Friday, November 6, 2009

தலை விதி - இறந்தார்

சுமித் பிரகாஷ் வர்மா, அவரோட தலை விதி, ஆஸ்பத்திரிக்குள்ள போறதுக்குள்ள செத்துட்டாரு. அதுக்கு மன்மோகன் அண்ணாச்சி என்ன பண்ணுவாரு பாவம்? எதுக்கு தான் தலைவருங்கள குத்தம் சொல்றதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு!


விஷயம் ஒரு உயிர் போனது மட்டுமில்ல தம்பி. இன்னிக்கு இந்த வி.வி.ஐ.பி ங்களுக்காக, ஊரு ஊரா எவ்வளவு தடபுடல் நடக்குது, சாதாரண மனுஷங்களுக்கு எம்புட்டு சிரமம் னு யாருமே கவலை படறதில்ல. ஒனக்கென்ன, மாசம் பொறந்தா சம்பளம். தினம் தினம், நடந்தும், சைக்கிள்ளையும் போயி, அன்னாடம் சம்பாதிக்கரவங்கள நெனச்சு பாரு. இந்தியாவுல அது மாதிரி கோடிக்கணக்குல மக்கள் இருக்காங்க. அவனவன் டயத்துக்கு போயி வேல பாக்குலென்ன அன்னிக்கு ராத்திரி அவுங்க வூட்டுல எல்லோரும், அந்த ஒரு ராத்திரி சாப்பாடு கூட இல்லாம வவுறு காய வேண்டியது தான். ஊர்ல ஒரு தலைவன் வர்ரான்னா மொதல்ல அடிபடறது அந்த சாமானியனோட குடும்பத்துல இருக்கர்வுங்களோட வவுருதான். இதில என்ன வேடிக்கைன்னா அந்த சாமானியனோட ஓட்ட வாங்கித்தான், வெங்கங்கெட்டவனுங்க பதவிக்கே வரானுங்க.



தெருவுல, போற வர அரசாங்க பஸ்சு மேல, போராட்டங்கிற பேருல கல்லு வுட்ட பேமானி, அரசியல்ல பூந்து, தலைவரானதும், மக்கள் வரிப்பணத்த வள்ளலு மாதிரி எடுத்து ஊதுவான். தம்மானத்த வுட்டு, வயசு வித்தியாசம் கூட பாக்காம பன்னாடைங்க அவன் கால்ல வுளுந்து மோச்சம் கேக்கும். அவுனும் எடுத்து வுடுவான், சரி புடி, இந்த பதவிய, அந்த பதவியன்னு. அதோட நிக்கிதா, நேத்துவர சும்மா சோடா பாட்டுலும், சைக்கிள் செயினும் சுத்திக்கிட்டிருந்த பொறம்போக்கு, வி.வி.ஐ.பி. ஆவுறான். அவுனுக்கு பின்னாடி ஒரு போலீசு கூட்டம். ஒரு காலத்துல பல குத்தங்கள்ள அவன கைது பண்ண தேடிக்கிட்டிருந்த போலீசு, அவுனுக்கு பின்னே போயி அவுனுக்கு பாதுகாப்பு குடுக்குது. செலவுக்கு மக்களோட வரிப்பணம்.




மக்களோட வரிப்பணம்னதும், வெறும் வருமான வரி, அது ரொம்ப சம்பாதிக்கறவங்க தானே கட்டுறாங்க, நமக்கு என்ன ஆச்சுன்னு நெனைக்காத. அரிசி, பருப்புன்னு ஒவ்வொரு சாமான் நாம வாங்கரபோதும், நேரிடையாவோ, மறைமுகமாவோ வரி கட்டிக்கினு தான் இருக்கோம். இந்த வரியெல்லாம், இவுனங்களுக்கு பாதுகாப்பு குடுக்கவும், வளவு கட்டி வரவேற்பு குடுக்கவும், செலவாகுது. இவுனங்களுக்கு ஆகர ஆடம்பர செலவுல நம்ம ஒவ்வோத்தரோட ஒளைப்புல சம்பாதிச்ச பணமும் இருக்கு.

No comments: