Thursday, November 12, 2009

தகுதியான இடத்துக்குத் திரும்பினான் மனு ஷர்மா

கண்ணா! நேத்து ஜெயிலுக்கு திரும்பிப் போறதுக்கு முன்னாடி மனு அவன் அம்மாவுக்கு உருக்கமா கடிதம் எழுதியிருக்கான் பாத்தியா?


என்னம்மா எழுதியிருக்கான்?



நான் எந்த தப்பும் பண்ணல, நீங்க என்ன நம்புங்கம்மான்னு! படிக்கவே மனசுக்கு கஷ்டமா இருக்குடா.


நீங்க எதுக்கும்மா மனசு கஷ்டப்படறீங்க?


அப்பாவியா இருப்பானோன்னு மனசு சங்கடப்படுதுப்பா? காந்தி கூட சொல்லியிருக்காரு, நூறு குத்த்தவாளி தப்பிச்சாலும், குத்தம் செய்யாதவன் யாரும் தண்டிக்கப்படக்கூடாதுன்னு.


இந்தியாவுல ஒரு நிதர்சன உண்மைய புரிஞ்சுக்கோம்மா.
  • ஒரு ஏழைக்குத்தவாளி நிச்சயம் பிடிபடுவான் மற்றும் தண்டிக்கப்படுவான்
  • ஒரு ஏழை குத்தம் செய்யாமலும் சந்தர்ப்ப வசத்தால் பிடிபடலாம், தண்டிக்கப்படலாம்
  • ஒரு பணக்கார குத்தவாளி பெரும்பாலும் பிடிபடாமலே போகலாம்.
  • ஒரு பணக்கார குத்தவாளி பிடிபட்டாலும் பெரும்பாலும் தண்டிக்கப்படாமல் போகலாம்.
  • ஒரு பணக்காரன் குத்தம் செய்யாமலே பிடிபடவோ, தண்டிக்கப்படவோ வாய்ப்போ இல்லை.
  • அதுவும் அரசியல்வாதியின் பிள்ளை, இந்த குற்றத்தில் மாட்டி தவிர்க்க முடியாமல் உள்ளே போனான்னா, இதுக்கு முன்னே பற்பல குற்றங்கள் செய்து, கண்டுபிடிக்கப்படாமலே அல்லது, தண்டிக்கப்படாமலே போயிருப்பான். இது சத்தியம்.



No comments: