Sunday, April 18, 2010

நரேந்திர மோதி எங்கே, தமிழக முதல்வர் எங்கே?

உலகத்தமிழர்களை உசுப்பியுள்ளார் மோடி - மோதி என்று இருந்திருக்க வேண்டும். பரவாயில்லை. இது இன்றைய தினமலரில் ஒரு தலைப்புச் செய்தி. இச்செய்தியின் படி "வரும் மே மாதம் முதல் தேதி, குஜராத் மாநில பொன் விழா துவங்குகிறது. இவ்விழாவை வரும் இருபத்து ஒன்பதாம் தேதி முதல் மூன்று நாட்கள் அமர்க்களமாகக் கொண்டாட குஜராத் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. விழாவில் பங்கேற்க வருமாறு, நாடு முழுவதும் வாழும் குஜராத்திகளையும், வெளி நாடு வாழ் குஜராத்தியர்களையும் மோடி அழைப்பு விடுத்துள்ளார். .......................... சில நாட்களுக்கு முன், குஜராத் மாநில உள்ளாட்சி மற்றும் உணவுத் துறை அமைச்சர் நரோத்தம் படேல் தலைமியிலான குழுவினர் தமிழகம் வந்தனர். சென்னையில் வசிக்கும் குஜராத்தியர்களை சந்தித்து விழாவிற்கு அழைப்பு விடுத்துச் சென்றுள்ளனர். இக்குழுவில் குஜராத் கட்ச் மாவட்ட கலெக்டராக உள்ள தென்னரசன் இடம் பிடித்திருந்தார்".

இது தான் செய்தி. மேலும் தினமலர் நாளிதழ் இந்நடவடிக்கை உலகத்தமிழ் மக்களுக்கு தமிழ் நாடு முதல்வரிடமிருந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கிறது.

எதிர்பார்க்கலாம், தவறு ஒன்றும் இல்லை. யாரிடமிருந்து என்பதுதான் கேள்வி. எதிர்பார்ப்பவர்கள் யார் என்பது தான் கேள்வி. வோட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணம் எதிர்பார்க்கும் சமுதாயம் ஒன்று தமிழகத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல் கட்சிகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய ஒரு சூழ்நிலையில் அந்நிய மண்ணின் வாசனை பிடித்தும், தூய தமிழ் மண்ணுக்காக ஏங்கும் எந்த ஒரு தன்மானத் தமிழனும், இன்றைய தமிழ் நாட்டு அரசு சார்ந்த செயல் திட்டங்களில் இணைய விரும்ப மாட்டான். தமிழ் நாட்டின் முதல்வர் யார்? குஜராத் முதல்வர் மோதி யார்? வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

தமிழக முதல்வர் மு.கருணாநிதி மூன்று முறை மணம் முடித்தவர்
குஜராத் முதல்வர் நரேந்த்ர மோதி கட்டை பிரும்மச்சாரி

தமிழக முதல்வரின் நேர் உறவினர்களும், விரிந்த உறவினர்களும், பணமும் பெரும் பொருள் லாபங்களும், பற்பல பதவிகளும் ஈட்டியவர்கள், ஈட்டிக் கொண்டிருப்பவர்கள்.

நரேந்திர மோதி அவர்களின் தாயார் இன்னமும் ஒரு நடுத்தர சமூகத்தில் ஒரு சாதாரண உறுப்பினராக வாழ்ந்து வருபவர். அவரது சகோதரர் அரசு அலுவலில் இருந்து ஓய்வு பெற்று, இன்றைய தினமும் வெகு மக்கள் போக்குவரத்தில், அதாவது நகரப் பேருந்துகளில் பயணம் செய்பவர்.


தமிழக முதல்வருக்கு தமிழன் தமிழச்சி என்பதற்கு பொருள், மு.க.ஸ்டாலின், அழகிரி மற்றும் கனி மொழி.

குஜராத் முதல்வருக்கு குஜராத்தி என்றால், குஜராத் மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு இந்தியனும்.

தமிழக முதல்வருக்கு தன், தன் மக்களின் வளர்ச்சியே தமிழ் நாட்டின் வளர்ச்சி.

குஜராத் முதல்வருக்கு குஜராத்தின் வளர்ச்சியே தன் வளர்ச்சி.

தமிழக முதல்வர் ஒரு சாதாரண நிகழ் கால அரசியல்வாதி.

குஜராத் முதல்வர் ஒரு நாட்டுப்பற்று கொண்ட உயர் மனிதன்.

மக்களே, குஜராத் முதல்வர் செய்யும் செயல்களை, திராவிட இயக்கத் தலைவரகள், தலைவிகள் ஒரு போதும் செய்து விட முடியாது.

குஜராத் முதல்வர் ஒரு நாட்டுப்பற்று கொண்ட சமுதாயத்தை உருவாக்கி, தன் வழியில் திருப்பிக்கொண்டிருக்கிறார்.

தமிழக முதல்வர் ஒரு ஊழல் சமூகத்தை உருவாக்கி, தன் வழியில் திருப்பிக் கொண்டிருக்கிறார்.

வாழ்க குஜராத்! வளர்க மோதி அவர்கள் புகழ்!






1 comment:

Unknown said...

OUR FATE CANNOT BE CHANGED. ADHU TAMIL MANADU ILLAI..... DRAVIDA KATCHI MANADU.......... KATCHI KARANGA THAN IRUKKANGA........