Monday, July 6, 2009

அப்பு குப்பு உரையாடல் 5

அப்பு: நேத்து ராத்திரி ஒன்பது மணி சுமாருக்கு உன்கிட்ட என்ன சொன்னேன்?
குப்பு: நேத்து நைட்டு நீ சொன்னது, இன்னிக்கு காலம்பர எப்படி ஞாபகம் இருக்கும்? என்னைப்பொருத்த வரைக்கும், உண்மை இந்திய குடி மகன்னா, இப்ப கேட்டத அடுத்த நிமிஷம் மறந்துடணும். அப்ப தான் நிம்மதியா இருக்க முடியும். இல்லேன்னா உன்ன மாதிரி, எப்பவோ யாரோ சொன்னதல்ல ஞாபகம் வச்சிக்கிட்டு குழப்பம் தான் மிஞ்சும். உதாரணத்துக்கு கேளு. அரசியல்வாதிங்க அவுங்க சொல்றத, சில நாட்கள்ல அவுங்களே மறந்துடறாங்க. அவுங்க சொல்றதெல்லாம் நாம ஞாபகம் வச்சுக்கிட்டா நம்ம கதி என்ன ஆகும்.
அப்பு: விளையாட்டு போதும் குப்பு. நேத்து ராத்திரி நான் உன்கிட்ட சொன்னேன். இன்னிக்கு நியூஸ் பேப்பர்ல படிச்சு நானே ஷாக் ஆயிட்டேன். நான் ரொம்ப மதிப்பு வச்சிருக்கிற தலைமை நீதிபதியே சொல்லிட்டார். அமைச்சர் அய்யா டிறேக்டா நீதிபதி அய்யா ரெகுபதி கிட்ட பேசலையாம். எதிர்கட்சி வக்கீல் சொன்னாராம் அமைச்சர் பேசுறாருன்னு. எப்படி கேசு பிசு பிசுத்துப் போச்சு பாத்தியா.

No comments: