Wednesday, October 14, 2009

பார்க்க வேண்டியதைப் பார்ப்பார்கள், கேட்க வேண்டியதை கேட்ப்பார்கள்

அண்ணே! அண்ணே! இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விடிவு காலம் பொறந்திடுச்சு அண்ணே!



எத்த வச்சு இப்படி சொல்ற நீ?



ஆமாண்ணே, தமிழகத்துக்காகவும், தமிழனுக்காகவுமே தங்களையெல்லாம் முழுமையா அர்ப்பணிச்சிக்கிட்ட தலைவருங்க எல்லாம், இலங்கை போயிருக்காங்க இல்ல.


சமயத்துல நீ ரொம்ப தமாசா பேசுறடா!


நான் சொன்னதில என்னண்ணே தப்பு?


நீ சொன்னது ஒண்ணும் தப்புன்னு சொல்ல முடியாது. இலங்கைல ஒரு இலக்கோட, விடுதலைப்புலிகள ஒழிச்சுக்க் கட்டறோம் என்கிற போர்வையில தமிழனத்த வேரோடு அறுக்க ராஜபக்சேயும் அவரோட ராணுவமும் முன்னாடி நின்னு செயல் பட்டப்போ நம்ம அரசியல் தலைவர்கள் எல்லாம் என்ன செய்திக்கிட்டு இருந்தாங்க?


என்னண்ணே செய்துகிட்டிருந்தாங்க?


பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள வேண்டா வெறுப்பா பல மணி நேரம், மனித சங்கிப் போராட்டம் என்ற பெயரில், வேகாத வெயிலிலும், மழையிலும் நிறுத்தி, ஏ. சி. வாகனங்களில் பவனி வந்து ஊக்கப்படுத்திக்கிட்டிருந்தாங்க. காலையில நாஸ்தாக்கும், மத்தியானம் சாப்பாட்டுக்கும் நடுவில கட்டில் மெத்தையில் படுத்து, ஏர் கண்டிஷனர்களுக்கு நடுவே உண்ணா விரதம் இருந்தாங்க. இதுக்கு நடுவுல எலெக்ஷன் வரவும், மாமனுக்கும் மச்சானுக்கும் சீட்டு புடிக்கரதுலையும், சீட்டு புடிச்சதும், வோட்டை வாங்கரதுலையும், அதாவது ஓட்டு வாங்கரதுலையும் பிசியா இருந்தாங்க. ஏன்னா, இலங்கைத் தமிழன் எங்க போறான், அப்புறம் பாத்துக்கலாம்னு விட்டுட்டாங்க.



அது போகட்டும்ணே! இப்பாவாவது முயற்சி எடுக்கறாங்க இல்ல? அத்தப் பாராட்டாம பழசையே பெசறீங்கலேண்ணே!



பாராட்டலாம்டா! எண்ணமும், பேச்சும், செயலும் ஒண்ணா இருக்கறது மட்டுமில்லாம எப்பவுமே ஒண்ணா இருந்தா பாராட்டலாம்டா! நம்ம இந்திய, தமிழ் அரசியல்வாதிங்ககிட்ட இந்த நம்பிக்க எனக்கு இல்ல அத்தோட வுடு!



நல்லதே நடக்காதுங்கரீங்களா?



அப்படி எப்படி சொல்ல முடியும். நல்லது யாருக்குன்னு கேளு சொல்றேன்!



யாருக்குன்னு என்னண்ணே கேள்வி? இலங்கைத் தமிழர்களுக்கு தான்.



ராஜபக்சே என்ன கேனன்ன்னு நெனைச்சியா? காட்ட வேண்டியதக் காட்டுவான். அதுகள மட்டுமே காட்டுவான். ஒரிஜினல் பிளானுக்கும், ஆக்ச்சுவலுக்கும் வித்தியாசம் போனதுமே ஆரம்பிச்சிடுச்சு. பேச வேண்டியத மட்டுமே பேசுவான், பேச விடுவான். குடுக்கறத வாங்கிக்கிட்டு திரும்ப வருவாங்க. அதாவது அவுங்க குடுக்கற நியூச வாங்கிக்கிட்டு வருவாங்கன்னு சொன்னேன்.







No comments: