Thursday, June 4, 2009

முகத்தில் கரி!

யார் முகத்திலையா கரி? எங்க டாக்டரையா முகத்திலையா? அவரு எப்படி டபாய்ச்சாரு பாத்தியா! முட்டி மோதி பேப்பர் காரங்க நேர்ல வந்தவுடனே டாக்டரு அய்யா எவ்வளுவு தெளிவா பதில் சொன்ன்னாரு படிச்சியா? அந்த காலேஜுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைன்னு. எப்பவோ பாவம் எல்லாரும் கேட்டாங்களேன்னு டிரச்டியா இருந்தார். அதுவும் ஒரு பொது நலப் பணியாகத்தான். நெட்டுல பாத்தாங்கலாமான்! அவுரு தான் சேர்மனாம். நெட்டுல எவன் வேணா எது வேணா போடுவான் எல்லாம் உண்மையாயிடுமா?
போகப்போக பாரு. அவரு விசாரணை, வழக்கு எது வந்தாலும் எப்படி சந்திப்பாருன்னு. மக்கள் வரிப்பணம் வீணா தண்ணியா செலவாகும். நாட்கள் ஓடும், மாதங்கள் ஓடும், வருடங்கள் ஓடும். அய்யா, நமது உடன்பிறப்பு, கரை படியாம, சின்ன நெஞ்சுக்கு ஒரு சின்ன நீதியோட பளபளப்பாரு. வரிப்பணத்தை வீணா வெட்டி வேலையா விசாரணைக்கும், வழக்குக்கும் குடுத்த மக்களின் முகத்தில் கரி.
என்ன, ஒரே ஒரு சிக்கல். அடுத்த வருஷம் இந்த டொனேஷன் பணத்தை இருபதிலேருந்து, முப்பது லட்சமாக்க வேண்டி வரும். பின்ன, விசாரணைக்கும், வழக்குக்கும் லட்ச லட்சமா செலவு பண்ண பணம் எவன் குடுப்பான்.
வாழ்க இந்தியா! வளர்க சுதந்திரம்! அரசியல் புரிவோரின் அளவு கடந்த சுதந்திரம்!

No comments: