Sunday, May 30, 2010

முதலில் ஒழிப்போம் ஊழல்வாதிகளை!

மாவோவி்ஸ்டுகள் மற்றும் வேறு பல அமைப்புகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அப்பாவி மக்களின் உயிர் அழிந்து கொண்டிருக்கிறது. உடல்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. உள்துறை அமைச்சர் அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கிறார். அரசும், அரசியல் தலைவர்களும் பசப்பித்திரிகிறார்கள். நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறனுமின்றி வெட்கம் கெட்டு வாய் கூசாமல் வசனம் பேசித் திரிகிறார்கள்.

இன்று கலைஞர் சொன்னார்: மனித நேயமற்ற செயல் என்று. ஹிந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் இவர் கட்சியினர் செய்த மனித நேயமற்ற செயல்களை அவர் மறந்திருக்கலாம். இத்தள்ளாத வயதில் இது இயற்கை தான். பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து சாதாரண மக்களை கொன்ற செயல் பெரும் மனித நேய செயலோ? இக்கொடிய கொலை வெறிச்செயலில் இவர் தம் அன்பு மகனின், மத்திய அமைச்சரின் பங்கு என்ன என்று சொல்வாரா?

மேலும் சொன்னார் பொதுவுடைமை கொள்கையில் கலைஞருக்கு முழு உடன்பாடாம். உண்மைதான். பொது என்பது இவர்தம் இரண்டு மனைவிகளையும், மூன்று மனைவிகளின் மக்களையும் சார்ந்ததாக இருந்தால் பொதுவுடைமை, முழுவுடைமை தான்.

இன்றைய கேள்வி: இவ்வியக்கங்களை அடக்குவதற்கு ராணுவத்தை அனுப்பலாமா வேண்டாமா என்பதுதான். என்னுடைய எண்ணம், நம் ஊழல் அரசியல் தலைவர்களும், ஊழல் அரசு அதிகாரிகளும், ஊழல் வர்த்தகர்களும் தான் இது போன்ற சமுதாய அமைப்புகள் உருவாகுவதற்கு முக்கிய காரணம். எனவே தீர்வு இதுதான்: இவ்வூழல் வாதிகள் தங்களுடைய அனைத்து மறைத்து வைக்கப்பட்ட சொத்துக்களுடன், ஜார்கண்ட், சத்திஸ்கத், மற்றும் ஒரிசா காடுகளில் இறக்கிவிடப்பட வேண்டும்.

1 comment:

NRV said...

காட்டயும் கூறு போட்டு விட்று விடுவார்கள் . ஜாக்கிறதை.