Tuesday, June 2, 2009

செக்யுலர் - மிகப்பெரிய பொய்

இந்திய அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும் கடந்த ஐம்பத்து இரண்டு வருடங்களில் மிகச்சரியாகப் பணியாற்றி இருக்கிறார்கள். இந்திய மக்களுக்கு இந்தியன் என்ற உணர்வு முழுவதுமாக வராமல் கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள். இன்று நாம் இந்தியர்கள், மதத்தாலும், இனத்தாலும், மொழியாலும் பிரிக்கப்பட்டு, நாம் அனைவரும் இந்தியர்கள் என்கின்றன மிகவும் தேவையான உணர்வு இன்றி, ஒருவரிடம் ஒருவர் விரோதப்போக்கு கொண்டு திரிகிறோம்.
அது மட்டுமன்றி, தேசப் பற்று என்பது அறவே இல்லாமல், வெளி நாடுகளில் செய்யத்துணியாத செயல்களை, நமது அன்னை திரு நாட்டில் தயங்காமல் செய்கிறோம். சாதாரண இந்திய குடி மகன், இன்று லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையோ, அல்லது அரசியல் வாதியையோ வெறுத்து ஒதுக்குவதில்லை. அவர்களிடம் அடிபணிந்து, கால்கள் பற்றி, தன் காரியங்களை சாதிக்கத் துணிந்து விட்டான். தன் மானம் என்ற பெரும் பொக்கிஷத்தை இழந்து, தன் லாபம் தேட இறங்கிவிட்டான். அரசியல்வாதி வென்று விட்டான். .......தொடரும்

No comments: