Tuesday, September 15, 2009

பெருக்கெடுத்து ஓடும் புரட்சி

உத்தரப் பிரதேசத்தில் நோய்டா என்று ஒரு நகரம். தில்லி மாநகரை தொட்டடுத்த ஊர். கடந்த இருபது வருடங்களில் பெரு வளர்ச்சி அடைந்த நகரம். இங்கு பல மாநிலங்களிலிருந்து வந்த பல வகுப்பு மக்கள் வாழும் ஒரு உயர் நகரம். மக்களின் உழைப்புக்கு உதாரணம் இந்நகரின் வளர்ச்சி.


அவங்க, லட்சக்கணக்கான மக்கள், உழைத்து சம்பாதித்து கட்டிய வரிப்பணத்தை நல்ல முறையில் செலவிடவேண்டாமா? அதுக்காகவே தன் வாழ்கையை அர்ப்பணித்த, அர்ப்பணிக்கும் அக்கா மாயாவதி, இரண்டாயிரத்து இருநூறு கோடி ரூபா செலவழிச்சு புரட்சி பண்ணப்போறாங்க.
இந்தப்புரட்சி ஒண்ணும், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் தெரியாத புரட்சியில்ல. தமிழ் நாடு இப்புரட்சில ஒரு முன்னோடி. வழிகாட்டி. சிலை புரட்சி. செத்தவங்க, இன்னும் சாகாம இருக்கறவங்க எல்லாருக்கும் சிலை வக்கிறதுக்காக இரண்டாயிரத்து இருநூறு கோடி ரூபா.
"இம்புட்டு ரூபா இருந்தா எவ்வளுவு லட்சம் பேரு எவ்வளுவு நாளைக்கு சாப்பிடலாம்". "பல ஆயிரம் பேருக்கு வேலை குடுக்கற மாதிரி தொழில் ஆரம்பிக்கலாமே" அது இதுன்னு புத்திசாலித்தனமா பேசறதா சில பேரு நெனைக்கிறாங்க. சாப்பாடு எப்பவும் இருக்குப்பா. சரித்திரம் தெரிய வேண்டாமா? வரும் சந்ததிகளுக்கு?
அப்படி என்னையா சரித்திரம்? அரசியல்வாதிகள்னு ஒரு சமூகம் இருந்தது. ஆங்கிலேயர்ட்ட இருந்து இந்தியா சுதந்திரம் வாங்கினதும், மழைக்காலத்துல கெளம்பற விட்டில் பூச்சி மாதிரி பொறந்த ஒரு சமூகம். விட்டில் பூச்சியாவது போகட்டும், ஒரு ரெண்டு மணி நேரம் பறந்துட்டு பொசுக்குனு போயிடும். இந்த பூச்சி சமூகம் இருக்கே, இது ஆட்டக்கடிச்சு, மாட்டக்கடிச்சு, கடசில மனுஷன கடிச்சு ரத்தம் பூரா உறிஞ்சிடும். மனுஷ உருவத்துல பொறந்தாலும், நரியாகி, ஓனாயாகி, நாட்டையே கொள்ளையடிச்சு, தனது விரிவான குடும்பங்களுக்கு சொத்து சேத்த, வெக்கம் கெட்ட சமூகம்னு தான் நம்ம சந்ததிகள் பேசும். இதுதான் வருங்கால உண்மை.

No comments: