Thursday, July 16, 2009

தமிழனுக்குத் தலை குனிவு

கடந்த பத்து வருடங்களில் தமிழ் நாடு விட்டு வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் வாழும் தமிழருக்கு இரண்டு முறை மிகப்பெரும் தலை குனிவு ஏற்பட்டது. இரண்டு முறையுமே இதற்கு காரணமானவர், தமிழன் தன்மானத்தை உலகெங்கும் நிலை நாட்டுவதற்காகவே தன் வாழ் நாளை முழுவதுமாக அர்ப்பணித்த தமிழ்ப் பெரும் தலைவர், எப்பொழுதுமே நெஞ்சுக்கு நீதி தேடும் கலைஞர் கருணாநிதி தான்.


எப்படி என்று கேட்கிறீ்ர்களா. முதல் முறை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடு இரவில் அவர் கைதான போது. நடு இரவில் கைது செய்தது, ஒரு பழி வாங்கும் செயல்தான். ஆனால் தன்மானத் தலைவர், அஞ்சா நெஞ்சம் கொண்டவர், கதறிய கதறல் - இவை அனைத்தும் நள்ளிரவில், பளபளக்கும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில். பற்பல இந்திய டீவீக்களில் இக்காட்சி மாறி மாறி ஒளிபரப்பப்பட, மற்ற மாநில மக்களிடையே மற்றும் வெளி நாட்டு மக்களிடையே உட்கார்ந்து பார்க்கும்பொழுது, மாற்று மக்கள் காமெடி ஷோ பார்த்ததுபோல் விழுந்து விழுந்து சிரிக்க, தமிழன் வெட்கித்தலை குனிய வேண்டி வந்தது.


இரண்டாவது தலை குனிவு, கடந்த தேர்தல் முடிந்த பிறகு. தலைவர், தன் இரு மனைவிகளையும் திருப்திப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் மைத்துனர் மகனுக்கும், சொந்த மகனுக்கும் பதவி வேண்டி நடத்திய கெடுபிடி பேரம். நண்பர்கள் சொன்னார்கள் "உங்க ஆளு, லல்லு, முலாயம், மாயாவதி எல்லாரையும் மி்ஞ்ஜிட்டாருய்யா. எப்படி விடாப்பிடி பிடிச்சு வாங்கிட்டாரு பதவி." பதில் சொல்லத்தெரியாமல் தலை குனிந்தான் தமிழன். நிலைமையை மேலும் சீர் செய்ய மற்றொரு மகனை தமிழ் நாட்டின் இணை முதல் அமைச்சர் ஆக்கியது அவர்களுக்கு தெரியாது.

No comments: