Friday, November 6, 2009

லட்சத்தில் ஒருவன்

அண்ணே! பாவம்ணே மது கோடா!


யாருடா, மது கோடா?? ஏன் அவனுக்காக பரிதாபப்படறே?


அதாண்ணே, முன்னால ஜார்கண்டுல மினிஸ்டராவும், அப்பால சீஃப் மினிஸ்டராவும் இருந்து இப்ப வயித்து வலி தாங்க முடியாம ஆஸ்பத்திரில இருக்காரே அண்ணே!


வயித்த்துவலின்னா ட்ரீட்மெண்டு குடுத்துடுவாங்க, அதுக்கு ஏன்டா பாவம், கீவம் னுகிட்டு.


அதுல்லண்ணே, ஹவாலா ஹிவாலான்னு இந்த சி.பி.ஐ. காரங்க உள்ள தள்ளிடுவாங்க போல இருக்குன்னே. அதனால காட்டியும், அவுருக்கு வயித்து வலி வந்திடிச்சு.



சரிடா, இந்த அளவுக்கு ஊழல் பண்ணியிருந்தா ஒரு நாள் இல்ல ஒரு நாள் மாட்டிக்க வேண்டியது தானே. இதுக்கென்னடா நீ பரிதாபப்படறே?


அதில்லண்ணே! இந்தியால எவ்ளோ பேரு இருக்காங்க. லட்சக்கணக்குல இருக்கும்ணே. ஒரு சின்ன பொட்டில ரெண்டு மாத்து டிரெஸ்ஸு கூட இல்லாம டவுன் பக்கம் வந்து, கூட்டத்தோட கல்லு உட்டு அடிச்சு, சாலை மறியல் பண்ணி, அரசியல்ல சேந்து, இப்ப மொத்த குடும்பமுமே, மாமா, மச்சான் சகல, கொளுந்தனாருன்னு எல்லாருமே கோடிகள்ள பொறண்டுகிட்டு இருக்காங்கன்னே. ஒவ்வொரு ஸ்டேட்டுலையும் கணக்கெடுத்த பல ஆயிரம் தேரும்ணே. அவுங்களையெல்லாம் தலைவர்கள்னு ஒத்துக்குட்டோம். அவுங்க மக்கள் வரிப்பணத்துல குடுக்கற அரிசிக்கும், கோதுமைக்கும், கலர் டி.வி.க்கும் கால்ல விழுந்து கும்பிடு போடறோம். இதெல்லாம் வாங்கிக்கிட்டு ஒட்டுகள விக்கிறோம். ஒரு கோடா ஏன்னா பொளச்சு போறாண்ணே. அவன் லட்சத்திலு ஒத்தண்ணே! பாக்கி தொண்ணூத்தி ஒம்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூத்து ஒம்பெது பேரையும் அவுங்க மாமா, மச்சான், சகலங்களோட, கோளிய அமுக்கற மாதிரி அமுக்கி உள்ள தள்ளுனா, ரொம்ப சந்தோசப்படுவேன். இல்லாட்டி ஒரு கோடா என்னாண்ணே, பெரிய பெரிய ஜுஜுபில்லாம் அசால்ட்ட சுத்திக் கிட்டு இருக்காங்கண்ணே. ஆனா ஒரு விஷயம், ஊழல் பண்ற அரசியல் வாதி எல்லாரையும் ஒண்ணா அடைக்கறதுக்கு ஒரு திஹார் ஜெயில் பத்தாது.


No comments: