Wednesday, September 12, 2012

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
                       கண்டதோர் வையை பொருனைநதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
                        மேனி செழித்த தமிழ்நாடு

இது பாரதியார் பாடிய பாடல்.

இன்றைய நிலை:

காவிரி ஆற்றைநாம் கூர்ந்து பார்த்தால் -  தலை
குனிந்து  நாளும்   அழுதிடுவோம்.

மரம் கொடிகள்இரு கரையிலும் ஆடும் - நிலை
மாறிநாம் காண்பது  மண்ணேற்றும்  ஊர்திகள்.

தண்ணிதிருட நாமமைதி காத்தோம் - கொலை
வெறியுடன் கள்வற்பலர்   கூடி சேர்ந்தனர்.

தாயின்  வயிறுபிளந்து அள்ளினர் மணல் - சாலை
வழியெங்கும்  வாகனங்களின் நச்சுப்புகை.

நெஞ்சம் பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மாந்தரை நினைந்துவிட்டால் - என எண்ணி

எதையும் நினைக்காமலே கள்வரோடு கள்வராக கலந்துவிட்டோம் நாம்.
நம்ம்க்கென்ன அருகதை கள்வர்களைக் குறை சொல்ல.




 

No comments: