Monday, August 31, 2009

இந்தியாவின் சிறைக்கைதிகள்


அப்பா: ஜெயில்ல யார்லாம் இருப்பாங்க அப்பா?

தாத்தா: அதிகம் இருக்கறது நம்ம நாட்டு சுதந்திரத்துக்காக போராடரவ்ங்க. சில குற்றவாளிகளும் இருப்பாங்க, திருட்டு, பிக் பாக்கெட் அந்த மாதிரி குற்றங்களுக்காக.

நான்: ஜெயில்ல யார்லாம் இருப்பாங்க அப்பா?

அப்பா: குற்றம் செய்து பிடி பட்டவர்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு இது மாதிரி பற்பல குற்றங்கள்.

என் மகன்: ஜெயில்ல யார்லாம் இருப்பாங்க அப்பா?

நான்: முன்னாள் போலீஸ் உயர் அதிகாரிகள், பெரிய பெரிய கம்பெனி உயர் அதிகாரிகள், பெரிய பெரிய டாக்டர்கள், வக்கீல்கள், சார்டெட் அக்கௌண்டண்டுகள், ஆசிரியர்கள், பிரின்சிபால், முன்னாள் மந்திரிகள், அவங்களோட மகன்கள். சுருக்கமா சொல்லணும்னா, இப்ப இருக்கற ஜெயில்ல, அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரிலேருந்து அசெம்ப்ளி, பார்லிமென்ட் வர எதுவேணும்னாலும் நடத்தலாம்.

No comments: