிருக்கிறது. புதுமையான நடிகர்களைக் கண்டிருக்கிறது. ஆனால் சன் டி.வி. ஒரு விசித்திரமுமல்ல, நானும் புதுமையான மனிதனல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகத் தென்படக்கூடிய ஒரு ஜீவன் தான் நான். மெகா சீரியல் ஓடும்போது சத்தம் போட்டுப் பேசினேன். ரிமோட்டைக் கையிலெடுத்து தூரத்தில் வீசினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று. இல்லை. நிச்சயமாக இல்லை. சீரியல் சத்தத்தைத் தடுத்து நிறுத்தினேன். சீரியல் கூடாது என்பதற்காக அல்ல. சன் சீரியல்கள் மூட நம்பிக்கைகளைப் பரப்பக் கூடாது என்பதற்காக. ரிமோட்டை உடைத்தேன். அது சன் டி வி போட உதவுகிறது என்பதற்காக அல்ல. பகுத்தறிவு பேசியே வளர்ந்தவர்கள் மூட நம்பிக்கையாளர்களின் கூடாரம் கட்டி வளர்ந்துவிடக்கூடாதே என்பதற்காகத்தான். நீங்கள் கேட்கலாம், உனக்கென்ன அக்கறை. யாருக்குமில்லாத அக்கறை. என்னைக் குற்றவாளி என்கிறார்களே. இந்த குற்றவாளியின் வாழ்க்கைப்பாதையில் கொஞ்சம் பின்னோக்கிப்பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்பது உங்களுக்குத் தெரிந்து விடும். தமிழ் நாட்டின் தலையெழுத்துக்கு நான் விதி விலக்கா? பகுத்தறிவு என்றனர், பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு என்றனர். கூடவே ஹிந்தி ஒழிப்பு என்று கூறித் தமிழர்களையே தாக்கிப் படுபாதகம் பல செய்தனர். அவர்களே ஹிந்தி பேசுபவர்களின் கால்களில் விழுந்து தங்களுடைய ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொண்டனர். நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுய நலமென்பீர்கள். என் சுய நலத்தில் பொது நலமும் கலந்திருக்கிறது. ஸ்ரீரங்கம் கோவிலில் நுழையும்போது, கற்களால் தாக்கப்பட்டேன், பின்னால் திரும்பி பார்ப்பதற்குள் பூணூல் அறுக்கப்பட்டேன். பார்ப்பனன் என்று கேலியாகக் கூவப்பட்டேன்.

போதுமப்பா...............சாமி.........போதும்..............பல மதங்களிலும், இனங்களிலும், பிரிவுகளிலும் நண்பர்கள் பலர் எனக்கு உண்டு. நான் யாரின் மனமும் புண்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு, பார்ப்பன ஒழிப்பு என்று பேசியே, வசனங்கள் பல எழுதியே பல தலை முறைகளுக்கு பணம் கோடிகள் பலவில் சேர்த்திட்ட....................குடும்பத்தினரே - இவ்வீன வாழ்வு உங்களுக்கு எதற்கு?

Thursday, June 7, 2012

ஆணவம் அன்றொரு நாள் அடங்கும்

அறுவடை காலம்
ஊழலின் விளைவிடம்
ஆயிரத்து ஐம்பதுகளில் நிலங்களை உழுதனர். ஆழ உழுவதற்கு அவர்களுக்கு உதவியவை கடவுள் எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு. நன்கு உழுது முடிந்ததும், விதைகளை சுறு சுறுப்பாக விதைக்க ஆரம்பித்தனர். ஊழல் விதைகளை. ஆட்சியில் அமர்ந்தனர்.

ஆனால் அண்ணா என்று ஒரு தலைவர் இருந்தார். சில பல தவறுகள் இருந்தாலும், தனக்காகவும், தன குடும்பத்திற்காகவும் ஊழல் வழிகளில் சொத்து சேர்க்க விரும்பி இருக்கவில்லை, அதற்குண்டான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை.

அண்ணாதுரை அவர்களின் இறுதி காலத்திற்காகக் காத்திருந்தனர். ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஒன்பதில் அவர் இறந்ததும், கலைஞர் சோகக்கவிதை பாடினார். முன்னமே எதிர்பார்த்து தயாரித்து வைத்த கவிதைப் பேச்சு போல் ஒலித்தது. தமிழ்ப் புலமையாலும், பேச்சுத்திறனாலும் பதவியைப் பிடித்தார். முதலமைச்சர் ஆனார்.

தஞ்சை மண்ணின் மைந்தன். விவ்சாயக்கலை உள்ளுக்குள் வேரூன்றி இருக்க வேண்டும். அரசியல் என்னும் பொது நிலத்தில் வேளாண்மை துவங்கி விட்டது. தமிழ் மக்களின் மனமென்னும் நிலத்தில் விதைத்த ஹிந்தி எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவு வளர்ப்பு என்னும் பசப்புகள் பொருளீட்டத் துவங்கி இருந்தன. தன்மானத்தில் சிறந்தவன் தமிழன் என்று பேசிப் பேசி அவனது தன்மானத்தை ஒழிப்பதில் வெகுவாகச் செயல் பட்டனர். அமைதிப் பூங்கா தமிழகம் என்று பேசியே, தமிழ் நாட்டின் அமைதியை அழிப்பதில் சிறப்பாக செயல் பட்டனர். சட்டக்கல்லூரி அராஜகம் முதல், காவலர்கள் வழக்கறிஞர்கள் மோதல் தொடர்ந்து பற்பல செயல்கள். ஊழலுக்கும், அராஜகங்களுக்கும் பெயர் போன பல வட மாநில மக்களே வெட்கித் தலை குனிந்திருக்க வேண்டும்.

அறுவடை காலம் நீண்டு தொடர்ந்தது. தினமும் பொங்கல் தான். ஊழலை விதைத்தார்கள். அரசியல் செல்வாக்கையும், பதவிகளையும், மற்றும் பல செல்வங்களையும் அறுவடை செய்தார்கள். நெருங்கிய மற்றும் பறந்து விரிந்த குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், வோட்டுக்கு பணம் என்ற பாசன நீர் செலுத்தி ஊழலை தமிழ் நாடு முழுவதும் பரப்பி விட்டார்கள்.

வினைகளை அவர் அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது. இப்பொழுது மறுபடியும் ஹிந்தி எதிர்ப்பு,  பார்ப்பன எதிர்ப்பு, திராவிட நாடு திராவிடனுக்கே என்று துவங்கி விட்டார். மூப்படைந்து விட்டார் பாவம். இன்றைய நிஜங்கள் அவர் கண்களுக்குப்  புலப்படவில்லை.

சற்கர நாற்காலியில் அமர்ந்து நடை இயக்கம் நின்றிருந்த போதிலும், நெஞ்சுக்கு நீதி இன்னமும் தேடிக்கொண்டிருந்த போதிலும், ஆழ் மனதில் குடி கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சி, பொறாமை, பணிவின்மை அனைத்தும் ஒருங்கே எதிரொலித்தன சமீபத்திய பேச்சுக்களில். ஆணவம் ஒரு நாள் அடங்கும். அந்நாள் வெகு தூரத்திலில்லை.