Tuesday, July 28, 2009

மைதானத்துல படுக்க வைத்து

தப்பான பக்கம் நம்ம வண்டிய முந்தி போயி, கொஞ்சம் கூட எதிர் பார்க்காம, வலது பக்கம் வண்டிய ஓடிச்சு நிறுத்தினான். வண்டிக்கு போட்டேன் பிரேக். இதயத்துடிப்புக்கு பிரேக் போட முடியல. நாக்கு நுனி வரைக்கும் வந்திடுச்சு ரொம்ப ரொம்ப கெட்ட வார்த்த. அம்மாவும், பொண்டாட்டியும் கூட இருந்ததனால சைலென்ட் ஆயிட்ட்டேன்.
மேல இன்னும் அஞ்சு கிலோ மீட்டர் போயிருப்போம். இடது பக்கம் ரோடு ஓரத்துல சின்ன கூட்டம். அதைத்தாண்டி போயி வண்டிய பார்கிங்க்ல நிறுத்திட்டு அம்மா, பொண்டாட்டி இறங்க கதவ திறந்து விட்டேன். அவங்க நடந்து கடைக்குள்ள போனதும் நான் வண்டிய விட்டு இறங்கி, கூட்டத்தை நோக்கி நடந்தேன்.
அந்த இடத்தை அடைந்ததும், கூட்டத்திற்கு இடையே தலையை நுழைத்து உள்ளே பார்த்தேன். வயதான மனிதர், தலையிலிருந்து ரத்தம் வழிய இறந்து கிடந்தார். விசாரித்ததில் தெரிந்தது, வீதி ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவரை, தவறான் பக்கம், அதாவது சாலையின் வலது புறம் வண்டியை ஓட்டி வந்து, பெரியவர் மீது மோதி, கொன்று, வேகமாக வண்டி ஓட்டி மறைந்து விட்டான்.
பெரியவர் மரணத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம். எனக்குத் தெரிந்த காரணம் ஒன்றே ஒன்று தான். நம் நாட்டில் ஊறிப்போன ஊழல் தான் இதற்கெல்லாம் காரணம். குறிப்பாக வண்டி ஓட்டுவதற்கான லைசென்ஸ் வழங்கும் துறை. ஊழலில் அளவே இல்லாமல் ஆழமாக வேருன்றி, அதில் ஈடுபட்டவர்களுக்கு சிறிதும் வெக்கமில்லாத அளவுக்கு, வெகுவாக பரவி நிற்கிறது.
நான் பார்த்த அநியாயத்தை நான் பார்த்ததும் எனக்குத் தோன்றியது ஒன்றே ஒன்று தான். ஓட்டுனர் லைசென்ஸ் ஊழல்வாதிகள் எல்லோரையும் ஒரு பெரிய மைதானத்தில் படுக்க வைத்து, லைசென்சு இல்லா ரோடு ரோல்லர...........................

No comments: