Thursday, November 26, 2009

பாவம் கோடா! விழுந்தது கோடாலி!

இந்த மது கோடா ரொம்ப பாவம் அண்ணாச்சி! ஊரு உலகத்துல யாரு பண்ணாத தப்ப பண்ணிப்புட்டாறு? அவுரு மேல இம்புட்டு கேசு போட்டு அவுர இம்ச பண்றாங்க!


என்னடா இது? நீ எதுவும் அவுரு கிட்ட கமிஷன் கிமிஷன் வாங்கி போட்டுட்டயா?


மது கோடா எனக்கு எதுக்கு அண்ணாச்சி கமிஷன் குடுப்பான். குடுக்க வேண்டியவங்களுக்கு சரியா குடுக்கலயோன்னு தான் அண்ணாச்சி சந்தேகம் வருது.


என்னடா ஒளர்ற! அவன் கமிஷன் குடுக்காம தான் மாத்திக்கிட்டான்னு சொல்றியா!



நான் என்னண்ணே சொல்றது. பாத்தாலே புரியுதுண்ணே. ஒரு விஷயம் சொல்லுவாங்க அண்ணே. கைல கத்திய வச்சிக்கிட்டு பயமுறுத்தர வரைக்கும் தான், பவரு, வருமானம், தல மேல போட்டு வெட்டிட்டா அப்புறம் சிக்கல்தான்னு.


என்னடா சொல்ற புரியலையே.


ரொம்ப சுளுவுன்னே. மெட்ராஸ் பாஷையில சொல்லணும்னா, ஊடு கட்டிக்கிட்டே இருந்தா தான் நம்ம கையிலே கன்ட்ரோலு இருக்கும். பாருங்க, பேர சொல்ல வேண்டாம், ஒரு ஆளு கொஞ்சம் ராங்கா சைடு உதார மாதிரி தெரிஞ்சிச்சு. உடனே அங்க இங்கன்னு ரெய்டு உட்டு, சைடு கரெக்டு பண்ணிட்டாங்கல்ல.


நீ என்ன சொல்ல வர?


நான் என்ன சொல்றேன்னா, மது கோடா கணக்கா பேமானிங்க, இந்திய அரசியல்ல ஆயிரக்கணக்கா இருக்காங்க. நான் மொதல்ல சொன்ன மாறி, மாத்த ரெண்டு சட்ட இல்லாம ஊர வுட்டு பொழப்பு தேடி நகரத்துக்கு வந்தவங்க புள்ளைங்க இப்ப ஃபாரின்ல படிக்குதுங்க. சொத்து ரெண்டு கோடின்னு கணக்கு காட்டறான். என்னோட கேள்வி, அந்த ரெண்டு கோடி கூட எங்கேருந்து வந்திச்சுங்கரதுதான். பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சு, நேர்மையான, புத்திசாலியான மக்க, மாசத்துக்கு இருபது முப்பதாயரம் சம்பாதிக்கரதுக்குள்ள டங்குவாரு அறுந்து போவுது. இப்படி இருக்கயில எலிமெண்டரி ஸ்கூலு தாண்டாம, பத்து பைசா இல்லாமா, என்ன வேல பாத்து, என்ன தொழில் பண்ணி இவுனுங்க கோடில பொரளுறானுங்க. எனக்கு புரியலண்ணே, உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. அத நம்ம எலெக்ஷன் கமிஷன், இன்கம் டாக்சு, எல்லாம் எப்டி ஒத்துக்குது?


மது கோடா மட்டுமில்ல, இப்ப நம்ம நாட்டுல, பாதி அரசியல் வியாபாரிங்க, மது கோடாவுக்கு கொஞ்சமும் கொரஞ்சவுங்க இல்ல. ரூல சரியா போட்டு வலைய ஒழுங்கா விரிச்சா, மவனே ஒரு பய தப்ப மாட்டான். முடியாதா! மது கோடா ஒரு ஆளு என்ன பாவம் செஞ்சான். அவுனையும் மன்னிச்சு வுட்டுருங்கோ.








No comments: