Showing posts with label தேவை பல மாற்றங்கள். Show all posts
Showing posts with label தேவை பல மாற்றங்கள். Show all posts

Monday, November 2, 2009

வன்முறை இயக்கங்களின் கை ஓங்கல்

சென்ற வாரத்தொடர்ச்சி...........
"Self Motivation" அல்லது வலுவான "Motives" இன் ஆதாரத்தைப் பார்ப்போம். இதில் இணைவர்களில் பெரும்பாலோர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கட்டுக்கோப்பான குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கையின் அன்றாடப் போராட்டங்களை நேரில் எதிர் நோக்கி வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள். படிப்பறிவையும், செயல் திறனையும் கொண்டு வாழ்க்கையில் பெரிய சாதனைகள் படைக்கத் துடிப்பவர்கள். இத்துடிப்புக்கு இடையே எது சரி, எது தவறு நியாயம், அநியாயம் என்ற விஷயங்கள், பெரும்பாலும் பெற்றோர்களால் பெருமளவு போதிக்கப்பட்டு, அவர்கள் கட்டுப் பாட்டில் வளர்பவர்கள். அவர்கள் சிந்தனைகளில் என்றும் ஆழ்ந்து வேரூன்றி இருப்பது, இது சரியா, தவறா, இது நியாயமா, அநியாயமா என்பதே. இந்த எண்ண அலைகளில் வேரூன்றி, அவர்கள் மனம் மிகவும் திடமாகவும், அதே சமயம் கடினமாகவும் ஆகிப் போகிறது.
தங்கள் கண்கள் முன்னே நடக்கும், அநியாயச்செயல்களைக் காணும்போது நெஞ்சம் பதைக்கிறது. பெரும்பான்மையான மக்கள் கண்டும் காணாதது போல் போகும்போது, அந்த பதைபதைப்பு வெறுப்பாகவும், மெல்ல மெல்ல வெறியாகவும் உருப்பெறுகிறது.
1960 களில் வந்த ஹிந்தி படம். மனோஜ் குமார் இயக்கி நடித்தது. அதில் அவர் பாடுவார்:
आदमी हूँ आदमी से प्यार करता हूँ! என்றும், அதாவது நான் மனிதன், மனித குலத்தை நேசிக்கிறேன் - மேலும் பாடுவார்: मै बसाना चाहता हूँ, स्वर्ग धरती पर, आदमी जिसमें रहे बस आदमी बनकर - அதாவது நான் இவ்வுலகத்தில் சொர்க்கத்தை படைக்க விரும்புகிறேன், அதில் மனிதன் மனிதனாக இருக்க விரும்பி.
இந்த எண்ணம் தான் ஆரம்பம். ஆனால் பெருவாரியான மக்கள், நெஞ்சில் உரமுமின்றி, சிந்தனைத்திறனுமின்றி, பம்மாத்து செய்து திரியும்போது வேதனை வெறியாகிறது. அப்பொழுது அவன் நினைப்பது:
"உன்னை வெறுக்கிறேன் நான்! ஏனென்று கேள் - நம் இனத்தை அளவுக்கு அதிகமாக காதலிப்பதால்"! இது ஒரு சிறிய ஆரம்பம்.

Wednesday, October 28, 2009

வன்முறை இயக்கங்களின் கை ஓங்கல்

கடந்த இரண்டு வருடங்களில், இந்தியாவில் பற்பல வன்முறை இயக்கங்களின் கைகள் ஓங்கி வளர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் பிறப்பு, பரிணாம வளர்ச்சி, எதிர்கால நிலை, இவற்றை உற்று நோக்கினோமானால், மிஞ்சுவது, இயலாமையும் அச்சமுமாகவே இருக்கும்.


ப.சிதம்பரம் சொன்னார், ஒரு கூட்டத்தில், மேற்படிப்பு படிக்க வழி இல்லாதவர்கள் நாக்சல் இயக்கத்தில் இணைந்து கொள்கிறார்கள் என்று. இது ஒரு கலப்பட மில்லாத பிதற்றல். விட்டுத்தள்ளுங்கள். உள்துறை அமைச்சர் பொறுப்பில் அவர் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், நாக்சளைட்டுகள், மாவோவிச்டுகள் மற்றும் இது போன்ற அமைப்புகளின், வேரமைப்பு, (வேரமைப்பு என்றால், எங்கு, ஏன், எப்படி ஆரம்பமாகிறது) ஊட்டச்சத்து, (ஊட்டச்சத்து என்பதில் இரு வகை - உள்ளூருவது - அதாவது ஆங்கிலத்தில் 'SELF MOTIVATION' என்றோ, அல்லது சுருக்கமாக 'BASIC MOTIVES' என்றோ சொல்லலாம், அது அளிக்கும் ஊக்கம், வெளியிலிருந்து கொணர்வது, அதாவது 'OUTSIDE INSPIRATION'. 'OUTSIDE INSPIRATION' இரண்டு வகை. 'ACTIVE' - அவர்கள் வெகுவாக மதிக்கும் மனிதர்களிடமிருந்து வரும் ஊக்கமான பேச்சுகள் , மற்றும் செயல்கள், 'PASSIVE' - நாட்டில் தொடர்ந்து ஏற்படும் சமூக மீறல்கள், அநீதிகள் மற்றும், அத்து மீறல்கள், இவற்றையெல்லாம் பற்றி, வெகு ஆழமாக, விவரமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.



இந்த 'PASSIV INSPIRATION' தருபவர்கள் சமூகக் குற்றங்களைத் தொழிலாகக்கொண்டவர்கள், அரசு அலுவல்களில் வேலை செய்து கொண்டே அராஜகம் செய்பவர்கள், மற்றும் அரசியலைத் தொழிலாகக் கொண்ட அநீதியாளர்கள். இந்த மூன்று குழுக்களில், கடைசியாகச் சொல்வது, அதாவது அரசியலைத் தொழிலாகக் கொண்ட அநீதியாளர்கள், இவர்களின் கை மிகவும் மேலோங்கியது. ஏனென்றால் அவர்களுக்கு, நேரிடையாகவும், மற்ற இரண்டு குழுக்களின் அநீதிகளிலும், ஊழல் செயல்பாடுகளிலும் சம உரிமை, பெரும்பாலும் அதிக உரிமை பெற்றவர்கள்.


'MOTIVES' மற்றும் 'INSPIRATION FROM THEIR LEADERS' படித்த, அறிவு சார்ந்த, ஊக்கமும், உற்சாகமும் நிரம்பப் பெற்ற இளைஞர் சமுதாயத்தை இக்கழகங்களின் திசையில் இழுக்கின்றன. ஆனால், கேடு கெட்ட ஊழல் அரசு அதிகாரிகள், குறிப்பாக காவல் துறையின் அத்து மீறல்கள், உரிமை மீறல்கள், அரசியல்வாதிகளின் ஊழல் நடவடிக்கைகள், பதவிகளுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம், பதவிகள் கிடைத்தபிறகு குற்றச்சுவர்களை இடித்து சாய்க்கலாம் என்ற இறுமாப்பு, நடவடிக்கைகள், இவ்வியக்கங்களைச் சார்ந்தவர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது. இவற்றை வெறும் பேச்சு வார்த்தைகளாலோ, ஆயுத பலத்தாலோ முறியடிக்க முடியாது. மாற்றத்திற்கு வேண்டியவை:

௧. சமுதாய மாற்றங்கள்
௨. சமுதாயத்தின் நிதி நிலை மாற்றங்கள்
௩. அரசியலமைப்பில் மாற்றங்கள்
௪. நீதித்துறையில் மாற்றங்கள்

என்று பல விதமான மாற்றங்கள் தேவை. இந்த மாற்றங்களை எப்படி, யார் கொண்டு வர வேண்டும்? இல்லாவிடில் எதிர்காலம் எப்படி தோற்றமளிக்கும் , மேலும் சிந்திப்போம் ...................... சந்திப்போம்.