Thursday, August 21, 2008

பட்டங்கள் பல - கூடவே வரும் பண அறுவடை

கம்பன் எழுத்துக்களைக் கரைத்துக் குடித்தோம்
குறள்களை வரிக்கு வரி விரிவாக விவாதித்தோம்
கவிதைக் கடை பரப்பிவிட்டோம் இப்பொழுது நாம்
எழுதுவதெல்லாம் விரசமும், ஆபாசமும் தான் - கிடைக்கிறதல்லவா
பணம் கட்டுக் கட்டாக - கூடவே வரும் பல பட்டங்களும்
தன் மானத்தைத் தள்ளி வைத்து தலைவர்கள் காலில் விழுந்து எழுந்தால்
பட்டங்களுடன், பதவியும் கிட்டும். வாழ்க தமிழ்! வளர்க தமிழன்!

No comments: