Friday, September 18, 2009

வாயில வருது!

தரூர், தரூர் னு ஒரு அரசியல்வாதி. இவுரு ஒண்ணும் வயசான சக்கர நாற்காலி, அல்லது ஊன்றுகோல் அரசியல் வாதி இல்ல. தெருப்போறுக்கியா சுத்திக்கிட்டு இருந்து ரெண்டு மூணு கொலை கேசுல மாட்டி வெளில வந்த ரெகுலர் அரசியல்வாதி இல்ல.




ரொம்ப படிச்ச புத்திசாலி அரசியல்வாதி. இப்பத்தான், இப்பத்தான் வெளிநாடு உறவுகள் துறையில வேல பண்ணது போதும். நம்ம நாட்டு மக்களுக்காக இனிமே முழுசா பாடு படணும்னு முடிவு பண்ணி, காங்கிரசுல தன்னை இணைச்சுக்கிட்டாறு. சிங்கு அண்ணன், சரி போகட்டும், படிச்சவரா இருக்காரே உதவியா இருக்கும்னு, எலெக்சன்லையும் நிக்க வச்சாரு, மந்திரி பதவியும் போட்டு குடுத்தாரு.




தரூர் அண்ணாச்சியும், சரி! இந்தியாவுல ஏழை எளிய மக்களுக்கு பாடு படறத்துக்கு நல்ல வாய்ப்பு கிடச்சிடிச்சுன்னு அஞ்சு நட்ச்சத்திர ஓட்டல்ல உங்காந்துக்கிட்டு தேமேன்னு வேலைய பாத்துக்கிட்டிருந்தாரு. இந்த சோனியா அம்மா சும்மா இல்லாம 'எளிமை' அது அதுன்னு பேஜாரு பண்ணி, ஒட்டல காலி பண்ணும்படியா ஆயிடிச்சு. அது போதாதுன்னு இனிமே நம்ம எல்லாரும் பிளேன்ல சாதாரண வகுப்புல தான் போணும்னு சொல்லிட்டு அதே மாதிரி போகவும் ஆரம்பிச்சிட்டாங்க மிநிஸ்டருங்க.




தரூர் நாக்குல சனி. சாரி! தரூர் பேனால சனி. சரி, கால்நடைகள் போற வகுப்புல, பசுமாடு கூட்டத்தோட நானும் போறேன்னு, நக்கலா சொல்லிப்புட்டாரு - எழுதிப்புட்டாரு.




இதைக்கேட்டதும், எங்க பக்கத்து வீட்டு மாமா, சங்கர நாராயணன், பயங்கர கோபமாயிட்டாறு. ஏன்னா, அவுரும் அடிக்கடி, பய்யன பாக்கறேன், பொண்ண பாக்கறேன், பேத்திக்கு ஒடம்பு சரியில்லன்னு ஃபிளைட்ட புடிச்சுடுவாறு. இப்போதைக்கு தரூர புடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாரு.





"அகராதி! அகராதி! படிச்சு பெரிய பதவில இருந்தா மட்டும் போறாது. பணிவு வேணும். நாவடக்கம் வேணும். சொல்லுடா, தன் நாக்க கன்ட்ரோல் பண்ண முடியாதவன் என்ன பண்ணி கிழிச்சுடுவான். அவனோட ஃபோன் நம்பர் எங்கிட்ட இருந்தா காசு போனா போறதுன்னு, கால் போட்டு கிழிச்சுடுவேன்!"





அவர சமாதானம் பண்றதுக்குள்ள போதும்னு ஆயிடிச்சு. மெதுவா பையன்ட்ட கேட்டேன் "நீ என்னடா சொல்ற தரூர் கருத்தப்பத்தி?" அவன் சுருக்கமா சொன்னான்: "வாயில வந்துடப்போவுது உடுங்கப்பா!"

1 comment:

Anonymous said...

:)))


cheers,
ammu.