Wednesday, July 1, 2009

அப்பு - குப்பு உரையாடல் 1

அப்பு: சபாஷ், சபாஷ்!
குப்பு: யார இப்படி சபாஷ் சபாஷ்னு பாராட்டிக்கிட்டு இருக்க?
அப்பு: எம்புட்டு தெஹிரியமா பேசியிருக்காரு நம்ம ஊரு ஜட்ஜு ரெகுபதி!
குப்பு: ஆனா அவுரு மினிஷ்டரு பேரச் சொல்லலியே.
அப்பு: அதுதான் குப்பு நாகரீகம். ஓபன் கோர்ட்டுல, ஒரு உண்மையச் சொல்லும்போது, அதையும் ரொம்ப நாகரீகமாச் சொல்லி இருக்காரு. அதுக்குத்தான் டபுள் சபாஷ்.
குப்பு: இப்ப என்ன நடக்கும்! மினிஷ்டரு யாருன்னு தெரியுமா? அவுர மந்திரி சபையிலேருந்து நீக்குவாங்களா?
அப்பு: இது ஒரு சிக்கலான கேள்வி.
குப்பு: இதில என்ன இருக்கு சிக்கல்.
அப்பு: விவரம் புரியாம இருக்கியே அப்பு. மொய்லி சொன்னத கவனமா படிச்சுப்பாரு. எல்லாம் புரியும். சுருக்கமா சொல்லணும்னா, இதுவும் இன்னொரு ஜகத்ரக்ஷகன் கேசுதான். கமிட்டி, கமிட்டிக்கும் கமிட்டி, இதெல்லாம் முடியறதுக்குள்ள ரெகுபதி சாரும் ரிடயறு ஆயிடுவாரு, மந்திரி சபையும் காலாவதி ஆயிடும்.
குப்பு: குடியரசு நாடு, குடியரசு நாடுன்னா என்னன்னு புரிய வைக்க இது போல எவ்வளோ உதாரணம் இருக்கு அப்பு.

No comments: