Wednesday, September 23, 2009

சாமானியர் வகுப்பு

அண்ணாச்சி! தரூர்னு ஒருத்தரப்பத்தி ரொம்ப பேச்சு அடிபடுதே, அவுரு யாரு அண்ணாச்சி?


ஒனக்கு என்ன தெரியும்? அதச்சொல்லு மொதல்ல!


எனக்கு தெரிஞ்சதெல்லாம் இதுதான் அண்ணாச்சி. அவுரு ஒரு சென்ட்ரல் மினிஸ்டரு. சோனியா அம்மா, எல்லாரும் சிக்கனமா செலவு பண்ணனும். சாமானிய வகுப்புலதான் போகணும்னு சொல்ல, இவுரு, சாமானிய வகுப்புன்னா கால்நடைகள் வகுப்புன்னு ஏதோ சொல்லுப்புட்டாறு. அம்புட்டுக்கிட்டாறு, தும்பிட்டிக்கா பட்டாரு. பெரிய பெரிய அரசியல் வாதிகள்லேருந்து, டீக்கடை பய்யன் வரைக்கும் எல்லாரும் பிடி பிடின்னு அது.
அது ஒண்ணுமில்ல தம்பி. ஏதோ தமாசா எழுதினாரு. சிரிச்சிட்டு போய்க்கிட்டே இருக்கணும். சும்மா ஊதி ஊதி பெருசா ஆக்கிட்டாங்க. ஏன்னா, எல்லா விஷயங்கள்ளையும், அவுனுக்கு என்ன லாபம்னு பாப்பான் அரசியல்வாதி. இதப்பாத்து சாமானிய மனுஷன் ஏமாறக்கூடாது.
நீங்க சொல்றத நூத்துக்கு நூறு ஒப்புக்கறேன் அண்ணாச்சி! ஆனா சாமானிய வகுப்பப்பத்தி சொன்ன தரூர் அண்ணன், தான் உங்காத்திருக்கற பார்லிமேன்டப்பத்தி ஏன் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறாரு. இவரோட அங்க உங்காத்திருக்கரவுங்கள்ள கிரிமினல் குற்றங்களுக்காக கைதாகி, தண்டனை பெற்று, பெயிலில் வெளியே வந்தவங்கன்னு கூட்டமே இருக்கே அண்ணே, அதப்பத்தி அவுரோட அபிப்பிராயம் என்னன்னு கேட்டு சொல்லுங்க அண்ணே!

No comments: