Friday, September 21, 2012

Enge Pillaiyaar?

கிணத்தில், குளத்தில், கடலில் பிள்ளையார் 

கணபதி பப்பா  மோரியாஎன பாட்டிசைப்போம்  - நம் 

காதுகளைப் பற்றி  கரணம் போடுவோம் 

கஜானனம் என்றுநாம் துதித்திடுவோம்  - தினம் 

கணேசன் கால்களைப் பணிந்து வேண்டிடுவோம் 

பூசைதினங்கள் முடிந்ததும் புறப்படுவோம் - ஆம் 

கிணத்தை, குளத்தை, கடலை நோக்கி 

விட்டெறிந்து மகிழ்வுடன்வீடு திரும்புவோம் - பாவம் 

விரைவாக அள்ளப்படுவார் விநாயகர் 

வெளிறிய உடைசலாக வண்டிகள்கொண்டு - நஷ்டம் 

உனக்கென்ன  பக்தனேபாடு கணபதிபப்பா  மோரியாஎன்று!








No comments: