Wednesday, September 23, 2009

வேஷதாரிகளின் பேராசை அரசியல்

பிரமோத் மகாஜன் என்னும் அரசியல்வாதி. பாரதிய ஜனதா பார்ட்டியைச் சேர்ந்தவர். இளமை, உற்சாகம், வேலையில் தீவிரம், புத்திசாலித்தனம் என்று அசத்திக்கொண்டிருந்தார். அவரை பார்க்க, அவர் பேச்சை கேட்க, எனக்குள் ஒரு பேராசை. இந்தியாவுக்கு ஒரு சிறந்த தலைமை சீக்கிரம் கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு.
அன்று பிரமோத் மகாஜன் அவரது சகோதரனால் கொல்லப்பட்ட செய்தி கேட்டு பெரும் துயரம் கொண்டேன். என் நம்பிக்கை, எதிர்பார்ப்பு பொய்யானது கண்டு பதை பதைத்தேன். சில நாட்களுக்குப் பிறகு, அவர் தம் அருமை மகன் ராகுல் மகாஜனைப் பற்றிப் படித்தேன். இது போன்ற அப்பாவுக்கு இவ்வளவு கேவலமான மகனா என்று வியந்தேன்.
மேலும் மேலும் செய்திகள் திரட்டினேன். அவரைப்பற்றி எந்த ஒரு செய்தி வந்தாலும் கூர்ந்து கவனித்தேன். அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் அனைவரிடமும் உரையாடினேன்.
இன்று அமைதியாக அமர்ந்து யோசித்துப் பார்த்தால் புரிகிறது, மற்றும் ஒரு பசுத்தோல் போர்த்திய புலியை கண்டு ஏமாந்தது. என்று விடியும் இந்திய சுதந்திரம் இதுபோன்ற இன்னும் பற்பல வேஷதாரிகளின் பேராசையில் ஊன்றிய, பொறுக்கித்தன அரசியல் அடாவடிகளிலிருந்து.
வாழ்க இந்திய! வளர்க சுதந்திரம்!

No comments: