Thursday, April 16, 2009

தேர்தல் திருவிழா

இதோ துவங்கிவிட்டது தேர்தல் திருவிழா. திருவிழா என்றாலே பொதுவானது கூட்டம், இரைச்சல், கோலாகலம். மற்றுமொன்று திருவிழா என்றாலே கொண்டாட்டம் பலவிதமான கள்வர்களுக்கும். பிக் பாக்கெட்டுகளுக்கு கொள்ளை லாபம். இரவு பகலாக வீடுகள் பூட்டி இருக்கும்பொழுது, வீடு புகுந்து திருடுபவர்களுக்கும் பலத்த வருமானம்.


தேர்தல் திருவிழா. மற்ற திருவிழாக்களில் இருந்து மாறுபட்டதல்ல. ஒன்றே ஒன்று. இத்திருவிழாவில் குழந்தைகளுக்கு பங்கேற்பு இல்லை. கூட்டம் கூடும். கூட்டம் கூட்டப்படும். இரைச்சலுக்குக் குறைவே இல்லை.

பணம் தண்ணியாக வோடும். பொது மக்களுக்கு பரிசுப்பொருள்கள் அள்ளி வீசப்படும். பதிலுக்கு அவர்கள் கேட்பதெல்லாம் ஒருவருக்கு ஒரு வோட்டு மட்டுமே. இந்திய குடிமகனும் முட்டாளல்ல. பல பேரிடம் பணம் பெற்று, பரிசு பெற்று, ஒருவனுக்கு வோட்டுப் போடுவான். தன் சாமர்த்தியத்தைத் தானே மெச்சுவான்.

பரிசு கொடுத்தவன், பதவிகள் பெற்று, நம் வீடுகளை அல்ல, நம் நாட்டையே சுரண்டி அன்னியனிடம் அடமானம் வைப்பான். கிடைத்த கமிஷனை சுவிஸ் வங்கிகளில் முடக்குவான்.

பிளாட்பாரத்தில் ஒண்டியவன், பெரும் முதளாளியாவான். பகட்டான வீடுகளில் வாழ்க்கை நடத்துவான். கப்பல் போன்ற கார்களில் பவனி வருவான். சில நூறு ரூபாய்க்களுக்காக நாட்டை இழந்தவன், தலைவர் வாழ்க என்று கோஷம் போட்டு, ஒரு குவளை கஞ்சிக்கு கை ஏந்துவான். இவன் பெயர் இந்தியன். நம் நாடு இந்தியா.

வாழ்க இந்திய! வளர்க இந்தியன்!

1 comment:

Anu said...

Living in Narendra Modi's Gujarat,are you still disheartened with our system? Good Govts. will happen here too. Only, it is a long process. May be Samhitha's grand children will see it happen.