Tuesday, October 20, 2009

முற்போக்கு சிந்தனை - வருடம் 2013

உங்க பையன் என்ன படிக்கிறான்?


எம்.. கருணாநிதியின் சிந்தனைகள். பிச்சு உதர்றான். ஒரு வருஷமா 'பெண் குலத்தைப் பத்தி அவரோட சிந்தனைகள், செயல்கள்' ஜெயலலிதா ஆட்சியில் நள்ளிரவில் கைதானபோது அவருடைய சிந்தனைகளும் செயல்களும்', அதற்கும் மேலாக 'இலங்கைத்தமிழர்களுக்கு கலைஞர் ஆற்றிய தொண்டுகள்' அப்படின்னு பல விதமா தீவிர ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கான். எம்.ஏ. முது கலைப் பட்டத்தோட பி.ஹெச்.டி ஏ அவனுக்கு கெடச்சாலும் கெடச்சுடும்.


அருமை! அருமை! முக்கியமா அவன் எடுத்துக்கிட்ட தலைப்புகள் - உண்மையா சொல்றேன் உங்க பையன் அசத்திட்டான்.


அது மட்டுமா, அவரோட கடமை உணர்ச்சியப்பத்தி எழுதும்போது, அருமையான புகைப்படங்களைப் போட்டு அசத்திட்டான். முக்கியமா சொல்லணும்னா, ஏ.சி. பெட்டிகள் சூழ, மனைவிகள், மக்கட் செல்வங்கள் சூழ மெத்தையில் படுத்து சில மணி நேரங்கள் இலங்கைத்த் தமிழர்களுக்காக உண்ணா விரதம் இருந்தாரே - அது அவரது கடமை உணர்ச்சிக்குச் சான்று.



சட்டமன்றத்தில் எதிர்கட்சித்தலைவி ஜெயலலிதா வுக்கு நடந்த நிகழ்ச்சி கலைஞரோட உடன்பிறப்புகளின் கண்ணியத்த எவ்வளவு தெளிவா காட்டிச்சு. கட்டுப்பாடு, ஒரே ஒரு உதாரணம் போதும். சட்டக்கல்லூரி வாசல்ல கொலை வெறிக்காட்சி அவர் ஆட்சியில நடந்த பொது, அவரோட போலீசுங்க, ஒரு அடி முன்னால வைக்காம, உணர்ச்சி வசப்படாம, எவ்வளவு கட்டுப்போடோட இருந்தாங்க.


இதெல்லாம் பாராட்டாம சில பேரு வாய்க்கு வந்த படி பேசறாங்க, எழுதறாங்க. இதுக்கெல்லாம், சாட்டையடி கொடுப்பான், என் மகன் அவோனோட ஆராய்ச்சில.




No comments: