Monday, November 2, 2009

வன்முறை இயக்கங்களின் கை ஓங்கல்

சென்ற வாரத்தொடர்ச்சி...........
"Self Motivation" அல்லது வலுவான "Motives" இன் ஆதாரத்தைப் பார்ப்போம். இதில் இணைவர்களில் பெரும்பாலோர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கட்டுக்கோப்பான குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கையின் அன்றாடப் போராட்டங்களை நேரில் எதிர் நோக்கி வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள். படிப்பறிவையும், செயல் திறனையும் கொண்டு வாழ்க்கையில் பெரிய சாதனைகள் படைக்கத் துடிப்பவர்கள். இத்துடிப்புக்கு இடையே எது சரி, எது தவறு நியாயம், அநியாயம் என்ற விஷயங்கள், பெரும்பாலும் பெற்றோர்களால் பெருமளவு போதிக்கப்பட்டு, அவர்கள் கட்டுப் பாட்டில் வளர்பவர்கள். அவர்கள் சிந்தனைகளில் என்றும் ஆழ்ந்து வேரூன்றி இருப்பது, இது சரியா, தவறா, இது நியாயமா, அநியாயமா என்பதே. இந்த எண்ண அலைகளில் வேரூன்றி, அவர்கள் மனம் மிகவும் திடமாகவும், அதே சமயம் கடினமாகவும் ஆகிப் போகிறது.
தங்கள் கண்கள் முன்னே நடக்கும், அநியாயச்செயல்களைக் காணும்போது நெஞ்சம் பதைக்கிறது. பெரும்பான்மையான மக்கள் கண்டும் காணாதது போல் போகும்போது, அந்த பதைபதைப்பு வெறுப்பாகவும், மெல்ல மெல்ல வெறியாகவும் உருப்பெறுகிறது.
1960 களில் வந்த ஹிந்தி படம். மனோஜ் குமார் இயக்கி நடித்தது. அதில் அவர் பாடுவார்:
आदमी हूँ आदमी से प्यार करता हूँ! என்றும், அதாவது நான் மனிதன், மனித குலத்தை நேசிக்கிறேன் - மேலும் பாடுவார்: मै बसाना चाहता हूँ, स्वर्ग धरती पर, आदमी जिसमें रहे बस आदमी बनकर - அதாவது நான் இவ்வுலகத்தில் சொர்க்கத்தை படைக்க விரும்புகிறேன், அதில் மனிதன் மனிதனாக இருக்க விரும்பி.
இந்த எண்ணம் தான் ஆரம்பம். ஆனால் பெருவாரியான மக்கள், நெஞ்சில் உரமுமின்றி, சிந்தனைத்திறனுமின்றி, பம்மாத்து செய்து திரியும்போது வேதனை வெறியாகிறது. அப்பொழுது அவன் நினைப்பது:
"உன்னை வெறுக்கிறேன் நான்! ஏனென்று கேள் - நம் இனத்தை அளவுக்கு அதிகமாக காதலிப்பதால்"! இது ஒரு சிறிய ஆரம்பம்.

No comments: