Friday, January 8, 2010

விழித்தெழு, இந்தியா விழித்தெழு!

வெடிகுண்டு வீசி எஸ்.. படுகொலை, அமைச்சர்களுக்கு முன்பாக பயங்கரம். இது இன்றைய தமிழ் செய்தித்தாளில் தலைப்புச் செய்தி. திராவிடர் கழகங்களின் ஆட்சியில் தமிழ் மண் ரத்தம் சுவைத்துக் கொண்டிருக்கிறது. நடக்க வேண்டியதுதான் நடந்து கொண்டிருக்கிறது. நாற்பது வருடங்களுக்கு முன்னர், ஹிந்தி போராட்டம் என்ற பெயரில், பார்ப்பன எதிர்ப்பு என்ற பெயரில், கழகங்கள் கட்டவிழ்த்துவிட்ட, அராஜகங்கள் சுதந்திர இந்திய சரித்திரத்தில் ஒரு முன்னோடி. அன்று இவர்கள் சொன்னார்கள். தமிழ் நாடு அமைதிப் பூங்கா என்று. அன்றே ஒவ்வொரு தமிழனுக்கும் புரிந்திருக்க வேண்டும். இவ்வமைதியை அழிக்காமல் விட மாட்டார்கள் இவர்கள் என்று. உண்மையில் பார்த்தால் இன்று, ஊழலிலும், அராஜக நடவடிக்கைகளிலும், சமூகக் குற்றங்களிலும், வட இந்திய மாநிலங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் தமிழ் நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. கழகங்களின், தன மானத் தலைவர்களின் மிகப்பெரும் காணிக்கை இது.

தூங்கியது போதும் தமிழா, விழித்தெழு!


விழித்தெழு இந்தியா, விழித்தெழு!

No comments: