Thursday, July 16, 2009

தலை சிறந்த இந்தியர்

இ.ஸ்ரீதரன் என்பவர் ஒரு தலை சிறந்த இந்தியர். குறிப்பாக இநதிய நாட்டின் தலைநகரில் வாழும் ஒரு தலை சிறந்த ஒரு தென்னிந்தியர். அவரது திறமை மற்றும் முயற்சிகள் இன்று இந்திய நாட்டின் தலை நகரில் வாழும், செல்லும் பல லட்சம் மக்களுக்கு ஒரு தலை சிறந்த, மிக்க முன்னேறிய நாடுகளுக்கு இணையான, போக்குவரத்தாக ஒளிர்கிறது. மெட்ரோ ரெயில் என்பது அதன் பெயர். மெட்ரோ ரெயில் அமைப்பதில், எந்த விதமான இடையூறும் வராமல், எந்த ஒரு அதிகார வர்க்கத்தின் மற்றும் அரசியல்வாதிகளின் குறுக்கீடையும் அனுமதிக்காமல் சாதனை படைத்தவர்.
மூன்று நாட்களுக்கு முன்னர், ஒரு கட்டுமானத்தில் இருந்த தூண் ஒன்று இடிந்து விழுந்து ஆறு பேர் மரணம் அடைந்தனர். நிமிடம் கூட யோசிக்காமல் உடனே தன் பதவியை விட்டு விலகத்துணிந்தார். அவரல்லவோ தன்மானத்திற்கு உதாரணம். தன்மானம் தான் தனக்கு எல்லாம். தன்மானம் என்பது உயிரை விட மேலானது என்று பசப்பித் திரிந்து கொண்டு, குற்றங்கள் தெளிவாக அவர்களது என்று வெளிப்பட்டாலும், பொய்கள் பல பேசி, சிறிதும் அவமானமின்றி பதவியை விடாமல் பற்றித் திரியும் அரசியல்வாதிகள் வாழும் இந்திய நாட்டில், ஸ்ரீதரன் ஓர் உன்னத மனிதர். நாட்டுப்பற்றை நாடியாக மதிக்கும் தமிழன்பனின் பணிவான வாழ்த்துக்கள் அய்யா, மனித குல மாணிக்கம் ஸ்ரீதரன் அவர்களுக்கு.

No comments: