Wednesday, August 20, 2008

தமிழன்பன்

இளவயதில் என் இனிய பள்ளியில்
தள்ளி வைக்கப் பட்டேன் தனிமைப் படுத்தப்பட்டேன்
குற்றம் என்ன நான் செய்தேன் என்று
கேட்டால் பதில் என்ன கூறுவேன்
தமிழைத் 'தமில்' என்று சொல்லாமல் தமிழ்
என்று தவறாமல் சொன்னேன்
'தமில் வாள்க' என்று சொல்லாமல், தமிழ் வாழ்க
என்று தெளிவாகச் சொன்னேன்
பாப்பான் என்று பழிக்கப் பட்டேன்,
பூணூல் அறுபட்டேன் - இருந்தும்
சொல்கிறேன் - தமிழ் வாழ்க, தமிழன் வளர்க.

No comments: