Monday, July 6, 2009

அப்பு குப்பு உரையாடல் 6

அப்பு: குஜராத்தில பாத்தியா என்னாச்சுன்னு?

குப்பு: கள்ளச்சாராயம் குடிச்சாங்க, செத்தாங்க! நாலு பேரு செத்தாதாண்ணே மத்தவங்களுக்கு புத்தி வரும்.
அப்பு: நீ சொல்றது ரொம்ப குரூரமா இருக்கு. நான் ஒப்புக்க மாட்டேன். முதல்ல கேளு. விஷயம் என்னான்னா, செவ்வாக்கிழம சாராயம் குடிச்சு, புதன்கிழம பலபேரு செத்த பிறகும், புதன் மேலும் வியாழக்கிழம, சாராயம் சுளுவா சகஜமா வித்திருக்கு. அந்த தினங்கள்ல குடிச்சவங்க வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் செத்துப்போனாங்க.
குப்பு: ஆச்சரியமா இருக்கே!
அப்பு: இதிலென்ன ஆச்சரியம். புதன் கிழம நிகழ்ச்சிக்குப் பிறகு, வியாழன் வெள்ளில போலீசு ரொம்ப பிசியா இருந்தாங்க.
குப்பு: இருக்க மாட்டாங்களா பின்ன. ரெய்டு நடத்துறதுல, மேலும் அசம்பாவிதம் நடக்காம தடுக்கரதுல.
சத்தமாக சிரித்தார் அப்பு.
குப்பு: ஏங்க அண்ணே சிரிக்கறீங்க?
அப்பு: சுறு சுறுப்பா இருந்தது உண்மை. ஆனா எதிலன்னு கேளு. தனக்கு தன்னோட வேலைக்கு என்ன பாதிப்பு வரும்னு கண்டுபிடிக்கரதுல. யாருக்கு என்ன குடுத்து தன்னயும், தன் வேலையும் பாதுகாத்துக்கணும்கரதுல. இதெல்லாம் இந்திய ஜன நாயகத்துல ரொம்ப ஆழமான விஷயம் குப்பு. உன்ன மாதிரி சாதாரணமான நேர்மையான இந்தியனுக்கு இதெல்லாம் விளங்கறது ரொம்ப கஷ்டம்.

No comments: